Jump to content

அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசின் சகலவித ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன்


Recommended Posts

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில்  இந்திய அரசாங்கத்தின்  சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்  எனவும் கூறினார். 

sampanthan.jpg

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமரால் முன்வைக்கப்பட்ட தமிழர் விவகாரங்கள் குறித்து தமிழர் அரசியல் தரப்பு மத்தியில் நிலவும் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

https://www.virakesari.lk/article/70246

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா சமஷ்டியை ஒழிச்சுப்போட்டியளோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்க எல்லோரும்  ஒற்றுமையாக

ஒரு  தீர்வை  பரிசீலனைக்கு  வைக்க  தயாரா??

அந்த தெம்பும் ஒற்றுமையும் இலட்சியமும் இருக்கா??????

Link to comment
Share on other sites

13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது, தமிழ் தலைவர்கள் தங்களிடம் மக்களிடம் சென்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்- இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய

13வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது இதன் காரணமாக சில மாற்றங்கள் அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பகுதிகளிற்கு செல்லுங்கள் ,அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கவனியுங்கள்,அந்த பகுதிகளில் பணியாற்றங்கள் அவர்களுடைய விவகாரங்களிற்கு தீர்வை காணுங்கள்,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என தமிழ் தலைவர்களிற்கு நான் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/70249

Link to comment
Share on other sites

முதலில் கெஞ்சுவதை நிறுத்துங்கோப்பா.  அடுத்தது இந்தியாவை மட்டும் எதிர்பார்ப்பதை விடுத்து  எப்ப சொந்தமாக யோசிக்கிறோமோ அப்பத்தான் எங்கள் பலம் எமக்குப் புரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.