Jump to content

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்


ampanai

Recommended Posts

நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது.  இதில் சிக்கல் என்னவென்றால், இப்பார்வை அரைகுறையானது மட்டுமல்ல, பிரபாகரனின் முக்கியமான தலைமைப் பண்புகளை இப்பார்வை கண்டுகொள்வதில்லை. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், நமக்கு  எது போன்ற தலைமை எதிர்காலத்தில் தேவை என்பதன் பார்வையும் பிழையாகிறது. அதனால் நாம் தவறான தலைமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம்  அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையே, நாம் எதிர்காலத்தில் எது போன்ற தலைமைகளை உருவாக்கவேண்டும் என்பதையும் சிறந்த தலைமைகளை முதலிலேயே அடையாளம் காணவும் உதவும். இதை விளக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாறு என்பது  மிகப்பெரியது. அதை நாம் கொண்டிருக்கும் தத்துவங்களைக்  கொண்டே பார்த்து புரிந்து கொள்கிறோம்.  நாம் கற்றுக்கொள்ளும் தத்துவங்கள் விரிவடையும் பொழுது, வரலாற்றைப் பற்றிய நமது பார்வையும் மாறுகிறது. அதுபோன்ற மாற்றமே அண்மையில் அமெரிக்க இராணுவத்தளபதி மெக்கிரிசுட்டல் எழுதிய “Team of  Teams” என்ற நூலைப் படிக்கும்பொழுது நிகழ்ந்தது [1]. பிரபாகரனின் தலைமைத்துவ பண்புகளையும் புலிகளின் போர்முறையையும் புரிந்துகொள்ள இது முக்கியமான தத்துவம் என்பதால், இதை முதலில் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

 

அமெரிக்க – அல்கொய்தாப் போர்:

ஈராக்கில் சாதம் குசைன்   நீக்கப்பட்டபின் அமெரிக்கப் படைகள் அல்கொய்தாப் படைகளை 2004-இல் எதிர்கொண்டது.  பல மடங்கு ஆட்பலமும் ஆயுதபலமும் கொண்ட உலகின் தலைசிறந்த அமெரிக்கப்படைகள், எந்த பெரிய பயிற்சியோ ஆயுத பலமோ  அற்ற அல்கொய்தா குழுவிடம் திணறிக்கொண்டிருந்தது. அல்கொய்தாவின் தாக்குதல்கள் கூடிக்கொண்டே சென்றதே ஒழிய குறையவில்லை. பொதுவாக ஒரு இயக்கத்தின் உயர்நிலை தளபதிகளை  அழித்தால்  இயக்கம் நொறுங்கிவிடும், ஆனால் அல்கொய்தாவிடம் அது எடுபடவில்லை.  இதற்கு ஒரு தீர்வுகாண  அமெரிக்கப்படைகளின் ஈராக் கட்டளைத்தளபத்தி மெக்கிரிசுட்டல், தனது படைகளின் செயல்படும் விதத்தை ஆராய்ந்தார். படைகளுக்கு இடப்படும் உத்திகளிலோ, கட்டளைகளிலோ, ஆயுதங்களிலோ, அல்லது படைவீரர்களின் திறமையிலோ எந்த குறைபாடுகளும் இல்லை. அனைத்தும் சரியாகவே இருந்தது, ஆனாலும் தோற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆழமாக ஆராய்ந்தபின் அவர் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்கப்படைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் சிக்கலே. பல நூற்றாண்டுகளாக பெரிய இராணுவங்கள் தோன்றிய காலத்திலிருந்து, தளபதி ஒரு தாக்குதலை திட்டமிட்டு கட்டளையிடுவார், அதைக் கீழிருந்த படைவீரர்கள் செய்து முடிப்பார்கள். இத்தனை நூற்றாண்டுகளாக வெற்றிகரமாக பின்பற்றப்பட்ட முறை இப்பொழுது வேலை செய்யவில்லை. அதற்கு காரணமாக அவர் கண்டறிந்தது என்னவென்றால், அல்கொய்தா படைகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அக்குழுக்கள் தாமாக திட்டமிட்டு வாய்ப்புள்ள இலக்குகளை வீழ்த்திவிட்டு, அமைதியாகி விடுவார்கள். அடுத்த தாக்குதல் இன்னொரு குழுவால் இன்னொரு இடத்தில் நடக்கும். எது எப்பொழுது நடக்கும், எங்கே நடக்கும், யாரால் நடக்கும் என்று அமெரிக்கப்படைகளுக்கு தெரியாமல் கடும் குழப்பநிலையில் இருந்தார்கள். அமெரிக்கப்படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் முன் அல்கொய்தாப்படைகள் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கும்.

