Jump to content

மீண்டும் சாதாரண போனுக்கு மாறினால் வாழ்க்கை எப்படி இருக்கும்?


Recommended Posts

500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் இந்தியாவே அதிர்ந்தது. அதிலிருந்துகூட ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். ஆனால், ஓர் அறிவிப்பு வந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாது. அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?

'இனி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை, பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து சாதாரண போன்களை வாங்கிக்கொள்ளுங்கள்!' என்று அரசு அதிரடியாக அறிவிக்கிறது. அது ஏன் அறிவிக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனைதான். என்னவெல்லாம் நடக்கும்.

 

வாட்ஸ்அப் குருப்களுக்கு ஒரு கும்பிடு!

24 மணி நேரமும் ஹாஸ்பிட்டல், ஏடிஎம் உள்ளிட்டவை செயல்படுகின்றனவோ இல்லையோ வாட்ஸ்அப் குருப்கள் எப்போதுமே ஆக்டிவாகத்தான் இருக்கின்றன. இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இருக்கும் குருப்களைவிட, முகம் அறியாத, முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குருப்கள்தான் களைகட்டுகின்றன. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் அதில் தினமும் வரும் ஆயிரக்கணக்கான ஃபார்வர்டு வீடியோக்கள், 'தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்' ரக மெசேஜ்களின் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.

 

பிரைவசியை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களை வேவு பார்ப்பதற்கு என்றே சில நிறுவனங்கள் இயங்குகின்றன. சமீபத்தில் இது குறித்த சர்ச்சை எழுந்தது. ஃபேஸ்புக்கும் நம் தகவல்களைக் கசிய விட்டது. இதுவே, சாதாரண போனுக்குச் சென்றுவிட்டால் ஏதோ ஒரு டெக் நிறுவனம் நமக்குத் தெரியாமல் கேமரா, மைக் மூலம் நம்மை உளவு பார்க்கிறது என்ற டென்ஷன் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.

ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா இருக்கும்

"நான் உனக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணேன், நீ ஆன்லைன்ல தான் இருந்த, ஆனா அதைப் பார்க்க உனக்கு 5 நிமிஷம் தேவை" என்ற கோபங்கள் முதல் "ப்ளூ டிக் வந்தும் நீ ரிப்ளை பண்ணல, உனக்கு அவ்வளவு திமிராகி போயிருச்சுல" என்ற அதட்டல் வரை எதுவும் சாதாரண போன் பயன்படுத்தினால் இருக்காது. சாதாரண போனில் மெசேஜ் அனுப்பி பார்க்கவில்லை என்றால்கூட உண்மையான காரணம் சொல்லி விளக்கலாம். இதனால் நட்பு, காதல் என அனைத்தும் சுமுகமாக இருக்கும். கல்யாணத்துக்குக்கூட ஸ்மார்ட்போனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் வேட்டு வைத்திருக்கின்றன.

 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்க மாட்டோம்.

மது, புகைக்கு அடிமையாக இருப்பவர்களைவிட ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் இன்று அதிகம். ஒவ்வொரு 5 நிமிடமும் நோட்டிஃபிகேஷன் எதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பது, 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பது என ஸ்மார்ட்போனுடன் ஒன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். இது சாதாரண போனுக்கு மாறினால் இருக்காது. PUBG-க்கு அடிமையாக இருக்க மாட்டோம். Snake கேம் வேண்டுமானால் ஆடுவோம். மத்தபடி SMS, கால்ஸ் மட்டும்தான்.

 

 

போ(ன்)னால் போகட்டும் போடா!

ஸ்மார்ட் போன் திருட்டு போனால் அவ்வளவுதான். பேடிஎம், கூகுள் பே, இ-பேங்க்கிங் ஆப்கள் என ஒரு குட்டி சுவிஸ் வங்கியே ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும். அவை தவிர, நம் போட்டோக்கள், பல முக்கிய தகவல்கள் இருக்கும். அனைத்தும் கைவிட்டுப் போய்விடும். அதுவும் 1 லட்சம் ரூபாய் ஐபோனை பாக்கெட்டில் வைத்திருப்பர். ஆனால், சாதாரண போனில் அப்படி அல்ல. சில எஸ்எம்எஸ்களும் சிலரின் போன் நம்பர் மட்டுமே இருக்கும். அதனால் 'போனால் போகட்டும் போடா' என்று இருக்கலாம்.

