Jump to content

இலங்கையில் இயக்குனர் களஞ்சியம்.


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kalancya1.jpg

Kalancya3.jpg

https://jaffnazone.com/news/14857

ஜாப்னாஜோன் புளுகினமா..?

Link to comment
Share on other sites

இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதல்?; இராணுவம் மறுப்பு

இந்திய இயக்குநர் மு.களஞ்சியம், இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக  முன்வைக்கப்படும் குற்றச்சட்டை இராணுவம் மறுத்துள்ளது.

இலங்கை இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இயக்குநர் மு.களஞ்சியம் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் தமிழ்மிரர் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

கடந்த 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின  நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மு.களஞ்சியம் இலங்கைக்கு வந்துவிட்டு  நாடு திரும்பும் வழியில் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இயககநர-ம-களஞசயம-மத-தககதல-இரணவம-மறபப/175-242324

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு. களஞ்சியமும் விகடன் வெளியிட்ட செய்தியும்

இயக்குனரும், அரசியல் ஈடுபாட்டாளருமான மு. களஞ்சியம் கடந்த நவம்பர் 27 ம் நாள் - மாவீரர் நாளை அண்டிய நாட்களில் தமிழர் தாயகத்தில் இருந்தார்.
பயணமொன்றை மேற்கொண்டு வந்தவர், அதிலும் ஆட்சி மாற்றம் நடந்த சூழலில் வந்த ஒருவர் + நாம் தமிழர் கட்சியோடு தேர்தல் காலங்களில் இணைந்து பயணிப்பவர் என்கிற அடிப்படையிலும், அவரது புதிய படம் தொடர்பான விடயங்களை பெறும் நோக்கிலும் ஒரு நேர்காணலில் சந்தித்தேன்.

அவரை இயக்குனராக கொண்டு ஆரம்பித்த கேள்வி பதில்களில் தொல் திருமாவளவன் தொடர்பாகவும், சீமான் தொடர்பாகவும் அவராகவே தொட்டுச்செல்ல குறித்த நேர்காணல் அரசியல் பக்கம் திரும்பியது.

நிற்க.
நேர்காணல் நவம்பர் 29ம் நாள் பதிவு செய்யப்பட்டது.

அரசியல் களத்தில், ராஜீவ் காந்தி மரணம் பற்றிய சீமானின் கருத்து தொடர்பான நிலைப்பாட்டில் தொடங்கிய தீவிர அரசியல் கேள்விகள், யாழ்ப்பாணத்துக்கான வருகை பற்றியதாக திரும்பியது.

இந்த கேள்விக்கு பதில் தந்த மு. களஞ்சியம்,

தான் இலங்கைக்கு வந்திருப்பது, "சுற்றுலா வீசாவில்" என்றும், நாட்டை சுற்றிப்பார்க்க வந்துள்ளேன் என்றும், குறிப்பாக sightseeing என்ற சொல்லை 2 தடவைகள் பயன்படுத்தியும் சொன்னார்.
யுத்தம் நடந்து 10 வருடத்தின் பின்னர் இந்த மண் எப்படியிருக்கிறது என்பதை "பார்க்கவே" வந்ததாக சொன்னார்.

நிற்க. விகடன் செய்தியில் பின்வருமாறு,
//மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காகக் கடந்த மாதம் 27-ம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றிருக்கிறார் தமிழர்நலன் பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம். இவ்விழாவை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் இப்படியொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.///

சுற்றிப்பார்க்கவே வந்திருப்பதாகவும், சந்திப்புகள் எதையும் திட்டமிடவில்லை எனவும் நேர்காணலில் குறிப்பிட்டவர், சில இயக்கத்தவரையும் நண்பர்களையும் சந்தித்தாக சொன்னார். தவிர விகடன் சொன்னது போல, பல்கலை மாணவர் அழைப்பிலோ, அவர்களின் நிகழ்வை மையமாக கொண்டோ அவர் வந்ததாக சொல்லவில்லை.

பல்கலைக்கு சென்றதாக சொன்னவர், " தமிழர்களின் பெருமைக்குரிய ஒரு பல்கலைகழகத்துக்கு வந்தேன், சுற்றிப்பார்த்தேன் என இருக்க வேண்டும்" என்பதற்காகவே அங்கு சென்றேன் என்றார்.