இது எப்படி என்றால் ஒரு உதைபந்தாட்டத்தை  எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு அணியில் உள்ள ஆட்டக்காரர்கள்  மொத்த மைதானத்தையும் கவனிக்கிறார்கள். அவ்வணியில் உள்ள மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள், பந்து எங்கே இருக்கிறது  என்று கவனித்து அதற்குத்தகுந்தபடி தாங்களாகவே எங்கே நகரவேண்டும் என்று நகருகிறார்கள்.  இன்னொரு அணியில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு மொத்த மைதானமும் தெரியாது,  ஒவ்வொரு வீரரும் எங்கே போகவேண்டும் என்ன ஆடவேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளரின் (coach)  நேரடி கட்டளைப்படி நகர்வுகளை மேற்கொள்வார். இவ்வாறு நடந்தால் என்னவாகும்? இரண்டாவது அணி மிக மெதுவாக நகரும், முதல் அணி இரண்டாம் அணி உருவாக்கும் ஓட்டைகளின்  நடுவாக புகுந்து இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறார்கள். இரண்டாம் அணி வீரர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக உடல்வலு மிக்க, சிறந்த ஓடக்கூடிய  வீரர்களாக இருந்தாலும், முழு மைதானமும் தெரியாமல்  பயிற்சியாளர் இடும் கட்டளைக்கு காத்து நிற்பதால் தோற்பார்கள். இரண்டாம் அணி எந்த ஒரு பெரிய பயிற்சி இல்லாவிட்டாலும், திறமை இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவார்கள். இதுதான் அமெரிக்கப்படைகள் தோற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்று மெக்கிறிசுடல் கண்டறிந்தார்.

அமெரிக்கப்படைகள் அல்கொய்தாவை வெல்லவேண்டுமானால், தங்கள் பெருமையை விட்டுவிட்டு அல்கொய்தாவிடம் இருந்து கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வருகிறார். அதன் விளைவாக அமெரிக்கப்படைகளை சிறுசிறு குழுக்களாக, வேகமாக இயங்கி தானாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறார். ஒரு மாதத்திற்கு 18 தாக்குதல்கள் என்று மேற்கொண்டு வந்த அமெரிக்கப்படைகள், மறுசீரமைப்பிற்குப்  பின் மாதத்திற்கு 300 தாக்குதல்களை மேற்கொள்ள  முடிந்ததது. அது மட்டுமின்றி, தாக்குதல்களின் வெற்றி  விகிதமும் கூடியது.  இதன் பின்னரே ஈராக்கில் அல்கொய்தாவை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.  இத்தனைக்கும் அமெரிக்கப்படைகள் பெரிதாக ஆட்பலத்தையோ, ஆயுத பலத்தையோ கூட்டவில்லை.  மறு  சீரமைப்பு மட்டுமே அவர்களின் பலத்தை 17 மடங்கு கூட்டி இருக்கிறது. மெக்கிறிசுடல் தான் கற்றுக்கொண்ட பாடத்தை குழுக்களின் குழு (Team of Teams) என்று நூலாக எழுதியிருக்கிறார் [1]. அதிலிருந்து வரும் கருத்துக்களை அடிப்படையாகக்  கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஏன் இந்த  தீடீர் மாற்றம் என்றால், நவீன தகவல் தொழில்நுட்பம், இணையம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட  பிணைப்புகள் ( fast communication and  interconnectedness)  போன்றவை மாற்றங்களை வெகுவேகமாகக் கொண்டுவருகிறது. இம்மாற்றங்கள் போரில் மட்டுமல்ல, சமூகத்தில் அனைத்து துறைகளிலும் அதிவேக மாற்றங்களைக் அதிக அளவில் கொண்டுவருகின்றன. இம்மாற்றங்களை ஒரு தலைமையால் அனைத்தும் புரிந்து திட்டமிடுவது சாத்தியமற்றது என்றாகிவிடுகிறது. அவர்கள் திட்டமிடுவதற்குள் களநிலவரமே மாறிப்போகும். இதுபோன்ற நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பல குழுக்களின் கூட்டாக உள்ள குழுவே வெற்றி பெரும்.

 

குழுக்களின் குழு தத்துவம்:

மெக்கிரிசுட்டல் தனது அனுபவத்தில் குழுக்களின் குழுவை எவ்வாறு உருவாக்குவது என்று முறை வகுத்திருக்கிறார். அதை விளக்கமாக பார்ப்போம்:

  1. ஒரு குழு என்பது நெருக்கமான நட்பினால் நம்பிக்கையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது உருவாக்கிய நட்புகளை எண்ணிப் பாருங்கள். அதுபோன்ற இறுக்கமான குழுக்களை உருவாக்கவேண்டும். ஒரு குழுவில் ஐந்திலிருந்து நூறுபேர் வரை இருக்கலாம். அதற்குமேல் இருந்தால்  நெருக்கமான குழுவை உருவாக்க முடியாது.  நம்பிக்கை என்பது உடனடியாக ஏற்படுவது அல்ல. தொடர்ந்து  ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலமும், நேரடித் தொடர்புகள் மூலமும் மெதுவாக ஏற்படுவது.
  1. இவ்வாறு உருவாக்கிய குழுக்களை எல்லாம் இணைத்து ஒரு குழுக்களின் குழுவை (Team of Teams) உருவாக்கவேண்டும். எவ்வாறு ஒரு குழுவில் உள்ளவர்கள் நெருக்கமாக இருக்கிறார்களோ, அதுபோல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நெருக்கமாக இருக்கவேண்டும். இதற்கு குழுக்கள் இருப்பதிலேயே சிறந்த சில உறுப்பினர்களை மற்ற குழுக்களுக்கு அனுப்பி அவ்வுறுப்பினர்கள் அக்குழுவில் துணைபுரிந்து நம்பிக்கை வளர்க்கவேண்டும்.
  1. குழுக்கள் தனித்து அவர்களின் கடமைக்குத் தேவையானது மட்டும் போதும் என்று குறுகிய பார்வை கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து குழுக்களுக்கும் களத்தின் மொத்த நிலவரம் தெரியவேண்டும். இது அனைவரையும் இணைத்து ஒரே பொது  உணர்வை (shared consciousness) அளிக்கும், பொதுவான இலக்கை (common purpose) நோக்கி செயல்படுத்த வைக்கும்.
  1. ஒவ்வொரு குழுவிற்கும் முடிவெடுத்து செயல்படும் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் (Empowered execution). அவர்கள் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு குழுவும் எங்கெங்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூர்ந்து  கவனிக்கவேண்டும்.   வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். மற்ற குழுக்களின் உதவி தேவைப்படும் எனில் அவர்களை நாடி உதவி பெறவேண்டும். மேலும் மற்ற குழுக்களின் செயல்பாடுகளையும் கவனிக்கவேண்டும். உங்களால் உதவ முடிந்தால் உதவவேண்டும்.

