Jump to content

நவீன ஸ்மார்ட் டிவிக்குள் மறைந்திருக்கும் ஆபத்து..!


Recommended Posts

புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது.

இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது.

கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி, படுக்கை அறையையும் ஸ்மார்ட் டிவி கேமரா மற்றும் மைக்ரோபோன் வாயிலாக கண்காணிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இன்டெர்நட் சேவையை நிறுத்துவதே இப்பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்று கூறும் நிபுணர்கள், அவ்வப்போது ஸ்மார்ட்டிவி தயாரிப்பாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர்.

https://www.polimernews.com/dnews/91224/நவீன-ஸ்மார்ட்-டிவிக்குள்மறைந்திருக்கும்-ஆபத்து..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ampanai said:

இன்டெர்நட் சேவையை நிறுத்துவதே இப்பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்று கூறும் நிபுணர்கள், அவ்வப்போது ஸ்மார்ட்டிவி தயாரிப்பாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர்.

தொழிநுட்ப பாவனையில், மனித ஊடாட்டமே பாதுகாப்பில் மிகவும் நலிந்த (weakest link ), இலகுவில் 
குறிவைக்கக்கூடிய  (lowest hanging fruit) இணைப்பாகும்.

முன்பு, வேறு திரிகளில் சொல்லி இருப்பது போலவே, எனவே தொழில் நுட்பத்துடன் மனித, ஊடாடலை, தொடர்பை  நீக்கினால், மனித உயிர், உணர்வு, உடமை பாதுகாப்பை பொறுத்தவரை, மதிக்க முடியாத மட்டத்திடற்கு வந்து விடும்.

ஆயினும்,    அப்படி 100% நீக்குவது என்பது முடியாத விடயம், 100% நீக்குவது என்பது தொழில்நுட்பத்தில் 
இருந்து விலத்தி இருத்தல், அதுவும் முடியாதது.

அதனால், இயலுமானவரை, தொழில் நுட்பத்துடன் ஊடாடல் முடிந்த பின்பு, அதன் இணைப்பை உங்களில் இருந்து துண்டித்து விடுங்கள், மின்னிணைப்பை துண்டிப்பதன் மூலமோ அல்லது வேறு வழியிலோ. உதாரணமாக, camera இன் பார்வையை மனித பிரசன்னத்தில் இருந்து நீக்கிவிடுவது போன்றவை.

ஆயினும்,இது அனைத்து  சந்தர்ப்பங்களிலும் செய்ய முடியாது, உதாரணம் fridge/freezer. காரணம் , நாம் அறியாமலே, தானியங்கித்தனமும் (automation), தொழில் நுட்பத்தின் இணைப்பாக்க வலையமைப்பும் (IoT, Networked Home) உருவாகி, ஊடுருவி, மனித வாழ்க்கையை வியாபித்துக்கொண்டிருக்கிறது.

ஆயினும், இந்த ஊடுருவலையும், வியாபகத்தையும், வாழ்க்கைப் பாணி தெரிவுகள் (life style choices and options) மூலம் கட்டுப்படுத்தவும் வாய்ப்புக்கள் இதுவரை இருக்கிறது. 

பஉதாரணமாக பிரச்சனை எதுவென்றால், தொலைக்காட்சி கருவியை நீங்கள் மின்னிணைப்பை துண்டித்து விட்டதாக வைத்து கொள்வோம், ஆயினும், நவீன, புத்திசாலித்தனமான தொலைக்காட்சி கருவி, இணையத்தோடு தொடர்பிலேயே இருக்கும்.  தொலைக்காட்சி  கருவியில் இருக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து, அதனை தொலைவில் இருந்தே, சிறிதளவு கால அளவுக்கு விழிப்படைய வைத்து இயக்க கூடிய சாத்திய கூறுகள் உண்டு.

இதை பொதுவாக விளக்கினால், தொல்நூட்ப கருவிகள் ஒவ்வொன்றிலும்  தனித்தனியாக மனித  பாதுகாப்பை மற்றும் அந்தரங்கத்தை உறுதிப்படுத்துவது, அதே கருவிகள் ஓர்  கலந்த  வலையமைப்பாக்கும் போது, அதே  தொல்நூட்ப கருவிகளின் தனித்தனியான  மனித  பாதுகாப்பிற்கும்   மற்றும் அந்தரங்கத்துக்கும் உத்தரவாதமில்லை.

மேலே சொல்லிய உதாரணத்தில், தொலைக்காட்சி கருவி, மின்னிணைப்பிலும், இணையம்,  மற்றும்  வீட்டின் தொடர்பாடல் உள்  வலையப்பிலும் இருந்து முற்றாக துண்டிக்கப்படும் போதே,  மனித  பாதுகாப்பை மற்றும் அந்தரங்கத்தை உறுதிப்படுத்துவது இயலுமான விடயமாகும்.

