Jump to content

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - நிதி திரட்டியவர்கள் விடுவிப்பு


Recommended Posts

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது..

1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம்  குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற்கும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏப்பிரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது.

இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

சுவிசின் குற்றவியல் கோவையின் 260 வது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது, அதன் பின்னர் அல்ஹைதா போன்ற அமைப்புகளிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/70347

Link to comment
Share on other sites

9 minutes ago, Lara said:

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் நாட்டிற்கும் நீதிமன்றிற்கும் நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
THIS CONTENT WAS PUBLISHED ON DECEMBER 3, 2019 1:17 PMDEC 3, 2019 - 13:17
people smiling

Lawyer Marcel Bosonet (in tie) surrounded by supporters of the accused at the Federal Criminal Court in June 2018

(© Ti-press)

The Swiss Federal Court has ruled that the Tamil Tigers are not a criminal organisation and has acquitted 12 people of charges filed by the Office of the Attorney General (OAG).

In its indictment, the OAG had accused the people of violating the Swiss Penal Code by raising funds for the Liberation Tigers of Tamil Elam (LTTE) between 1999 and 2009. After its nine-year investigation, the OAG suspected the accused of financially supporting the World Tamil Coordinating Committee (WTCC).

But in June 2018 the Federal Criminal Court found that the hierarchical link between the LTTE and WTCC could not be sufficiently established. The judges also felt there was not enough proof to consider the LTTE a criminal group.

In April the OAG appealed against the verdict, insisting that the accused had supported a criminal group.

In a decision published on Tuesday the Federal Court upheld the previous ruling, noting that Article 260 in the Swiss Penal Code was designed to combat organised crime of a mafia nature. Since then it has also been applied to terrorist groups such as al-Qaeda or the Islamic State (IS) terrorist militia. The LTTE was not regarded as a criminal organisation at the time of the fundraising, stated the Federal Court.

According to the court, those who procured money for the LTTE in Switzerland at that time could not assume that they would later violate the law. Even if it had carried out terrorist attacks, the LTTE’s primary objective was to be recognised as an independent ethnic community.

Protesters supporting accused

VERDICT AWAITEDSwiss Tamil Tiger trial has cost over $4 million

The eight-week Swiss trial of 13 financiers accused of funnelling money to the Sri Lankan Tamil separatist group LTTE has cost CHF3.79 million.

 

Keystone-SDA/sm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசின் உள்ளக ம ற்றும் வெளியாக புலனாய்வு மற்றும் உளவு அமைப்புக்களை, கன்னத்தில் அறைந்து, தலையில் குட்டி, முதுகிலும், நெஞ்சிலும் வலிக்குமாறு அழுத்தி, சொல்லப்பட்டிருக்கிறது, ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் குற்றவாளிகள் என்பது சட்டத்தின் முன் ஒரு போதுமே நில்லாது.

சுவிற்சலாந்ந்து, பிரித்தனியாவின் சட்ட  நாய்க்குட்டியாக  இருப்பதை விடுத்தது, விடுதலைப் புலிகளை 
பொறுத்தவரை சுந்தந்திரமான கொள்கை நிலை எடுக்க வேண்டிய கட்டாயம். 

Link to comment
Share on other sites

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

 

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான தீர்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. இருந்தாலும் சுவிற்சலாந்து நாட்டின் தீர்ப்பை பிறநாடுகளும் பின்பற்ற விடாது செய்வதற்கு சிறீலங்கா ஏதாவது உபாயம் தேடும். பிறநாடுகள் சிறீலங்காவை அலட்சியம் செய்தாலும், இந்தியா அந்நாடுகளைச் சமாதானப்படுத்தி சிறீலங்காவுக்கு உதவிட முனையும் என்பது நிச்சயம்.

1 hour ago, Lara said:

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி திரட்டியவர்கள் சட்டத்தை மீறவில்லை. திரட்டிய நிதியைப் பதுக்கி வைத்திருப்பவர்களை எந்தச் சட்டம் பாதுகாக்கிறது.? 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது சுவிஸ் எப்போதுமே நம்மவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கையில் சுவிஷ் தூதரக பணியாளர் கோத்தாவின் புலனாய்வாளர்களால் கடத்தப்படவில்லையெனில் இப்படியான ஒரு தீர்ப்பு கிடைதிருக்குமோ தெரியாது.
சர்வதேச அரங்கில் இது போன்ற தீர்ப்புகளால் மட்டுமே சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை  அராஜகம்  முடிவுக்கு கொண்டுவரப்படலாம். இதை தமிழ் மக்களுக்கு சார்பான நகர்வாக மாற்றுவது எமது அரசியல் வாதிகளின் காய் நகர்த்தலில் தங்கியுள்ளது

Link to comment
Share on other sites

21 hours ago, ampanai said:

சுவிஸ் நாட்டிற்கும் நீதிமன்றிற்கும் நன்றிகள் !

இயற்கை நீதி வென்றுள்ளது!