குழுக்களுக்கு அதிகாரம் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல. செயல்பாட்டுக்கு சில பொதுவான விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக, “நமக்கு நன்மை கொடுக்கும், ஆனால் சட்டத்தை மீறாத எந்த காரியங்களையும் செய்யலாம்” என்று பொதுவான விதிமுறை வகுக்கலாம்.

இங்கே முடிவெடுக்கும் அதிகாரம் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், தலைமைக்கு என்ன வேலை,  தலைமை தேவையா இல்லையா என்ற கேள்விகள் எழும். இங்கே தலைமையின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையப்போவதில்லை. தலைமை முன்பைவிட மிகமுக்கியம், ஆனால் அதன் கடமைகள் வேறு:

  1. தலைமையின் வேலை என்பது ஒரு தோட்டக்காரர் போன்றது. தோட்டக்காரர் எதையும் உற்பத்தி செய்வதில்லை, செடிகள்தான் உற்பத்தி செய்கின்றன. அவரின் வேலை எல்லாம்  நிலத்தை பராமரித்தல், செடிகளுக்கு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் போன்ற வேலைகள்தான். மொத்தத்தில் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்க எது மாதிரியான சூழலை உருவாக்கவேண்டுமோ, அதை உருவாக்குவதுதான் அவர் வேலை.

“It requires a gardener, a leader displaying the willingness to accept great responsibility remains central to making an ecosystem viable.” [1]

  1. ஒரு இயக்கத்தில் அந்த சூழல் என்பது ஒத்துழைப்பான வெற்றிக்குத்தேவையான ஒரு  பண்பாட்டை  உருவாக்குவதுதான்.  தலைவர் காய்களை நகர்த்துவதை  விட்டுவிட்டு சூழலை வடிவமைக்கவேண்டும்

“The role of the senior leader is no longer that of controlling puppet master, but rather that of an empathetic crafter of culture… Leaders need to shift focus from moving pieces on the board to shaping the ecosystem.” [1]

  1. குழுக்கள் முடிவெடுத்து செயல்படும்பொழுது, நடுவில் குறுக்கிடக்கூடாது. அவர்களை நம்பவேண்டும். களத்தில் நிற்கும் அவர்களுக்குத்தான் அங்கெ இருக்கும் நிலவரம் தெரியும், அவர்களால்தான் சிறந்த முடிவெடுக்க முடியும் என்று ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்.
  1. தொடர்ந்து அமைப்பை கண்காணித்து களைகளை எடுத்து அமைப்பை சீர் செய்து கொண்டே இருக்கவேண்டும். அதே நேரம் .தலைமை திறந்த வெளியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் அவரை கண்காணிக்க அனுமதிக்கவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படவேண்டும்.
  1. ஒரு வலைப்பின்னலை தோற்கடிக்க இன்னொரு வலைப்பின்னலால் மட்டுமே முடியும் என்றுணர்ந்து செயல்படவேண்டும். குழுக்களிடையே தேவையான புதிய இணைப்புகளை உருவாக்கவேண்டும், தேவையற்ற இணைப்புகளை நீக்கவேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப அமைப்பின் வலைப்பின்னலை (Shape the network) தொடர்ந்து வடிவமைக்கவேண்டும்.

“It takes a network to defeat a network.” [1]