 

கவனச்சிதறல்

பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் சென்றால் மக்கள், பேருந்தோ ரயிலோ வருகிறதா என்று பார்ப்பதில்லை. போனைத்தான் பார்க்கின்றனர். இதுகூட பரவாயில்லை. பால் குடிக்கும் குழந்தை முதல் பல்போன தாத்தா வரை அனைவரும் ஸமார்ட்போனே உலகம் என்று ஸ்மார்ட் போனும் கையுமாக உள்ளார்கள். ஸ்மார்ட் போனால் கவனச்சிதறல் அதிகம் ஏற்படுகிறது. சரி ஸ்மார்ட்போன் போய் சாதாரண போன் உபயோகிக்க வேண்டிய நிலை வந்தால், வீட்டிலோ, வெளியிலோ, அருகில் இருப்பவர்களுடன் பேசி உறவாடும் பழைய நிலை திரும்பி வரும்.

செல்ஃபி, டிக் டாக் மோகம்

சமீபத்தில் ஒரு பெண் தான் எடுத்த செல்ஃபி எதுவும் சரியில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளிவந்தது. மேலும், ஓர் இளைஞர் ஆழமான தண்ணீர் பகுதியில் டிக்டாக் செய்ய முயன்றபோது மரணமடைந்தார். இவை சில உதாரணங்களே. இது போன்று பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலரின் வாழ்க்கை டிக் டாக், செல்ஃபி மோகத்தால் திசைமாறி சிதைவடைந்துள்ளன. Narcissism (தங்கள் மீது அதிக ஈர்ப்பு உடையவர்கள்) என்னும் குணம் ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு, அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத உலகத்தில் செல்ஃபி, டிக்டாக், ஸ்டேடஸ் என்ற நம்மைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் இன்றி பிற மனிதர்களையும் ரசிக்கத் தொடங்கலாம்.

ஆபீஸ் செல்பவர்கள் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு, டூர் போன போட்டவை ஃபேஸ்புக், ஸ்டேட்டஸில் போட்டு மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டத் தேவையில்லை. முன்பு உறவுகளையும் நண்பர்களையும் திடீரென்று சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், தற்போது வெளிப்படுத்தப்படுவது இல்லை. சாப்பாடு முதல் சென்று வந்த இடங்களையெல்லாம், ஸ்டேட்டஸ் போட்டுவிடுவதால், சந்திப்பில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் திடீர் சந்திப்புகளில் ஒரு இனிமை இருக்கத்தானே செய்யும். நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு லைக், ஹாஹா போட்டவர்களை நேரில் பார்த்தால் ஒரு சிரிப்பைச் சிந்தத் தயங்குகிறார்கள். இந்த நிலையெல்லாம் மாறி இயல்பான வாழ்க்கையின் சந்தோசம் கிடைக்கப் பெறலாம்.

ஆனால், இதற்காகத் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டம் தட்டிவிட முடியாது. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் நாம் இழப்பதற்கும் நிறையவே இருக்கிறது.

 

விரல்நுனியில் உலகம்

இன்று, உலகத்தை விரல் நுனியில் முடுக்கும் பெருமை ஸ்மார்ட் போனுக்கே! படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் முதல் சமையல் குறிப்பு வரை நமக்கு எல்லாமுமாக உதவுகின்றது ஸ்மார்ட்போன்கள். நம் நட்பு வட்டாரத்தைப் பெருக்கி உறவினர்களுடன் உறவைப் பலப்படுத்தும் பாலம் எனப் பல நன்மைகளும் உண்டு. எது எப்படியோ ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சாதாரண போனாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தும் முறை நம் கையில்தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் நம்மிடம் இருந்தால் ஒரு தைரியம் தானாகவே வந்துவிடும். எங்கு போனாலும் GPS ஆன் செய்து சேர வேண்டிய இடத்தை அறியலாம் இப்படிப் பல நன்மைகளை ஸ்மார்ட்போனால் தினமும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

https://www.vikatan.com/technology/gadgets/what-if-we-turn-back-to-feature-phones-again

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இனி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை, பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து சாதாரண போன்களை வாங்கிக்கொள்ளுங்கள்!' என்று அரசு அதிரடியாக அறிவிக்கிறது. அது ஏன் அறிவிக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனைதான். என்னவெல்லாம் நடக்கும்.

குடும்பங்கள் சந்தோசமாக இருக்கும்.

3 minutes ago, Maharajah said:

யாழ் களமா ?  அது என்ன ?? 

நான் யாழில் இணைந்த காலத்தில் யாரும் தொலைபேசியில் யாழைப் பார்க்கவில்லை.

எல்லாமே மேசைக் கணனி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மீண்டும் சாதாரண போனுக்கு....  மாறினால்,
பலர்... விசர் ஆஸ்பத்திரிக்கு.... போக வேண்டி இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.