Jump to content

ரஜினி திரணகமவைக் கொன்றது யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது. 

அவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய  ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது  வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார். 

இக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, "என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். 

ஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம். 

இக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

 

உடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ

அடிக்கடி  இப்படித்தான்  வருகின்றீர்கள்

நடுவில்  கொஞ்ச  பக்கங்களை  காணவில்லை  என்பது  தான்  ஞாபகம்  வருகிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

 

90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது. 

அவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய  ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது  வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார். 

இக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, "என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். 

ஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம். 

இக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

 

உடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே? 

முறிந்த பனை  எழுதினது இவர்தானே இருந்தாலும் புலிகள் மீது அதிகமாக குற்றங்கள் சுமத்தினாலும் ஒரு பெண்ணைக்கொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இருந்திராது  

இப்படித்தான் வவுணதீவில் பொலிசாரைக்கொன்றது முன்னாள்  புலிதான் என குற்றம் சாட்டி  கைதும் பண்ணினார்கள் ஆனால் செய்தது யாரோ அது போல இருக்கலாம் என நான் நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

இப்போ

அடிக்கடி  இப்படித்தான்  வருகின்றீர்கள்

நடுவில்  கொஞ்ச  பக்கங்களை  காணவில்லை  என்பது  தான்  ஞாபகம்  வருகிறது???

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

அண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை.

The new Indian government of V.P.Singh announced the withdrawal of the IPKF on September 20, 1989. The very next day, we were given the most grim indicator of what was to follow: The LTTE assassinated Dr.Rajani Thiranagama, a founder activist of the UTHR(J), the head of the Anatomy Department and one of the four who co-authored 'The Broken Palmyra'. 

http://www.uthr.org/history.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை.

The new Indian government of V.P.Singh announced the withdrawal of the IPKF on September 20, 1989. The very next day, we were given the most grim indicator of what was to follow: The LTTE assassinated Dr.Rajani Thiranagama, a founder activist of the UTHR(J), the head of the Anatomy Department and one of the four who co-authored 'The Broken Palmyra'. 

http://www.uthr.org/history.htm

நன்றி கிருபன். இதைத்தான் எதிர்பார்த்தேன். இக்கொலையினைப் புலிகள் செய்திருந்தால்க் கூட, அவர்கள் பக்க நியாயத்தை நான் மறுக்கவில்லை. அறிந்துகொள்வதற்காகக் கேட்ட்கிறேன், அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் 
அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் 
அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் 
இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 
எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி  யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் 
அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும்  விமர்சித்து 
அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம்  இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.

இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் 
பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.

புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் 
புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? 

இவைகள் நான் செவி வழி அறிந்தது .....
ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது 
அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை  விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.  

இந்திய இராணுவம் வெளியேறினாலும்  ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம் 
இந்திய இராணுவம்   ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் 
அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் 
அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் 
இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 
எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி  யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் 
அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும்  விமர்சித்து 
அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம்  இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.

இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் 
பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.

புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் 
புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? 

இவைகள் நான் செவி வழி அறிந்தது .....
ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது 
அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை  விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.  

ஜெயராஜின் கட்டுரையைப் படிக்கும்வரை இக்கொலையினைப் புலிகள் செய்யவில்லை என்று ஆணித்தரமாக நம்பியிருந்தேன். ஆனால், அக்கட்டுரையின் பின்னர் சிலவேளை செய்திருக்கலாம் என்றும் படுகிறது. ஆனால், அற்புதன் ஏன் அவ்வாறு எழுதினார் என்பதும் சிந்திக்கப்படல் வேண்டும். 

அவர் கொல்லப்பட்டது கவலையாக இருக்கிறது. புலிகள் இதைச் செய்யவில்லை என்றே நம்ப விரும்புகிறேன். 