  1. தகவல்களை மறைத்து வைக்காமல், அமைப்பில் உள்ள அனைவரும் பார்க்கும்படி பொதுவில் வைக்கவேண்டும். அனைத்து குழுக்களையும் அவ்வாறு செய்யும்படி வழிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தால் தகவல் கசிந்துவிடும் என்று பயப்படக்கூடாது. வேகமாக மாறும் உலகில் கசியும் தகவல்களால்  ஏற்படும் பாதிப்பை விட, பகிரப்பட்ட தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று உணரவேண்டும்.  அப்பொழுதுதான் அனைவருக்கும் களத்தின்  முழுநிலவரம் தெரியும். அதன்படி சிறந்த முடிவுகளை எட்ட முடியும் என்கிறார் மெக்கிரிசுட்டல். இது அமைப்புகளையும்  சூழலையும் பொறுத்து மாறுபடும். தகவல் பரவலால் ஏற்படும் நன்மைகளையும், கசிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
  1. தலைவர்களின் பேச்சும் செயலும் ஒத்திருக்கவேண்டும். பேச்சொன்று செயலொன்று என்றிருந்தால், குழப்பம் ஏற்படும். உறுப்பினர்கள் பொதுவாக பேச்சைவிட தலைவரின் செயலிலிருந்தே அதிகம் புரிந்து கொள்வார்கள்.
  1. அனைவருக்கும் ஒட்டுமொத்த களநிலவரம் தெரிய வழி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், அதிகாரம் கொண்ட குழுக்களால் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு  பாரிய பின்னடைவுகள் ஏற்படும். ஒட்டுமொத்த களநிலவரமும், பரவலாக்கப்பட்ட  அதிகாரமும் இணைந்து செயல்படும்பொழுதே வெற்றி கிட்டும்.

இவ்வாறு செயல்பாடு ஓர் இயக்கம் பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்கும்:

  1. இயக்கம் மிகவேகமாக செயல்படும். அதன் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
  1. இயக்கம் ஓர் எந்திரம் போன்று செயல்படாது, மாறாக ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். . குறிக்கோளை விடாது துரத்தும்.

“We had become not a well oiled machine, but adaptable complex organism; constantly twisting, turning, and learning to overwhelm our protean adversary.” [1]

  1. தலைமையை அழித்தால் இயக்கம் அழியாது, வேறு தலைமையுடன் அதே உத்வேகத்துடன் மீள் எழுந்து செயல்படும். இயக்கத்தை அழிப்பது மிகக் கடினமானது.
  1. அதிகாரம் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவதால், அவர்கள் அதிக பொறுப்புணர்வுடன் வீரியமாக கடமையாற்றுவார்கள். அவ்வளவு எளிதில் சோர்வடைய மாட்டார்கள்.

diagram_team

படம்: வேகமான தகவல் தொடர்பாடல்களாலும், உலகம்  ஒன்றோடொன்று  அதிகமாக  இணைக்கப்பட்டதாலும், மாற்றங்கள் வெகுவேகமாக நிகழ்ந்து உலகின் சிக்கல் தன்மை கூடுகிறது. இவ்வாறான உலகில் ஒரு தலைமையால் முழுதும் புரிந்து திட்டமிட்டு செயல்பட முடியாது. இதற்குத்தீர்வு நம்பிக்கையாலும், பொதுவான குறிக்கோளாலும் இணைக்கப்பட்ட குழுக்களின் குழுவை உருவாக்கவேண்டும். அவை உலகைப்பற்றிய ஒரே பார்வை கொண்டு பகிர்ந்த ஒரே உணர்வுடன்  தானாக முடிவெடுத்து செயல்படும். இங்கு தலைமையின் வேலை கட்டளை இடுவதல்ல, மாறாக களைபறித்தல் தான். ஒரு நல்ல தோட்டக்காரர் எவ்வாறு செடிகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி  விளைச்சல்களை உருவாக்குகிறாரோ,, அதுபோல குழுக்கள் மேற்கூறியபடி செயல்படத் தேவையான சூழலை பண்பாட்டை  உருவாக்குவதுதான் தலைமையின் கடமை. இதுபோன்ற குழு ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். குறிக்கோளை விடாது துரத்தும்.

நாம் ‘குழுக்களின் குழுவின் செயல்முறையை நன்றாகப் புரிந்துகொள்ள மற்றவர்கள் வரலாற்றைத் தேடவேண்டியதில்லை. நமது ஈழப்போர் வரலாற்றிலிருந்தே தெரிந்து கொள்ளாலாம்.  குறிப்பாக புலிகளால் எவ்வாறு பலம் வாய்ந்த படைகளைக் கட்டி எழுப்ப முடிந்தது, எவ்வாறு அவர்களைவிட பன்மடங்கு பலம் வாய்ந்த இந்திய இலங்கைப் படைகளை பலமுறை தோற்கடிக்க முடிந்தது என்பதை அலசுவதன் மூலம் நன்றாக புரிந்து கொள்ளலாம். இதற்கு மையப்புள்ளியாக இருப்பது பிரபாகரன் அவர்களின் தலைமை.

புலிகளின் குழுக்களின் குழு:

