Jump to content

நாட்டை விட்டுத் தப்பியோடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இடமில்லை


Recommended Posts

இலங்கையின் வங்கிகளில் இருந்து பாரிய அளவில் கடன்களைப் பெற்று முதலீடுகளை மேற்கொண்டு, சில நாள்களில் நாட்டை விட்டு ஓடிவிடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இனிமேல் இடமளிக்கப் போவதில்லை என, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

பேராதனையிலுள்ள ரெஸ்ட்ஹவுஸில், நேற்று (01) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தால், வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவில் இந்நாட்டுக்கு முதலீடு வரும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் ஆனால். கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கும் போதே, அது அப்பட்டமான பொய் என்பது மத்திய வங்கியின் அறிக்கையூடாகத் தெரியவருவதாகவும் கூறினார்.  

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, 2.2 ட்ரில்லியன் கடன் தொகை இருந்தது என்றும் 2015ஆம் ஆண்டு, அது 7.3 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.  

ஆனாலும், 2005ஆம் ஆண்டு 20 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த இந்நாட்டின் பெறுமதி, 2015ஆம் ஆண்டு 80 ட்ரில்லியன் டொலர் பெறுமதியுள்ள நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கடன் மூலம், நாடு பாரிய அபிவிருத்தி கண்டது என்றும் அவர் கூறினார்.  

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இருந்தபோது பல மடங்கு கடன்கள் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்ததற்கான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

'http://www.tamilmirror.lk/மலையகம்/நடட-வடடத-தபபயடம-வளநடட-மதலடடளரகளகக-இடமலல/76-241902

Link to comment
Share on other sites

இது உண்மை. சில வெளிநாட்டு கொம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பின்னர் அடந்த முதலீட்டினுடாக சில தனியார் கம்பெனிகளை தாமதக்கிக்கொண்டு வங்கிகளில் கடன்களை பெற்றுக்கொள்ளுகிறார்கள். இருந்தாலும் இவர்களால் கொம்பனிகளை சரியாக முகாமைத்துவம் செய்யத்தெரிவதில்லை.

அத்துடன் உள்ளூர் பார்ட்னர்களும் களவு செய்யத்தொடங்குவார்கள். இதனால் முதலீடு செய்பவர்கள் வங்கியில் எடுத்த கடனுடன் தலைமறைவாகிவிடுவார்கள்.

இலங்கையின் முதன்மை கொம்பனியான வாக்கெர்ஸ் பிரைவேட் லிமிடெட்டிட்கும் இதுதான் நடந்தது. இங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் வேலை செய்தார்கள். மலேசியன் கம்பெனி இதை வாங்கியது. இப்போது மலேசியன் கம்பெனியும் இல்லை வாக்கெர்ஸ் கம்பெனியும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கு வேலை செய்தவர்களில் அநேகர் வேறு இடங்களுக்கு சென்று விடடார்கள். இருப்பவர்களுக்கும் ஒழுங்காக சம்பளம் கிடைப்பதில்லை. எனவே இந்த திடடத்தை வரவேட்கிறோம். 

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

ஆனாலும், 2005ஆம் ஆண்டு 20 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த இந்நாட்டின் பெறுமதி, 2015ஆம் ஆண்டு 80 ட்ரில்லியன் டொலர் பெறுமதியுள்ள நாடாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கடன் மூலம், நாடு பாரிய அபிவிருத்தி கண்டது என்றும் அவர் கூறினார்.  

கெஹெலிய ரம்புக்வெல்ல எப்படி வேண்டுமென்றாலும் அளக்கலாம், அவிக்கலாம் 🤣

15 hours ago, ampanai said:

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, 2.2 ட்ரில்லியன் கடன் தொகை இருந்தது என்றும் 2015ஆம் ஆண்டு, அது 7.3 ட்ரில்லியன் ரூபாயாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.  

 

Link to comment
Share on other sites

நாட்டில் இருந்தும் இன்றும் உலகில் எந்த மூலைக்கும் சென்று உழைத்து முன்னேறலாம் என்ற எண்ணம் உள்ளது. காரணம், இந்த திருநாட்டில் அவ்வாறு முன்னேற முடியாது என்பது மக்களின் எண்ணம். 

ஆனால், சிங்கள தலைவர்கள் தங்கள் நாட்டில் தாங்களே தங்கள் மக்கள் முன்னேறுவதற்கு உள்ள தடைகளை அகற்றாமல் இருப்பதே பெரிய தடை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.