Jump to content

தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா?

-க. அகரன்

தேசிய இனங்களின் பாதுகாப்பான இருப்பு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றைச் சமாந்தரமான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கங்களே, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.  

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் தேர்தல்களும் அமையப்போகும் ஆட்சியும் அதன் நிலைப்பாடுகளும் ‘தேசிய இனங்கள்’ என்ற வகைகளில் எவ்வாறு அமையப்போகின்றன. தேசிய இனங்கள் அனைத்தையும், ஓரே பார்வையில் பார்க்குமா என்ற சந்தேகம் பெருகியுள்ளது.  

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையும் அதனோடிணைந்த ஆளுநர்,  செயலாளர்கள் நியமனங்கள் ஆகியவை ஒரு குழப்பகரமான நிலைமையையே, சிறுபான்மையாக உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.   

எனினும், விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிவாதத்தை விரும்பியிருந்த சிங்கள பௌத்தவாதம், கடந்த நான்கரை ஆண்டுகளாக, ஜனநாயக நீரோட்டத்தில் தன்னைப் பயணிக்கச் செய்திருந்தது. ஆனால், மீண்டும் யுத்த வெற்றிவாத சிந்தனைக்குள், சிங்கள பௌத்தவாதம் தன்னை அகப்படுத்திக் கொண்டுள்ளது.  

தற்போயை ஆட்சியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளவுள்ளனர். அதனால், பௌத்த மேலாதிக்க மனோபாவம் முன்னிலைப் பட்டுள்ள, தற்போதைய சூழ்நிலையிலேயே மேற்குறிப்பிட்ட தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற மனோபாவம் ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் நிலைப்பாடு, தமது வெற்றிக்கு மிகவும் முக்கியமாகத்  தேவையான ஒன்று என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். நடந்து முடிந்த, ஜனாதிபதித் தேர்தலில் இத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றதன் பலனாக, அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே காய்நகர்த்தல்களுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.   

இந்தச் சூழலில், சிறுபான்மையினரான தேசிய இனங்கள், எடுக்கவேண்டிய அரசியல் நகர்வுகள் குறித்து, அக்கறை செலுத்தப்பட வேண்டிய தேவை எழுகின்றது.  வெறுமனே ‘வாய்ச்சாடல்’ அரசியல் என்பதும், அதனூடாகப் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதென்பதும், இனிவரும் காலங்களில், தமிழர் அரசியல் பரப்பில் சாத்தியமற்ற ஒன்றாகி விடும் சூழல் உருவாகிவருகின்றது.   

வட மாகாண சபையில் வெறுப்புணர்வு கொண்ட தமிழ் மக்கள், தமிழ் பிரதிநிதிகளால் எதையும் சாதித்து விட முடியாது என்ற மனோபாவத்தில் இருந்து விடுபடுவதற்குள், ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேறுபல தமிழ்க் கட்சிகளும் எடுத்த முடிவுகள் அல்லது, வழிநடத்திய விதங்கள் மொத்தத்தில், நட்டாற்றில் விட்டதாகவே தமிழ் மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர்.  

இந்நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் தொடர்பிலான சந்தேகம், தமிழ்க் கட்சிகள் மத்தியில் வியாபித்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘ஒரணி’ என்ற அறைகூவலையும் பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டிலும் அதற்குள் உள்ள கட்சிகள்,  அதற்குள் இருந்து வெளியேறிய கட்சிகள் ஆகியவற்றில் நிலைப்பாடுகளை ஆராயப்போகும் ஏனைய தமிழ்க் கட்சிகள், ‘ஓரணி’ கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பார்க்கவேண்டும்.  

பலமான அணியாகத் தமிழர் தரப்பு இல்லாதவரை, தமிழர் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகள், இனிவரப்போகும் காலங்களில், கொழும்பைப் பொறுத்தவரையில், செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கப்போகின்றது.  

எனினும், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், தமது இருப்புத் தொடர்பில், அவர்களின் மனோபாவமும்  சமூகத்தின் முக்கியமான தேவை குறித்து, ஒற்றுமையுடன், வினைதிறனுடன் அழுத்தத்தைப் பிரயோகிப்பதில் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படப் போகின்றமையும் தவிர்க்க முடியாதது. அதனூடாகவே, அடுத்து வரப்போகும் அரசாங்கத்தில் அவர்கள் அங்கம் வகிக்க முயற்சிப்பர். 

ஆனால், தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அரசியல்வாதிகள், எடுக்கப்போகும் நிலைப்பாட்டிலேயே தமிழர்களின் இருப்பும் அவர்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் தங்கியிருக்கின்றன.  

கடந்த ஆட்சிக்காலத்தில், நான்கரை ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையும் தமது மக்களுக்காகச் செய்துகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் ஐ.தே.கஇன் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகக்  கைகளை உயர்த்துகின்றபோது, குறைந்தது அரசியல் கைதிகளையாவது விடுவித்திருக்க வேண்டும்; புதிய அரசமைப்பின் உருவாக்கத்தையாவது கொண்டு வந்திருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டை, தற்போது அதிகளவில் தமிழ் மக்கள், முன்வைத்து வருகின்றார்கள். 