  1. ஒரு குழுக்களின் குழுவில் தலைமையின் முதற் கடமை என்பது அமைப்பு செழிப்பதற்கான பண்பாட்டு சூழலை உருவாக்குவதுதான், சதுரங்க ஆட்டத்தைப்போன்று  காய்களை  நகர்த்துவது அதற்குப்பின்புதான்  வரும். பிரபாகரன் அவர்களின் செயல்பாடுகளை  கூர்ந்து கவனித்தால் இத்தன்மை விளங்கும். அவர்தான் இயக்கத்திற்கு அடிப்படையான புலிப்பண்பாட்டை உருவாக்கினார் . ( இது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [2] ). நெருக்கமான குழுக்களை கட்டி அமைத்தார். பல படையணிகளை உருவாக்கி இணைத்தார். வலைப்பின்னலை உலக அளவில் பெரிதாக்கினார். தொடர்ந்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காத்தார். அவரின் பேச்சும் செயலும் எப்பொழுதும்  ஒத்திருக்கும், முரண்கள் இருக்காது. ஈழத்திலிருந்து பின்வாங்கினால் தன்னை சுட்டு விடுங்கள் என்று கூறியது, தனது குடும்பத்தை இறுதிவரை களத்திலேயே வைத்திருந்தது, எளிமையாக வாழ்ந்தது, முன்னின்று போர் புரிந்தது  என்று மற்ற வீரர்களுக்கு முன்னதாரணமாக திகழ்ந்தார். அவர் உருவாக்கிய சூழலில் நூற்றக்கணக்கான திறமையான தளபதிகளும், ஆயிரக்கணக்கான ஓர்மை கொண்ட புலிவீரர்களும் உருவாகினர். புலிப்படை என்பது பிரபாகரன் என்ற தோட்டக்காரர் உருவாக்கிய விளைச்சல், ஒர்  அதியுச்ச திறமை கொண்ட  குழுக்களின் குழு.  அவர்களைப்போன்ற சிறந்த உறுதியான குழுக்களை வேறு யாரும்  இதுவரை உருவாக்கி இருக்கிறார்களா என்பது சந்தேகமே.  இதுதான் இருப்பதிலேயே பிரபாகரன் அவர்களின் முக்கியமான தலைமைச் செயல்பாடு. போர் உத்திகள் வகுப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதை அவரின் படைத்தளபதிகளே பெரும்பாலும் பார்த்துக்கொள்வார்கள்.
  1. காலப்போக்கில் எத்தனையோ மிச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கம் முன்னேறிச்சென்றது. புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், நொறுங்கும் (fragile) இயக்கம் அல்ல. பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயல்படுவார்கள்.  தலைவர் குறிக்கோளை மாற்றவேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கை துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டுவிடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.  தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்றுவிடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசை மாற்றமுடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரி செய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை இழப்புகளை அதுவே சரி செய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும். இதுதான் 21-ஆம் நூற்றாண்டுக்கான அமைப்புகளின் வடிவமைப்பு.

“The future will take the form of organic networks, resilience engineering, controlled flooding, a world without stop signs.” [1]

புலிப்பண்பாடு  நிற்கும்வரை புலிகளை அழிக்க முடியாது,  இழப்புகளை ஈடுகட்டி மீளெழும்பும் . அப்படியென்றால் ஏன் 2009-இல் இயக்கம் நொறுங்கியது என்று கேள்வி எழும். மாறிய உலகச்சூழலினால் போரில் பின்னடைவு ஏற்பட்டபொழுது, இயக்கம் அழியாமல் இருக்கவேண்டுமானால், சிறுசிறு குழுவாக பிரிந்து செயல்படவேண்டும், ஆனால் அதற்கேற்றபடி நிலப்பரப்போ, மக்கள் நிறைந்த நகர்புறமோ கிடையாது. மேலும் எந்த வாய்ப்பும் இன்றி மக்களையும் சேர்த்து சிங்களம்  இனப்படுகொலை செய்தது. முடிவில் புலிகளின் புலிப்பண்பாடு ஈழத்தில் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் புலிகள் மீளெழும்  தன்மையை இழந்தனர்.

புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப்பின்னலால் மட்டுமே உடைக்க  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப்பின்னலே  புலிகளை அழித்தது.

புலிகளுக்கு நேர் மாறானது திராவிட இயக்கங்களின் கட்டமைப்பு. ஒரு தலைமை திட்டமிட்டு அனைத்தும் செய்யப்படும். விளைவு என்னவானது? தலைமைகள் தவறான கைக்கு சென்றன, அல்லது தலைவரின் ஆணையால் குறிக்கோள்கள் திசை திரும்பின. திராவிட இயக்கங்களின் சிக்கல் என்பது “கட்டமைப்பு” சிக்கல். எந்த தலைமை வந்தாலும் “மேலிருந்து கீழாக” கட்டமைக்கப்படும் அமைப்புகள்,  காலப்போக்கில் இப்படித்தான் அது முடியும்.  திராவிடம் அழிவதற்கு எதிரிகள் தேவையில்லை. அவர்களின் தலைமைகளை அக்காரியத்தை சிறப்பாகச் செய்கிறார்கள். மேக்கிரிசுட்டல்  கூறிய எந்த ஒரு தலைமைப் பண்பும் அவர்களிடம் இல்லை. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் வளரவேண்டுமானால்  தலைமைப் பண்புகளை பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும், திராவிடத்திலிருந்து அல்ல. ஆனால் என்னவோ தமிழ்த்தேசிய இயக்கங்கள் திராவிட சாயலிலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.