தவிர, பல்கலை நிகழ்வில் கலந்துகொள்ளாமல், கோப்பாய் நிகழ்வை தான் இவர் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்துக்கான பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் சொன்ன அவர், இங்கு வருவது தொடர்பான அச்ச நிலை தமக்கு இந்தியாவில் சொல்லப்பட்டதாகவும், ஆபத்தான சூழல் இருப்பதாகவும் தாம் அறிந்ததாகவும் என்ற பொருள்பட சொன்னவரிடம்,

இங்கு வந்த பின்னர் அந்த அச்சநிலை எப்படியிருக்கிறது என கேட்டபோது,

நிற்க. நேர்காணல் எடுக்கப்பட்டது நவம்பர் 29.

"அச்சநிலை இருக்கிறது, ஏன் இப்ப வந்தனீங்க எண்டு காண்றவை கேக்கினம், பழைய ஆட்சி காலத்தில வந்திருக்கலாமே என எல்லாரும் சொன்னார்கள்" என்றவர் நேரடி விசாரிப்புகள், மிரட்டல்கள் நடந்ததாக ஒரு வார்த்தையேனும் சொல்லவில்லை.

இப்போது, விகடன் செய்தி

//மாவீரர் நாள் நிகழ்வுக்காக ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உரையை நிகழ்த்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், இலங்கையில் நடத்தினால் என்ன என்று நினைத்தேன். அதற்கேற்ப, இலங்கையில் உள்ள இளைஞர்கள் சிலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு அறைக்கு வந்தேன். அப்போது இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, `நீங்கள் யார்.. எங்கிருந்து வருகிறீர்கள். இங்கு உங்களுக்கு என்ன வேலை?' என மிரட்டும் தொனியில் கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தேன்.////

இந்த விகடன் செய்தியில் சொன்ன 27ம் திகதி விடயத்தை 29ம் திகதி நேர்காணலில் சொல்லவேயில்லை. தவிர மிகச்சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.

இடையில், "இலங்கையின் புதிய அதிபர் கௌரவ மதிப்புக்குரிய கோட்டபாய ராஜபக்ச அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் தனக்கு வாக்களிக்காத தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் தானே அதிபர் என சொல்லியுள்ளார்" என்றார் மு. களஞ்சியம்.

அப்போது, கோட்டபாய ராஜபக்ச இந்தியாவில் நின்ற நிலையில் " உங்கள் அமைப்பு சார்ந்து முன்னெடுக்கப்பட்ட விடயங்கள்" பற்றி கேட்ட கேள்விக்கு பதில்களை வழங்கியவரிடம்,

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக, யாழ் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினீர்களா? என கேட்டபோது, இல்லை என்றும், சுற்றிப்பார்க்க வந்தவர் என்பதையும், திரைப்பட விடயமாக தமிழகம் செல்லவேண்டும் என்பதையும் பதிலாக சொன்னார்.

இப்படியாக அந்த நேர்காணல் நிறைவுக்கு வந்தது.

மிக சாதாரணமாக சினிமா விடயங்கள் உரையாடியவர், தற்போது அவர் சொல்லும் 27, நவம்பரில் நடந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் 29, நவம்பரில் எதுவும் சொல்லாதவர், சுற்றிப்பார்க்க வந்தேன் என்றும், யுத்தம் நடந்த இடத்தை sightseeing செய்ய வந்தேன் என சொல்பவரும், தமிழகம் சென்ற பின்னர் விகடன் ஊடாக வெளியிட்டுள்ள செய்தி நகை முரணாகவே இருக்கிறது.

பல்கலைகழகம் சார்ந்த விடயங்களும், மாவீரர் நாள் பற்றிய விடயங்களும் உலகிற்கு உடனுக்குடன் வெளிவந்த நிலையில், இவர் மறிக்கப்பட்டதும், விசாரிக்கப்பட்டதும் பற்றிய நிகழ்வுகள் வெளித்தெரியாமல் போவதென்பது ஆச்சரியமானதாக தெரிகிறது.

"கதை திரைக்கதை வசனம்" என்ற படம் நல்ல படம்.

 

 

https://www.youtube.com/watch?v=yoC7NCg8o2w&feature=youtu.be&fbclid=IwAR3I5jcrwufC1TbDTU2Ftu-vn_seU_y9AOZd-61LVAqhbNTa5PjkwnM7zmM&app=desktop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரி சூப்பர் ஆனால் படம் சொதப்பிடிச்சி😎 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.