ஆனால், இது போன்றவற்றை,  இதுவரை,    வாழ்க்கைப் பாணி தெரிவுகள் (life style choices and options) மூலம் கட்டுப்படுத்தலாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஸ்மார்ட் டிவி கேமரா மற்றும் மைக்ரோபோன் வாயிலாக கண்காணிக்க முடியும்

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

உங்களைப் பார்த்து மோகன் மயங்கி விழாவிட்டால் சரி

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் கணணியில் எதனை செய்கிறோர்களோ அவை அனைத்தையும் கண்காணிக்கும் வல்லமை உடையவர்களும் செய்யலாம். 

கணணியில் உள்ள 'கமராவை' மூடி விட்டால், உங்களை அவதானிக்க முடியாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளுக்குத்தான் இப்படியே பயந்து பயந்து மூடிக்கொண்டே திரிவது?
பார்க்கிறதென்றால் பார்த்துட்டு போ என்று எல்லாத்தையும் நான் திறந்துதான் விட்டிருக்கிறேன். 

பாங்குகள் கிரெடிட் கார்டு விபரங்கள்தான் எப்படி பாதுகாப்பது?
என்று கொஞ்சம் கவனமாக இருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

நித்தியானந்தா மடத்துல சேர்ந்து பணிவிடை செய்றதா பதிவு போட்டிருக்கிறீங்க..!
'குமாரசாமியானந்தா' என காணொளியாகி ஏடாகூடமா ஆகிடப் போகுது..!!

வெப் காமிராவை வயர்களுக்கு போடும் 'இன்சுலேசன் டேப்' போட்டு மூடிவிடுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

எத்தினை நாளுக்குத்தான் இப்படியே பயந்து பயந்து மூடிக்கொண்டே திரிவது?

அரசாங்கம், எம்மிடம் இருந்து data  விளைச்சலை அறுப்பதை தவிர்க்க முடியாது.

ஆனால், தனியார், முக்கியமாக குளோபல் corporates and MNCs data  விளைச்சலை அறுப்பதை, இயலுமானவரை தடுக்கவேண்டும்.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு வழி இருக்கிறது..

கணணி பாவிப்பதாக இருந்தால்,

Control Panel>System>Device Manager>Imaging Device ல் க்ளிகினால் வரும் 'காமிரா'வை சுட்டி disable  செய்துவிடுங்கள்.

காமிரா நிரந்தரமாக Off ஆகிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இன்னுமொரு வழி இருக்கிறது..

கணணி பாவிப்பதாக இருந்தால்,

Control Panel>System>Device Manager>Imaging Device ல் க்ளிகினால் வரும் 'காமிரா'வை சுட்டி disable  செய்துவிடுங்கள்.

காமிரா நிரந்தரமாக Off ஆகிவிடும்.

 

ராஜவன்னியன்... அப்போ Skype பிலும் உறவினர்களுடன் கதைக்க முடியாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்

1 hour ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்... அப்போ Skype பிலும் உறவினர்களுடன் கதைக்க முடியாதே.

அதுவெண்டால் உண்மைதான்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கேற்ப disable அல்லது enable  செய்ய வேண்டி வரும்.

கணணியை தேவைக்கு மட்டும் பாதுகாப்பான, இணைய தளங்களைக் காண, வலு கவனமாக பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக https:// என்று இணையதளம் ஆரம்பித்திருந்தால் மட்டுமே ஓரளவு அத்தளம் பாதுகாப்பானது என நினைவிற் கொள்க. அதில் s என்பது secured socket layer என்பதைக் குறிக்கும்.

இணைய உலகம் மிக ஆபத்தானது, வெகு எளிதாக ஸ்பைவேர்கள்(Spyware) உங்கள் கணணிக்குள் புகுந்து உட்கார்ந்துவிட்டால் வெளியேற்றுவது கொஞ்சம் சிரமம்.

இந்த ஸ்பைவேர்களை தொலைவிலிருந்து இயங்கி உங்கள் அந்தரங்க, சொந்த விடயங்களை, வங்கிக் கணக்கு நுழைவுச்சொல்லைக் கூட திருட முடியும். மேலே குறிப்பிட்ட வெப் காமிராவைக் கூட (disable செய்திருந்தாலும்) இன்னொரு இடத்திலிருந்து இயக்க முடியும்.

கவனம்.

மிக முக்கியமாக தனி அறையில் பிரத்யேகமாக இருக்கும்பொழுது (குமாரசாமி அண்ணர் கவனிக்க..! 😀) அனைத்து காமிராக்களின் மின் இணைப்பை துண்டித்து விடுங்கள், முடிந்தால் திடமான டேப் (solid tape) போட்டு காமிராவை மூடிவிடுங்கள்.