21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 

நீங்க நினைக்கிற மாதிரி இந்த அரசுக்கு உள் நாட்டில கடத்துற வலு இருந்தாலும் வெளிநாட்டில அந்த வலு இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

நீங்க நினைக்கிற மாதிரி இந்த அரசுக்கு உள் நாட்டில கடத்துற வலு இருந்தாலும் வெளிநாட்டில அந்த வலு இல்லை!

சிங்களத்துக்கு உண்மையில் இல்லைத்  தான்.

ஆனால், சொறி சிங்களம் இஸ்ரேல் உடனான உத்தியோகபூர்வமில்லாத உறவில், இந்த அனுபவத்தை பெற முயதர்சி செய்ததாக செய்திகள் உண்டு. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருசமும் ஐநா  முன்றலில் கூடியபோது

அதை  தேவையற்ற

பிரயோசனமற்ற

வேற  வேலை  இல்லாதவர்களின் ஒன்று  கூடல்  என 

நையாண்டி செய்தவர்களுக்கு  சமர்ப்பணம்

Link to comment
Share on other sites

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

ஏற்கனவே அதற்கான முன்னெடுப்புக்கள் தொடங்கிவிட்டன.

3 hours ago, விசுகு said:

ஒவ்வொரு வருசமும் ஐநா  முன்றலில் கூடியபோது

அதை  தேவையற்ற

பிரயோசனமற்ற

வேற  வேலை  இல்லாதவர்களின் ஒன்று  கூடல்  என 

நையாண்டி செய்தவர்களுக்கு  சமர்ப்பணம்

நையாண்டி செய்கிறவர்களில் பலர் எதுவித பங்களிப்பும் செய்யாதவர்களே.

 

On 12/3/2019 at 10:53 AM, Lara said:

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் தலைவணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

கண்டிப்பாக... சீமான் நரம்பு புடைக்க நாம் தாம் தமிழக மண்ணில் வைத்து ராஜீவை கொன்றோம் என்றெல்லாம் உரிமை கோரிக் கொண்டு இருப்பதால் மத்திய அரசு பயந்து போய் வெருண்டு போய் தடையை நீக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2019 at 10:26 AM, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 


இந்த வழக்கை பின்னிருந்து ஆரம்பித்ததே சிங்களம்தான் முன்னைநாள் 
மகிந்த அரசின் பணத்தில்தான் இது ஆரம்பத்தில் வழக்கனது. பெரும் செலவில் 
பணம்களை கொடுத்து நீட்டிக்கொண்டு இருந்தார்கள் அரச தரப்பிலேயே இதற்கு 4 மில்லியன் அளவில் 
முடிந்து இருக்கிறது ( சுவிஸ் மக்கள் இதுக்கு புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்). சுவிஸ் நாட்டில் இன்னமும் கொஞ்ச புலிகளின் சொத்து இருக்கிறது ஆனால் அவை ஏதும் இதில் குற்றம் சுமத்தியவர்கள் பேர்களில் இல்லை 
இதில் குற்றம் சுமத்த படவர்கள் அப்பாவிகள்தான். காசை சுருட்டியவர்கள் எல்லாம் வழக்குக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு கொஞ்சம் புலிகளுக்கு சார்பானது (ஆதாவது நீதிக்கு புறம்பானது) இந்த வழக்கின் நோக்கம்  புலிகள் பயங்கரவாதிகள் என்ற கோணத்தில் இருக்கவில்லை. சுவிஸ் சட்ட்த்துக்கு மாறாக பணமோசடி செய்தது என்பதாகும் அதுதான் அரசு தரப்பு வாதம் உண்மையில் அது நடந்து ... அதுக்கு போதிய ஆதாரமும் இருந்தது. இந்த தீர்ப்பு என்பது சுவிஸ் வாழ் தமிழருக்கு பெருத்த வெற்றி என்று எண்ணுகிறேன்.

சுவிஸ் கடத்தல் சம்மந்தமாக சுவிஸ் வெளிநாட்டு அமைச்சர் நேற்று பேசி இருக்கிறார் 
தனக்கு உடனடியாக முழு தகவலும் வேண்டும் என்று இலங்கை சுவிஸ் தூரகத்தையும். சுவிஸில் இருக்கும் 
இலங்கை துரகத்துக்கும்  ஒரு லெட்டர் அனுப்பி இருக்கிறார். 

19 hours ago, vanangaamudi said:

அண்மையில் இலங்கையில் சுவிஷ் தூதரக பணியாளர் கோத்தாவின் புலனாய்வாளர்களால் கடத்தப்படவில்லையெனில் இப்படியான ஒரு தீர்ப்பு கிடைதிருக்குமோ தெரியாது.
சர்வதேச அரங்கில் இது போன்ற தீர்ப்புகளால் மட்டுமே சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை  அராஜகம்  முடிவுக்கு கொண்டுவரப்படலாம். இதை தமிழ் மக்களுக்கு சார்பான நகர்வாக மாற்றுவது எமது அரசியல் வாதிகளின் காய் நகர்த்தலில் தங்கியுள்ளது

 

Link to comment
Share on other sites

On 12/3/2019 at 9:53 PM, நிழலி said:

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

விரைவில் அவ்வாறு எதிரொலிக்க வேண்டும்!
நல்ல செய்தி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.