  1. இந்தியா-புலிகள் இடையேயான போரில், புலி வீரர்களின் எண்ணிக்கை 2000, ஆனால்  இந்தியப்படைகள்  100,000 படைவீரர்களையும் விமானப் படையையும்  கப்பல் படையையும் கொண்டிருந்தது. அப்படி இருந்தும்  இந்தியப்படைகள் இலக்கை எட்ட முடியாமல் பின்வாங்கியது. இது எப்படி நடந்தது? புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கொரில்லா தாக்குதல் நடத்தினார்கள். ஒவ்வொரு குழுவுக்கும்  அவ்வாறான அதிகாரம் இருந்தது. 2000 பேர் 100,000 பேரை எதிர்கொள்ள வேண்டுமானால், தங்களது ஆற்றலை 50 மடங்கு அதிகரிக்கவேண்டும். அதை குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும். மாறாக ஒரு தலைமை மேலிருந்து திட்டமிட்டு மற்றவர்கள் அதைப் பின்பற்றி சாதிக்க முடியாது.
  2. சிங்களப்படை வருடக்கணக்கில் நகர்வுகளை மேற்கொண்டு புலிகளின் இடங்களைப் பிடிக்கும். ஆனால் புலிகள் அவற்றை ஓயாத அலைகள் போன்ற நடவடிக்கைகள்  மூலம் சில வாரங்களில் பிடித்து விடுவர். இது எப்படி சாத்தியமானது?   சிங்களப்படை மேலிருந்து கீழாக இயங்கும் படை. உயர் தளபதி கட்டளை இடுவார், அதை கீழுள்ளவர்கள் நிறைவேற்றுவர். ஒவ்வொரு நகர்வுக்கும் மேலதிகாரியின் உத்தரவுக்கு காத்து நிற்பர். ஆனால் புலிகளின் படைகள் கீழிருந்து மேலாக நெருக்கமான குழுக்களால் கட்டி எழுப்பப்பட்டது. எப்படி ஒரு  கால்பந்தாட்ட அணியில் வீரர்கள் களநிலவரத்தை அறிந்து தாமாக  வேகமாக நகர்வார்களோ, அதுபோல புலிப்படைகள்  நகரும். படை நகர்த்தும் தளபதிகளுக்கும் பிரபாகரனுக்கும் நெருக்கமான நட்பும் நம்பிக்கையும், ஒருவருக்கு  இன்னொருவரைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பதாலும், கள நிலவரத்திற்கேற்றபடி எவ்வாறு நகரவேண்டும் என்று அவர்களுக்கு தானாகவே தெரியும். அவர்களுக்குள் மணிக்கணக்கில் பேசி விளங்க வேண்டியதில்லை. ஒருவரின் நகர்வுகளிலிருந்து மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தானாகப் புரிந்துகொள்வார்கள். இதனால் அதிவேகமாக புலிப்படைகள் நகர்ந்தன. சிங்களப்படைகள் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து நின்றதால் மெதுவாக நகர்ந்தனர். அவர்களுக்கு உத்தரவு வரும் முன் புலிகள் களநிலவரத்தையே மாற்றி  பெருங்குழப்பதை உருவாக்குவர். முடிவில் புலிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றனர். எப்படி நெல்சனின் தளபதிகள் ஒவ்வொருவரும் நெல்சனாக செயல்பட்டார்களோ [1,4], அப்படியே புலிகளின் ஒவ்வொரு தளபதியும் பிரபாகரனாக செயல்பட்டார்கள். என்னுடைய ஊகம் என்னவென்றால் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துதான் தளபதிகள் போரின் நடுவில் ஒவ்வொரு அடியும் எடுக்கவேண்டும் என்பதல்ல. களத்தில்  உள்ள தளபதிகளுக்குத்தான் களநிலவரம் நன்கு தெரியும் என்பதால், நகர்வுகளை அவர்களே மேற்கொள்ளும்  அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.  அவ்வாறு இல்லையென்றால் புலிகளால் அவ்வளவு வேகமாக நகர்ந்திருக்க முடியுமா என்பது  சந்தேகமே. ஆனாலும் இது உறுதி செய்யப்படவேண்டும்.

.

  1. புலிகள் போர் உத்திகளில் முன்னோடிகளாக இருந்தாலும், அவர்களின் உண்மையான பலம் அதுவல்ல. அவர்களின் பலம் என்பது புலிப்பண்பாடும், அவர்கள் குழுக்களின்  குழுவாக இறுக்கமான நட்பினாலும் நம்பிக்கையினாலும் கட்டி அமைக்கப்பட்டிருந்தது தான். அவர்களின் கூட்டு பலம் என்பது  தனி உறுப்பினர்களின் பலத்தின் கூட்டலை விட அதிகம் (As a team they were more powerful  than the sum of the parts). இதை மற்ற இயக்கங்களில் காண முடியாது. இது சிக்கலான அமைப்புகளின் (Complex systems) ஒரு தன்மை.  புலிகள் உண்மையிலேயே புரிந்து கொள்வதில் கடினமான சிக்கலான அமைப்பு.

இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் பலமடங்கு வலிமை பெறவேண்டுமானால், புதிய உத்திகளைத் தேடுவதைவிட தங்களது அமைப்புகளை புலிகளைப்போன்று குழுக்களின் குழுவாக  அமைப்பு மாற்றத்தை உருவாக்கவேண்டும்.   இனிமேல் ஒரு நல்ல தலைமையைத் தேடுகிறோம் என்றால், அவர்கள் கட்டளை இடுபவராக இருக்கக்கூடாது. அவர் புலிப்பண்பாட்டை இன்றைய தேவைக்கேற்ப உருவாக்கி, நெருக்கமான நம்பிக்கையினால் இணைக்கப்பட்ட குழுக்களை உருவாக்குகிறாரா என்று பார்க்கவேண்டும். தெளிந்த சிந்தனையும், சிறந்த முன்னதாரணமாகவும், நெறிதவறாதவராகவும்  இருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய  தமிழ்த்தேசிய இயக்கங்கள் குழுக்களின் குழு  முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [4].

