Jump to content

பாராளுமன்றம் ஒத்திவைப்பு ; வெளியானது விசேட வர்த்தமானி


Recommended Posts

பாராளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

78396620_977839305923615_251851128269753

அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

.இதையடுத்து 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/70253

Link to comment
Share on other sites

Parliament prorogued

The Government Printer had confirmed that they have received instructions to publish the gazette notification to prorogue Parliament from tomorrow.

President Gotabaya Rajapaksa has decided to prorogue Parliament for one month till January 3 from tomorrow.

http://www.dailymirror.lk/top_story/Parliament-prorogued/155-178878

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தமானி  அறிவித்தலில் கருத்துருவாக்கத் தவறுகள் இருப்பினும். 

"சனாதிபதி, கோத்தபாய ராஜபக்சே ஆகிய நான்" என்ற விளிப்பில் ஆரம்பித்தமையால், "கோத்தபாய ராஜபக்சே, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சனாதிபதி" 

என்று கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

"அதியுத்தமனாரின் ஆணைப்படி, பீ . பி ஜயசுந்தர, சனாதிபதியின் செயலாளர்" என்று கையொமிடுவதற்கு,    "இலங்கை சனநாயக சோசலிச குடியரசு 70 ஆவது உறுப்புரையினால்  கோத்தபாய ராஜபக்சே ஆகிய சனாதிபதி பீடத்திடம் உரிதாக்கப்பட்டுள்ள தத்துவங்களால் எழும் அதிகாரங்களின் பயனைக் கொண்டு, இப்பிரகடனத்தின்  மூலம் ..."     

என்று வசன நடை இருக்க வேண்டும்.

சொறி சிங்களம் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்(??) தவறை விட்டுள்ளது. 
 

 

 

 

 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளிகளின் ஜனநாயகப் படுகொலை ஆரம்பம்.

Link to comment
Share on other sites

பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்ததில் பாரிய சந்தேகம் :   எஸ்.எம். மரிக்கார்

(இராஜதுரை ஹஷான்)

உரிய காரணிகள் ஏதுமின்றி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமையானது இடைக்கால அரசாங்கத்தின் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

marikkar.jpg

மக்களுக்கு  சேவையாற்றும் விடயங்களுக்கு பாராளுமன்றத்தினுள் இடைக்கால அரசாங்கத்திற்கு  முழுமையான ஒத்துழைப்பு  வழங்க தயார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.  எழுந்துள்ள சவால்கள் குறித்து  கட்சியின் தலைவரும், சிரேஷ்ட உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எட்டாவது பாராளுமன்றத்தின்  மூன்றாவது சபை அமர்வுகளை நிறைவுக்கு கொண்டு வந்து பாராளுமன்ற அமர்வினை  அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு  ஒத்திவைத்து  வர்த்தமானி வெளியிட்டுள்ளமைக்கு  எவ்விதமான உரிய காரணிகளும் கிடையாது.

 ஜனாதிபதி தேர்தல் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு இணங்க சிம்மாசன பிரசங்ம் உள்ளிட்ட இதர விடயதானங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் அவர்  மாறுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளமை   பின்வரும் விடயங்களை மையப்படுத்திய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளன என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70314

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.