நீங்கள் கூறியதுபோல பல எதிரிகளை அவர் அன்று உருவாக்கியிருந்தார். இந்திய ராணுவம், அவர்களது கூலிகள், இலங்கை அரச ராணுவம் , புலிகள் என்று அனைத்துச் சக்திகளையும் விமர்சித்திருந்தார். ஆனால், எல்லோரைக் காட்டிலும் புலிகள் பற்றி அதிக விமர்சனங்களை இவர் முன்வைத்ததன் காரணத்தால், பலர் இயல்பாகவே புலிகள் தான் கொன்றார்கள் என்கிற முடிவிற்கு வந்துவிடுகிறார்கள். 

வாழ்விற்கும் சாவுக்குமான அன்றைய நாட்களில் ரஜினி இவ்வாறானதொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கத் தேவையில்லை. அவரது கொலைக்காக இரங்குவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். 

நீங்கள் கூறும் கவிஞர் செல்வி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் மட்டக்களப்பில் இருந்த காலம் அது. சரியான விபரங்கள் தெரியாது. எழுதினால் அறிந்துகொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

உங்கள் மீது மேலே  நீங்கள்  சொன்ன  எந்தக்குற்றச்சாட்டையம்  நான் வைக்கவில்லை

வைப்பதுமில்லை

யாரையும் துரோகி  என்று  நான் அழைத்ததுமில்லை

இதெல்லாம் பழைய அதிலும்  பலமுறை விவாதித்தவிடயம்

உங்களுக்கு ஒரே  பதில்தான்

அவர்கள்  எதைச்செய்வார்கள்

எதைச்செய்யமாட்டார்கள்  என்று  எமக்குத்தெரியணும்

தெரியும்

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அவர்கள்  எதைச்செய்வார்கள்

எதைச்செய்யமாட்டார்கள்  என்று  எமக்குத்தெரியணும்

தெரியும்

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

சிலவேளைகளில் அப்படி நடப்பதில்லை குசா. எமது அறிவுக்கும் எதிர்பார்ப்பிற்கும் அகப்படாத வழியில்க் கூட அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். 
அவர்களை நியாயப்படுத்தும்பொழுது, சரியான ஆதாரங்களோடு நியாயப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். இக்கேள்விகூட இன்னொரு தளத்தில் புலிகள் இதைச் செய்யவில்லை என்பதை நிறுவத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன்.

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும்😂

சத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா! விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

புலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்

 
முறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக
வாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை
வாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்
சுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய
ராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான
படுகொலைகளினிமித
்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே
நிர்வாணப்பட்டு நிற்கின்றனர்.........
மட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு
லண்டனுக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகளே
இந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த
ஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு
கஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த
இலக்கியவாதிகள் எப்படி மறந்தார்கள்
ஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்
டது
இவை எல்லாம் பேசு பொருள் அல்ல
(ரகு)
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்
அமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்
தலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்
நோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த
மனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்
கொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,
கோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக
இருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்
இந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்
அக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்
பற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக "முறிந்த பனை"
எனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்
ஆயுதக்குழுக்களின் கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,நீதிக்குப் புறம்பான
நடவடிக்கைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதும்,விமர்சிப்பதும
ானதொரு நூலாகும்.
ஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்
பொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த
ு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை
வெளிப்படுத்தியிருந்தமையால் அவர்களாலும் நெருக்குதல்களுக
்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு
சோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்
சேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)
இந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்
தழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20
திகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென
அறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று
மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி
திரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு
ரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட
பலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு
விலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு
அமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம
இருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட
காலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற
தென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே
அதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு
கண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.
மேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்
இறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:
Some Fundamental Questions for the future of Minorities and the
Erasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்
ஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia
மூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்
தன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்
அழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி
னால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு
வருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து
திடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது
இதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,
இதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு
பின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்
தோன்றுகின்றது.
- Karvanna Subhas
3 மணி நேரம் · பொது

Aathimoola Perumal Prakash
புலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும்😂

சத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா! விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

நன்றி சகோ நான் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்காது என்று நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்   எதுக்கு சும்மா நேரத்தை வீணாக்குவான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