  1. புலிகள் பல நெருக்கமான குழுக்களின் குழுவாக இருந்ததால், தேவைக்கேற்ப விரைவில் உருமாறிக்கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தனர். பொதுவாக பெரும்பாலும் பல குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்தினாலும், பெரிய தாக்குதலுக்கு உடனடியாக  பெரும்படையாக உருமாறுவர்.  அதனால் அவர்கள் கொரில்லாப் படைகள் போன்றும் போரிடுவர், மரபுவழிப்படையாகவும் போரிடுவர். தேவைக்கேற்ப உருமாறிக்கொள்வர்.  இவ்வாறு தேவைக்கேற்ப மாறுவது குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும் [1].  அதுபோன்ற அமைப்புகளே  பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தன்மை  மேலிருந்து கீழாக செயல்படும் அமைப்புகளுக்குக் கிடையாது.
  1. பிரபாகரனை சிலர் சர்வாதிகாரி என்று பார்க்கின்றனர். இது தலைவரை ஒரு கட்டளை இடும் அதிகாரியாகப் பார்ப்பதினால் வரும் பிழை. பிரபாகரன் அவர்கள் அதிகாரத்தை தளபதிகளிடம் பகிர்ந்தளித்து குழுக்களின் குழுவாக செயல்பட்டவர். அவரின் முக்கிய வேலை என்பது தோட்டக்காரர் போன்றது, கட்டளை இடுவது அல்ல. புலிகள் அனைவரும் ஒரு குறிக்கோளில் ஒரே உணர்வுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்கள். சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்தான். ஒருவருக்கு என்ன ஆபத்தோ, அதேதான் அனைவருக்கும். இங்கு சர்வாதிகாரம் எங்கிருக்கிறது? சொல்லப்போனால் திராவிட இயக்கங்களுக்குத்தான்  சர்வாதிகாரம்  நன்றாகப் பொருந்தும். தலைவர் தனது சுயநலத்திற்காக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடுவார். குழுக்களின் குழு முறை என்றுமே மேலிருந்து கீழாக இயங்கும் முறையை விட  சிறந்த சனநாயகம். புலிகளின் ஆற்றல் என்பது   குழுக்களின் குழுவில் உள்ளடங்கிய சனநாயகப் பண்புகளிலிருந்தே வருகிறது.  ஒரு இயக்கம் தேர்தலில் போட்டி இடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளை தீர்மானிக்கிறது.

.

  1. குழுக்களின் குழுவில் விரைந்த சோதனைகளும் கற்றலும் நடக்கும், அமைப்பு வெகு வேகமாக வளரும். இதனால்தான் புலிகள் இயக்கம் தோன்றியதிலிருந்து விரைந்து கற்று அசுரவேகத்தில் வளர்ந்தனர். மேலிருந்து கீழாக இயங்கும் அமைப்பில் அனைத்தும் மெதுவாகவே நகரும். கற்றலே இல்லாமல் தேங்கும் ஆபத்தும் ஏற்படும். இன்று திராவிட இயக்கங்கள் அதுபோன்ற தேக்கநிலையிலேயே பல பத்தாண்டுகளாக உள்ளன. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கங்களும் இதுபோன்ற மந்த நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது. அவர்கள் வெகுவேகமாக வளரவேண்டுமானால், தங்களை புலிகளைப் போன்று மறுசீரமைத்து கற்றலுக்கு சோதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
  1. புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டு, இறுக்கமான நம்பிக்கை கொண்டு, ஒரே சிந்தனையுடன் ஓருயிராக புலிப்பண்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட  குழுக்களின் குழு. மெக்கிரிசுட்டல் அவர்கள்  இந்த அமைப்பு முறையை  கற்றது   ஈராக்கின் குழுக்களிடமிருந்து என்று கூறினாலும், ஆழ்ந்து ஆராய்ந்தால் இதை முதன்  முதலில் நடைமுறைப்படுத்தி மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள் புலிகள்தான். மெக்கிரிசுட்டல் இந்த அமைப்பு முறையை புரிந்துகொண்ட காலம் 2004-2006 ஆண்டுகளில் [1]. அப்பொழுதான் குழுக்களின் குழு முறைக்கு எதிர் உத்திகளை வகுத்தார். இந்த பொறிமுறைகள் சிங்களத்திற்கு இறுதி யுத்தத்தில் கற்பிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறோம் [3].