கேரளாவில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை கீழேயுள்ள இணைப்பில் பாருங்கள்.

https://english.manoramaonline.com/districts/kozhikode/2019/09/25/smart-tv-mounted-on-the-wall-may-catch-you-with-pants-down.html

பிரச்சினைகள் வருமுன் காப்பதே நல்லது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் ஆன 'ஸ்மார்ட்' டிவி: பொதுமக்கள் உஷார்

திருவனந்தபுரம்: "ஸ்மார்ட் டிவி"யின் கேமிரா அணைக்கப்படாததால், அந்த வீட்டு பெண்ணின் உடை மாற்றும் வீடியோ பதிவாகி வெளியே பரவியது. இதனால் அந்த குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

கேரளாவை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். சமீபத்தில் 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆபாச படம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில், அவரின் மனைவி, கேரளாவில் உள்ள சொந்த வீட்டில் உடைமாற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனையறிந்த அவரது குடும்பத்தினரும் இந்த வீடியா எப்படி எடுக்கப்பட்டது என்பது தெரியாமல் குழம்பி தவித்தனர்.

தொடர்ந்து, வீட்டில் வெளி நபர் யாரோ ரகசிய கேமரா வைத்து, அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் என முடிவு செய்து, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். வீட்டில் ரகசிய கேமரா எதுவும் கிடைக்கவில்லை.

வெளிநபர் வருவதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரும், வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை பரப்பிய நபர்களை தேட துவங்கினர். வீட்டின் படுக்கை அறையில், கேமரா வைத்தது யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, காட்சி படம் பிடிக்கப்பட்ட கோணத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கோணத்தில் ஒரு ஸ்மார்ட் டிவி தான் இருந்தது. பிறகு தான் எங்கிருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்பதே புரிந்தது.

அந்த அறையில் இருந்த ஸ்மார்ட் டிவியில் இருந்த கேமிரா தான் சம்பந்தப்பட்ட பெண், உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்தது தெரியவந்தது.

அந்த வீட்டில் முன்பு எல்.இ.டி டிவி இருந்தது. கணவர், சொந்த ஊர் வந்த போது, ஆண்டிராய்டு டிவி வாங்கி கொடுத்துள்ளார். அவர், வெளிநாடு சென்ற பின்னர், அந்த டிவி மூலம், ஸ்கைப் வசியைப் பயன்படுத்தி வீடியோ கால் பேசி உள்ளார்.

இப்படி ஒரு நாள் பேசிவிட்டு டிவியை அணைத்த அந்த பெண், டிவியில் இருந்த வீடியோவை அணைக்க மறந்துவிட்டார். ஆனால், கேமரா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இந்த வீடியோ கணவரின் கம்ப்யூட்டருக்கு சென்றுள்ளது, அப்போது வேறு யாரோ தற்செயலாக கம்ப்யூட்டரை ேஹக் செய்துள்ளனர். அவர்களிடம் அந்த வீடியோ மாட்டிக்கொண்டது. இந்த வீடியோ தான் கணவரின் போனுக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட் சாதனங்களில் கவனம்

கேரளாவில், ஒரு மாதத்தில் மட்டும் 200 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களை பரவ செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, தங்களது சாதனங்கள் மீது பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சைபர் குற்றங்கள் குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் இருக்கும் போது, அதில் மின்சாரத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மொபைல் போனில், இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருந்தாலும், அந்த போனை பயன்படுத்துபவர் எங்கு சென்றார். எங்கு உண்வு உண்டார் என்பது உள்ளிட்ட அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என போலீசார் கூறுகின்றனர்.

பெரும்பாலான மக்கள், சைபர் குற்றங்களில் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியாமல் உள்ளனர். மொபைல் போன்களில், சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, அந்த செயலி, அவர்களின் தகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்பதை தெரிந்து வைத்திருப்பது இல்லை. மேலும் சில செயலிகள், பதிவிறக்கம் செய்யும் போது, அவை, பயன்பாட்டாளர்களின் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த அனுமதி கேட்கும். இவை தான், தகவல் கசிய முக்கிய காரணமாக உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே! இனி மேல் டொயிலட்டுக்குள்ள போன் கொண்டு போறதை நிப்பாட்ட வேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 7:13 AM, ராசவன்னியன் said:

வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் இருக்கும் போது, அதில் மின்சாரத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


இணையத்தில் இருந்தும்,  உள் வீட்டின் Network இல் இருந்தும் துண்டித்தால் மட்டுமே smart tv,  ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டதாக  கருதலாம்.

ஏனெனில், அனைத்து smart tv யிலும், மின்கலங்கள் (cmos, சாதாரண pc, camera  வில் உதாரணம்) உண்டு.     

உள் வீட்டு Network,  Ethernet தொடர்பு ஆயின், PoE  (ethernet ஊடான மின்சக்தி  வழங்கல்) சாத்தியக்கூறுகள் இருக்கிறது, PoE இல்லாவிட்டாலும்.

இவை அனைத்துமே, smart tv இல் இருக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து, attack vectors ஆகுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 8:46 PM, ரதி said:

அட கடவுளே! இனி மேல் டொயிலட்டுக்குள்ள போன் கொண்டு போறதை நிப்பாட்ட வேணும் 

ஓ.......அந்த பழக்கமெல்லாம் இருக்கோ. நியூஸ் பேப்பருக்கு பதிலாய் போன்🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.