Jump to content

இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:

Port City 2 Mount Lavaniya ல் தொடரும் என ஒரு பேச்சு உண்டு. 

 

22 minutes ago, Lara said:

Port City ஐ Galle Face இலிருந்து Mount Lavinia வரை நீட்டிக்கும் எண்ணமிருப்பதாகவும் அதை இதனுடன் சேர்ந்து அல்லாமல் தனித்திட்டமாக முன்னெடுக்கவிருப்பதாகவும் முன்பு கூறப்பட்டது.

முழு இலங்கையை சீனாவுக்கு கொடுத்தாலும் போதாது.

2 hours ago, poet said:

இச்செய்தி இந்தியாவை ஆழம்பார்க்கும் தந்திரமாக இருக்கும். சீனாவின் ராசதந்திரம் கடைசிவரை  மாற்றாரை குழப்பிக்கொண்டிருப்பதும் திசை திருப்புவதும்தான். . தனது நண்பர்களை எதிரியின் நண்பராக காய் நகர்த்துவார்கள். சீனா வடகிழக்கு மாகாணங்களில் வீதி, புகையிரத வீதி  கட்டிடங்கள் அமைப்பதைக்கூட அமரிக்காவும் இந்தியாவும் இதுவரை அனுமதிக்கவில்லை. இலங்கையில் சீன அணிக்கும்  அமரிக்கா சக இந்தியா அணிக்குமிடையில் தென்னிலங்கை என் ஏரியா,  வடகிழக்கு  உங்க ஏரியா என்பதுபோல ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு,   மோதல் தவிர்ப்பு செயற்பாடு  நிலவுகிறது. ஆதலால் கச்சதீஇல் சீன அணுமின் நிலையம்  செய்தியில் உண்மை இருக்க வாய்பெதுவும் இல்லை.

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

Link to comment
Share on other sites

15 minutes ago, ஈழப்பிரியன் said:

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

சிங்களத்திடம் அரசு உள்ளது, ஊடகங்கள் உள்ளன, ..
எம்மிடம் அவை எதுவும் இல்லை. நாம் மட்டுமே ...

எனது பார்வையில், முடிந்தளவுக்கு நாம் இதை இந்திய நண்பர்கள் மத்தியில் சமூக வலை தளங்கள் ஊடாக சேர்த்துவிட வேண்டும். நல்லது நடக்கலாம்.

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள செய்தியில் உள்ள சீன கம்பனி, dongfang electric corporation என்ற கம்பனி (மின்)சக்தி பிறப்பாக்கிகள் உற்பத்தியும் , மற்றும் (மின்)சக்தி உற்பத்தி நிலையம் நிர்மாணத்திலும் ஈடுபடுவது.

இங்கு, நான் சொல்வது, நான் அறிந்தவற்றை கொண்டு அடைந்த முடிவு.

அண்மையில் சொல்லி இருந்தேன், கிந்தியா தேசிய மின்விநோயாக அமைப்பை முதலீடு என்ற போர்வையில் கேட்கிறது என்று.

அதனால், கோத்தா கிந்தியவிற்கு தான் விடுத்த சவாலான, வேறு எவரும் முதலிடாவிட்டால் சீனா வரவும், நாடுகள் சீனாவை நாடுவதும் தவிர்க்க முடியாதது என்பது, யதார்த்தமாக செயற்படுத்தப்படுகிறது தோற்றப்பாட்டை  காட்டுவதற்காக இருக்கலாம்.

மேலும், கச்சத்தீவில், காற்றாலை பண்ணை அமைப்பதற்கான முன்னோடியாக இருக்கலாம். 

ஏனெனில்,    கச்சத்தீவின் புவியியல் அமைவிடம், அதாவது இரு மருங்கும் ஒப்பீட்டளவில் உள்ள பெருநிலப்பரப்புக்களின் இடையில், ஒப்பீட்டளவில் தங்கு தடையற்ற கடல்வெளி,  ஓர் wind tunnel இன் நடுவே கச்சத்தீவு  இருப்பதாக உள்ளது.

Related image

Link to comment
Share on other sites

கோத்தா தனது டெல்லி பிரயாணத்தில் இந்தியாவிற்கு கூறிய விடயங்களில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமையாதவை : 

1. சீனாவுடனும் பொருளாதார அபிவிருத்திகளை சிங்களம் தொடரும்

2. பாகிஸ்தானுடனும் உறவுகளை பேணும் 

ஆனால், இவை இந்தியாவிற்கு பாதிப்பில்லாத வழியில் செய்யப்படும் என்பதாகும். ஆனால், அதை இந்தியா நம்ப தயாராகவில்லை. 13 என மோடி கூறினாலும் அதையும் கோத்தா ஏற்கவில்லை.  எனவே, இந்திய வெளிவிவாகர கொள்கையில் மாற்றம் வந்தாகவேண்டும்.   

Link to comment
Share on other sites

13 hours ago, நிழலி said:

லங்கா நியூஸ் போலியான செய்தியாகவே இருக்க 99 வீத வாய்ப்புகள் உள்ளன. கோத்தாவும் சரி, சிங்கள புத்திசீவிகளும் சரி தம் தலையில் தாமே மண்ணை போடக் கூடியவர்கள் அல்ல.  அத்துடன் கச்ச தீவு போன்ற நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவில் அணுமின் நிலையம் போன்ற அமைக்கும் அளவுக்கு சீனாவும் முட்டாள் கிடையாது என்றே நினைக்கின்றேன்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி அப்படி அங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது ஒரு பொய்யான செய்தி. அதுவும் சீன அங்கு இந்த அணு உலையை அமைப்பதென்பது கடைந்தெடுத்த பொய். 

Link to comment
Share on other sites

8 hours ago, ஈழப்பிரியன் said:

 

முழு இலங்கையை சீனாவுக்கு கொடுத்தாலும் போதாது.

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

திரு ஈழப்பிரியன் , நீங்கள் மேலே ”இலங்கை” என்பதை ”சீன ராசதந்திரிகளின் வழிநடத்தலில் இலங்கை” என்றே நான் கூற முனைகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

சிங்களத்திடம் அரசு உள்ளது, ஊடகங்கள் உள்ளன, ..
எம்மிடம் அவை எதுவும் இல்லை. நாம் மட்டுமே ...

எனது பார்வையில், முடிந்தளவுக்கு நாம் இதை இந்திய நண்பர்கள் மத்தியில் சமூக வலை தளங்கள் ஊடாக சேர்த்துவிட வேண்டும். நல்லது நடக்கலாம்.

 

இந்தச் செய்தியே போலியானது என்பதை கூகிளில் தேடினால் தெரியும். ஒரு நம்பிக்கையான reference உம் இல்லாத  fake news செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்ப முனைவது ஆபத்தானது. நல்லது நடக்கும் என்பதை விட புருடாக்காரர்கள் என்ற பெயர்தான் வந்து சேரும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.