பிரபாகரன் அவர்கள் அதி புத்திகூர்மை கொண்ட தலைவர். போர் உத்திகளில் மட்டுமல்ல, எவ்வாறு சிறந்த அமைப்புகளை உருவாக்குவது என்பதிலும் முன்னோடியாக இருந்தவர். நாம் புலிகளிடமிருந்து   கற்பது என்பது என்றும் முடிவுறாததாகவே இருக்கும். நான் “ஈழப்போரிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்” என்ற தொடரை எழுதி முடித்தபின், ஓரளவு  முக்கியமான அனைத்து உத்திகளையும் கண்டறிந்துவிட்டேன் என்றே நினைத்தேன், ஆனால் இக்கட்டுரையை எழுதும் பொழுதுதான் எவ்வளவு பெரிய ஓட்டை விட்டிருக்கிறேன் என்பது புலப்படுகிறது. பிரபாகரன் அவர்களையும், புலிகளையும், ஈழப்போரையும் என்றுமே யாராலும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது. புதுப்புது தத்துவங்களின் வழியாகப் பார்க்கும்பொழுதே, நமது பார்வை மேலும் விரிவடையும். ஈழப்போர் நமக்கு தொடர்ந்து பாடங்களை கற்பித்துக்கொண்டே இருக்கும்.

சுபார்ட்டாவுக்கும் ஏதென்சுக்கும் இடையே 27 ஆண்டுகள் நடந்த (431-404 BC) பெலோப்பினீசியப் போரை வரலாறாக எழுதிய துசிடிடிசு,   அப்போரை “அனைத்து காலத்திற்குமான பொக்கிசம்”  ( A possession for all time) என்று வர்ணித்தார் [5,6]. விருப்பு வெறுப்பின்றி உள்ளதை உள்ளபடியே, எந்த உணர்வுகளுக்கும் பாரபட்சத்திற்கும் இடமளிக்காமல் போர் வரலாற்றை எழுதினார். அந்நூல் இன்றும்  உலகப் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் படிக்கப்படுகிறது, அதிலிருந்து புதுப்புது பாடங்களை இத்தனை ஆண்டுகள் கழித்தும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு என்பது மீண்டும் மீண்டும் திரும்பும்; அப்படியே இல்லாவிட்டாலும் அது பழமையின் சாயலிலே தோன்றும். அதனால்தான் வரலாற்றைக் கல்லாதவர்கள் மீணடும் அதே தவறை இழைப்பார்கள். ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [7] அவர்கள் ஈழப்போர் என்பது   பெலோப்பினீசியப் போரைப் போன்று பாரிய தத்துவத் தாக்கத்தை உலகில் ஏற்படுத்தும் என்ற பார்வையைக் கொண்டுள்ளார். பெலோப்பினீசியப் போர் என்பது அன்றைய உலகில் ஒரு பேரரசை நிறுவிய ஏதென்சு  எவ்வாறு ஒன்றுக்குமே ஆகாத ஒரு சாதாரண விசயத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போர் முப்பது ஆண்டுகள் இழுத்தடித்து ஏதென்சின் பேரரசை அழித்தது என்பதைப் பற்றியது. இதிலிருந்து வல்லரசுகளுக்கான பாடங்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் இது இன்றும் ஆர்வமாகப் படிக்கப்படுகிறது. ஆனால் ஈழப்போர் என்பது ஒரு சிறு தேசம் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்த்த பொழுதும் இறுதிவரை தனது விடுதலைக்காக நின்று போராடிய தனித்துவமான கதை. இதிலிருந்து விடுதலை அடைய நினைக்கும் தேசியங்களுக்கான பாடங்களும் வழிகாட்டல்களும் நிறைய உள்ளன. ஈழப்போரும் பெலோப்பினீசியப் போரைப் போன்று உலக வரலாற்றில் பெரிய தத்துவத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கேற்ற  கூறுகள் உள்ளன.

ஈழப்போர் என்பது உலகத்திற்கு பொக்கிசமா எனபதை காலம்தான் சொல்லவேண்டும். ஆனால் என்னால் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். ஈழப்போரும் புலிகளின் வரலாறும்  நாம் என்றென்றும்  கற்றுக்கொள்ள வேண்டிய ஈடு இணையற்ற பொக்கிசம்.

பி.கு: புலிகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்ற பார்வையில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவர்கள் செய்த எல்லாவற்றையும்  நியாப்படுத்துவதல்ல. அதுபோல ஆயுதப்போராட்டம்தான் செய்யவேண்டும் என்று கூறுவதும் அல்ல.

 

  1. McChrystal, Gen Stanley, et al. Team of teams: New rules of engagement for a complex world. Penguin, 2015.
  2. ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3 https://sethusubbar.wordpress.com/2019/01/27/eelamlesson3/
  3. ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4, https://sethusubbar.wordpress.com/2019/02/24/eelamlesson4/
  4. குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு, https://arivukkadal.com/2019/10/12/teamofteams/
  5. The History of the Peloponnesian War, Thucydides.
  6. Gaddis, John Lewis. On grand strategy. Penguin Books, 2019.
  7. பரணி கிருஷ்ணரஜனி,  தூசிடிடேஸ் – சன்சூ – கௌடில்யர் – வேலுப்பிள்ளை பிரபாகரன். -3, http://www.velichaveedu.com/15319-5-a/?fbclid=IwAR0gRxEYJP-JCwXX_4Iye44ACoGwW8hRLtxlQb4ko1Y_lhACeWl5xb57uWg

 

https://sethusubbar.wordpress.com/2019/10/20/leadership/?fbclid=IwAR3tiPV9uqgrPEdHbjmVKCnFl8UPC5iBUcrwYlPG7mHcm2_yrO6Zdu9u_DY

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.