இந்த ஆக்கம் கூட அவர் சார்ந்திருந்த அமைப்பினால் எழுதப்பட்டதுதானே கிருபன்? ஆக, புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று நம்பிக்கொண்டு, இன்றுவரை புலிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும், மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு - யாழ்ப்பாணம் என்பவர்கள் புலிகளுக்கெதிரான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், பாசிஸ்ட்டுக்கள் என்ற சொற்றொடரை புலிகளுக்கெதிராக முதன்முறையாகப் பாவித்தவர்கள், சந்திரிக்கா உற்பட்ட பல சிங்கள இனவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியவர்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புலிகளையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று சித்தரிப்பதற்காக மேற்கோள் காட்டப்பட்டவர்கள். ஆகவே, இவர்கள் புலிகள்தான் கொன்றார்கள் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் கடிணம்தான். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

 

90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது. 

அவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய  ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது  வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார். 

இக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, "என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். 

ஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம். 

இக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

 

உடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே? 

நான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை.  எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில்  (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர்.  பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.  ஆள்  எஸ்கேப் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

எப்ப கு சாவும்,விசுகு அண்ணாவும் ஒரே ஆளா மாறினவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

நான் எழுதியது பழைய விடயம் ....
இவர்களின் வீடு ஆரம்ப காலத்தில் இருந்தே போராளிகள் 
வந்துபோகும் வீடாக இருந்தது புலிகள் மட்டும் இல்லை மற்றைய 
இயக்க போராளிகளும் இங்கு வந்துபோவது என்று ஒரு விடுதலை விரும்பிகளின் 
வீடாக ரஜனி சுட்டுக்கொல்லும் வரை இருந்து இருக்கிறது. 81-82  களிலேயே
83 கலவரத்துக்கு முன்பே போலீஸ் அச்சுறுத்ததல்களை பார்த்தவர்கள். பின்னாளில் எமது விடுதலை 
போரையும் போராளிகளையும் விரோதிகளாக பார்க்கும் நிலைக்கு சென்று இருந்தார்கள் என்பதைத்தான் எழுதினேன். அதுதான் 89-90 க்கு முன் கால பகுதி எல்லாம் நான் கேள்விப்பட்டது அதன் பின்னான பகுதி நான் நேரிடையாக பார்த்தது என்று எழுதி இருந்தேன். 

3 hours ago, Maruthankerny said:

இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் 
அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் 
அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் 
இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 
எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி  யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் 
அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும்  விமர்சித்து 
அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம்  இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.

இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் 
பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.

புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் 
புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? 

இவைகள் நான் செவி வழி அறிந்தது .....
ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது 
அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை  விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.  

இந்திய இராணுவம் வெளியேறினாலும்  ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம் 
இந்திய இராணுவம்   ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம். 

 

2 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

உண்மைதான்...பழையதை துருவிக்கொண்டிருந்தால் மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்பதத்திற்கு வாய்ப்பே இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

உங்களை பொறுத்தவரை?
என்றால் அது என்ன? உங்களிடம் அதுக்கான ஏதாவது ஆதாரம் அல்லது அது சார்ந்த செய்தி 
அல்லது தனிப்பட ரஜனி யுடன் ஏதும் பழக்கம் இருக்கிறதா?

ஏற்றுக்கொள்வதுக்கும் மறுப்பதுக்கும் உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது?
"என்னை பொறுத்தவரை" என்பது என்ன? 

1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

உண்மைதான் அண்ணா 
ஆனாலும் பல கொலைகள் வேண்டும் என்றே புலிகள் மேலே கட்டபட்டு இருக்கிறது 
புலிகள் எதையும் மறுப்பதும் இல்லை நேரம் வீணாக்கி அதை பற்றி பேசுவதும் இல்லை.

இந்த ரஜனி அவர்களின் கொலையில் சுடடவர்களே முன்வந்து சொல்லி இருக்கிறார்கள் 
நாம்தான் சுட்டொம் .... இன்னார்தான் இந்த நேரத்த்தில் இந்த இடத்தில் வைத்து சுட்டார் என்று 
இதுக்குப்பிறகும் இதுக்குள் எந்த காரணமும் இல்லாமல் புலிகளை இழுத்து விடுவதில் பலருக்கு அலாதி பிரியம். 