இந்நிலையில், மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சியும் எதிர்வரும் தேர்தல்களில் தேசியக் கட்சிகளின்பால், குறிப்பாக,  பொதுஜன பெரமுனவின் ஆதிக்க சுழலுக்குள், தமிழ் மக்கள் செல்லக்கூடிய அல்லது சிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  

இந்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் புதிய புயலாக வெளிவரும் மாற்றுத்தலைமை என்ற நிலைப்பாடு, தோல்வியடைந்த கட்சிகளின் கூட்டா,  வெற்றிக்கான வித்திடலா என்பது, அவர்களின் மாற்று அணியின் உள்ளடக்கத்திலேயே உள்ளது.  

ஏனெனில், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமசந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பலவீனமான நிலையில், அதிலும் இரண்டரைக் கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே, இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்து, மாற்றுத் தலைமை அவசியம் தொடர்பில், தீர்மானத்துக்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்ததுடன், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், புதிய கூட்டுத் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளார்.  

எனவே, தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, ஒரு புதிய அரசியல் சக்தி விரைவில் உருவாகவுள்ளது தவிர்க்க முடியாததாகும். ஆனால், அந்தக் கூட்டு, யாரை உள்ளடக்கி வரப்போகின்றது என்பதும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது என்பதற்கும் என்ன உத்தரவாதம் காணப்படுகின்றது என்பது தற்போதுள்ள கேள்வியாகும். 

ஏனெனில், முன்னாள் முதலமைச்சருக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் அணிக்கும் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வாக்கு உள்ள நிலையில், வன்னியைப் பொறுத்தவரையில், சிவசக்தி ஆனந்தனை நம்பி மாத்திரமே களத்தில் இறங்க வேண்டிய தேவையுள்ளது.  

எனினும், சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரையில், வன்னியில் பல புதிய அரசியல்வாதிகளைத் தமிழ் அரசியல் பரப்புக்குள் அறிமுகப்படுத்திய ஆளுமை உள்ளது. எனினும், அவர்கள் தொடர்ந்தும் அவருடன் இல்லாத நிலையும் உள்ளது. இவ்வாறான சூழலில், புதிய கூட்டு, அதற்கான புதிய முகங்கள் என்பது, கல்லில் நார் உரிப்பதைப் போன்றே வன்னிக்கான வெற்றிவாய்ப்பை நோக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது.   

இதற்குமப்பால், வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இம்முறை சிங்களவர் ஒருவரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற தேவையை, சிங்களவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்கள், 25,000 வாக்குகளைக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்குள் சிதறடிக்கப்படும் வாக்குகளுக்கப்பால், ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவதென்பது கடினமான விடயமாக உள்ளபோதிலும், அவர்களும் தமிழ் வாக்குகளையும் நம்பியே இருக்கின்றனர்.  

அதுபோலவே, முஸ்லிம் தரப்பும் சுமார் 20,000 வாக்குகளைக் கொண்டுள்ள போதிலும் ஓர் ஆசனத்தைப் பெறுவதற்கே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையில், கடந்த முறை இரண்டு பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கும் தமிழ் வாக்குகளே தேவையாகவுள்ளது.  

எனவே, 282,911 வாக்குகளைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில், சுமார் 250,000 வாக்குகளைக் கொண்ட தமிழ் வாக்காளர்கள், ஏனைய சமூகங்களுக்காகத் தங்கள் வாக்குகளைப் பிரயோகிக்கும் நிலையில் இருந்து, ஒதுங்கி, தாம் ஒன்றிணைந்து, தமக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள முனைப்பு காட்டாத நிலை காணப்படுகின்றது.  

இதற்குமப்பால், தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிறிடெலோ, ஈரோஸ், பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்பன, ஓரணியில் செயற்படுவதற்காகக் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கான முதற்கட்ட பேச்சும் இடம்பெற்றிருக்கின்றது. 

எனவே, வன்னித்தேர்தல் தொகுதி என்பது, தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், நான்கு, ஐந்து முனைப்போட்டியைத் தமிழ்த் தரப்புக்குள் உள்ளடக்கி காணப்பட போகின்றது. இந்நிலையில்தான், தமிழ் மக்கள், தமக்கான பேரம் பேசும் சக்தியாக, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் காணப்படுகின்றனர்.  

எனவே, தற்போதைய மத்தியின் நிலைப்பாட்டை அறிந்து, அதை எமக்கேற்றாற்போல் செயற்பட தூண்டும் வழிவகைகளை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும். ஆகவே, தமிழர் தரப்பு அரசியல் என்பது, பலமானதாகவும் அதனூடான பிரதிநிதித்துவம் சக்தி வாய்ந்தாகவும் அமைக்கப்படவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகவுள்ளது. அது உள்ள கூட்டுகளைப் பலப்படுத்துவதால் ஏற்படுத்தலாமா, புதிய கூட்டுகளைப் பலரும் உருவாக்கி வாக்கை சிதறடித்து, எதையும் சாத்திக்க முடியாத தேசிய இனமாக இருக்கப்போகின்றோமா என்பதைத் தமிழ் அரசியல் தலைமைகளே உணரத் தலைப்பட வேண்டும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களின்-மாற்றுத்-தலைமை-தோ-ற்றவர்களின்-வெற்றிக்கு-வித்திடலாமா/91-241897

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
    • யார் எதை கூறினாலும் இந்தியாவின் சொற்படியே  எல்லாம் நடக்கும். 
    • இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.