Jump to content

தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இறங்க வேண்டும்

தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது?

நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்கள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றும் கூட அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.

விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இறங்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.

என்ன சந்தேகம்

இதனால் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அபபோது எந்த விதமான உறுதியாக தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.
நாசா

அதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டது

ஆம் 3 மாதங்களுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார். நாசா இதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் எங்கு விழுந்தது, எப்படி விழுந்தது, அதன் பாகங்கள் எப்படி எங்கே கிடக்கிறது என்று இந்த புகைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

என்ன புள்ளிகள்

இதை மஞ்சள் மற்றும் சிவப்பு புள்ளிகள் மூலம் நாசா விளக்கி உள்ளது. இதில் இருக்கும் பச்சை நிறப் புள்ளிகள் விண்கள குப்பைகள் ஆகும். மற்ற புள்ளிகள் விக்ரமின் பாகங்கள், மற்றும் விக்ரம் மோதிய இடங்கள் ஆகும் என்று நாசா கூறியுள்ளது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி சிதறியது உறுதியாகி உள்ளது.

என்ன புகைப்படம்

இந்த புகைப்படங்கள் கடந்த நவம்பர் 11ம் தேதி எடுக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஆராய்ச்சி மூலம் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி கண்டுபிடித்தது

ஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.

நாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்ட்டது. நாசாவின் LROC மூலம் இது கண்டுபிடிக்கப்ட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/chandrayaan-2-finally-nasa-finds-the-vikram-lander-a-tamailan-helped-to-find-it-370262.html
 

Link to comment
Share on other sites

" சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது."

பாராட்டுக்கள் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள்.. 👍 அப்துல்கலாம் தொடங்கி.. (அதற்க்கு முன்பும் பலர் இருந்திருக்கலாம்) உந்த வான் வெளி ஆராய்ச்சி , இஸ்ரோ..  இதை கடாசிவிட்டு வெளியுறவு ,தேசிய ஆலோசகர்.. போன்ற மலையாளிகளின் இடத்திற்கு  முன் நகர்ந்தால் தமிழினத்திற்கு நன்மை உண்டாகும்..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.