இவரின் கொலை என்பது அன்று பலருக்கு சாதகமாக யாழ் பல்கலைக்கழக வட்டதில் அமைந்தது 
அதைவைத்து அப்போதைய சில கல்வியாளர்களை புலிகளுக்கு எதிராக திருப்பி விடுவதுக்கு இதை பயன்படுத்தினார்கள். காலம் தாழ்ந்தே சிலர் தாம் ஏமாற்றபட்டதை உணர்கிறார்கள். சிலர் தாம்தான் புத்திசாலி என்று எண்ணி இன்னமும் உண்மைகளை உள்வாங்காது இருக்கிறார்கள். 

இவர் புலிகளுக்கு எதிரானவரும் இல்லை 
இவர் கொலையால் புலிகளுக்கு எந்த லாபமும் இல்லை 
மாறாக புலிகளின் ஆதரவு என்று கூறி இவர்களுக்கு இந்திய இராணுவத்தால் மட்டுமே 
பல அச்சுறுத்தல் இருந்துவந்தது..... இவரே தன்னை ஈப்பி சுடலாம் என்பதை சொல்லி வந்திருக்கிறார். 
காரணம் இவர் செல்வி என்ற இன்னொரு ஈப்பி ஆதரவாளரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவருக்கும்    
ஈப்பிக்கும் ஒரு விரோத நிலை தோன்றி இருந்தது. ஆனால் சாமர்த்தியமாக  இவரின் கொலையை புலிகள் தலையில்  போட்டு பின்னாளில் செல்வி என்பவர் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

புலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்

 
முறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக
வாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை
வாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்
சுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய
ராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான
படுகொலைகளினிமித
்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே
நிர்வாணப்பட்டு நிற்கின்றனர்.........
மட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு
லண்டனுக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகளே

இந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த
ஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு
கஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த
இலக்கியவாதிகள் எப்படி மறந்தார்கள்
ஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்
டது
இவை எல்லாம் பேசு பொருள் அல்ல
(ரகு)
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்
அமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்
தலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்
நோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த
மனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்
கொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,
கோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக
இருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்
இந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்
அக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்
பற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக "முறிந்த பனை"
எனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்
ஆயுதக்குழுக்களின் கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,நீதிக்குப் புறம்பான
நடவடிக்கைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதும்,விமர்சிப்பதும
ானதொரு நூலாகும்.
ஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்
பொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த
ு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை
வெளிப்படுத்தியிருந்தமையால் அவர்களாலும் நெருக்குதல்களுக
்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு
சோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்
சேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)
இந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்
தழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20
திகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென
அறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று
மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி
திரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு
ரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட
பலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு
விலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு
அமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம
இருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட
காலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற
தென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே
அதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு
கண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.
மேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்
இறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:
Some Fundamental Questions for the future of Minorities and the
Erasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்
ஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia
மூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்
தன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்
அழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி
னால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு
வருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து
திடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது
இதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,
இதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு
பின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்
தோன்றுகின்றது.
- Karvanna Subhas
3 மணி நேரம் · பொது

Aathimoola Perumal Prakash
புலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி

 

4 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

நிர்மலா அவர்கள் தம்மால்தான் கைது ஆனார் என்பது 
புலிகளுக்கு தெரியும் அதனால்தான் இதை அவர்கள் 
அவருக்காக செய்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

காரணம்?

ஆதாரம்??

புத்தகம்  எழுதினார்?

சிகரெட்  குடித்தார்??

மது அருந்தினார்??

இவை  எதுவும்  புலிகள் கொல்வதற்கான காரணங்களாக  தெரிகிறதா??

எப்பொழுதுமே  புலிகள் 3 எச்சரிக்கைகள்  கொடுப்பார்கள்?

அப்படி  எதுவும்  நடந்ததாக  அவர்  எங்காவது  குறிப்பிட்டுள்ளாரா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.