Jump to content

இலங்கை உலகிலிருந்து துருவமயப்படுவதை தவிர்க்க ரணிலின் பாத்திரம் தேவையாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உலகிலிருந்து துருவமயப்படுவதை தவிர்க்க ரணிலின் பாத்திரம் தேவையாகும்
***********************
1)
நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றில் அக்கிராசன உரை நிகழ்த்துவதற்கு வசதியாக பாரம்பரிய அடிப்படையில் இவ்வொத்தி வைப்புக்கு அரசமைப்பில் வசதி செய்யப்பட்டிருந்தாலும்; ஜனாதிபதிக்கு நாடாளுமன்றில் நெருக்கடி ஏற்படுகிற வேளைகளில் அதனைக் கையாளுவதற்கு வசதியாக இவ்வரசமைப்பு சரத்து உபயோகப்படும் வகையில் ஜே.ஆரினால் வடிவமைக்கப்பட்டது.

பிரேமதாச தனக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவிருந்த ஒழுக்கவழுப் பிரேரணையை கையாழுவதற்காக அவர் நாடாளுமன்றத்தை ஒரு முறை ஒத்திவைத்திருந்தார்.நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் பல தடவைகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமையை காணமுடிகிறது.

ஜனாதிபதி கோத்தபாயவினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது, அது மீள ஆரம்பிக்கும் போது அவர் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள தனது கொள்கைத்திட்ட அக்கிராசன உரையை நிகழ்த்துவதற்கானதாக இருக்கிறது.

ஆயினும்; ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை கையாள்வதற்கான கால அவகாசத்தை அவருக்கு பெற்றுக்கொடுக்கும் உள் நோக்கத்தையும் இவ்வொத்திவைப்பு உள்ளடக்கியுள்ளதா என்று எவரும் சந்தேகிக்க முடியும்.

2)
மஹிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நீண்டகாலமாக ஓர் அரசியல் புரிந்துணர்வு நிலவி வருகிறது. மஹிந்த எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் ரணில் ஆளுங்கட்சி தலைவராக இருந்து கொண்டு மஹிந்த எதிர் நோக்கிய உட்கட்சி பூசல் மற்றும் சேறு பூசல்களில் இருந்து அவரை காப்பதில் உதவி செய்திருக்கிறார்.

இவ்வாறே, ரணில் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எதிர் நோக்கிய மேற்சொன்ன வகையிலான பிரச்சினைளில் இருந்து விடுபடுவதற்கு மஹிந்த ரணிலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரணில் தற்போது எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக இப்படியொரு உதவிக்கரத்தை இன்று மஹிந்த நீட்டமாட்டார் என்பதற்கில்லை.

ரணில் பிரதமராக பதவி வகித்த கடந்த நான்கரை வருடங்களாக, அவரது கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளைச்
சேர்த்த அமைச்சர்கள் செய்த ஊழல்கள்,பெற்றுக்கொண்ட இலஞ்ச இலாவண்யங்கள் பற்றி திணைக்களங்களில் முக்கிய பதவிகள் வகித்த ரணிலின் விசுவாசிகள் அவருக்கு தொடர்ந்தேர்ச்சியாக ஆதாரங்களை வழங்கிவந்தனர்.

இவ்விசுவாசிகள் எழுதிய கடிதங்களளையும், கொடுத்த கோப்புகளையும்; ரணில் மஹிவுக்கு ஒப்படைக்க தயாராக இருப்பதாக அறியமுடிகிறது.

3)
மைத்திரி அரசினால் அன்று புதிதாக உருவாக்கப்பட்ட நிதி ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் எப்.சீ.ஐ.டி பிரிவு கலைக்கப்படாமல் தற்போது பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளமை நிதி மோசடிகளை விசாரிப்பதில் புதிய அரசாங்கம் புதிய அணுகு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதை தெரிவிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் பல கோப்புகள் உள்ளமையையும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். மட்டுமல்ல; அவர் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறும் நோக்கமில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதும் நோக்கற்பாலது. மத்திய வங்கி கொள்ளையில் ரணிலின் பாத்திரம் இருக்கவில்லை என்பதை மைத்திரி சாட்சி பகரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

மைத்திரி அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் முடிவுகள் தற்போது புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கும். மைத்திரியும் மஹிந்தவும் முரண்பட்டிருந்த காலத்திலும்; மைத்திரியும் கோட்டாவும் புரிந்துணர்வுடன் கூடிய நண்பர்களாகவே இருந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் ஏப்பிரல் 21 தற்கொலைத் தாக்குதல் பற்றிய நாடாளுமன்ற தெரிவிக்குழு அறிக்கையும், இது தொடர்பாக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட இருக்கிற ஆணைக்குழுவின் எதிர்கால அறிக்கையும் பல முன்நாள் அமைச்சர்களின் அரசியல் திருகுதாளங்களையும் புத்தி பேதலிப்புகளையும் வெளிக்கொணர்ந்து அவர்களை பூச்சியமாக்கிவிடும். சிலவேளை அவர்களை சிறைச் சுவர் பூச்சிகளாக ஆக்கவும் கூடும்.

4)
ரணில் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆழுமையாகும். இவர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, சட்டவல்லுனரும், சிறந்த இராஜதந்திரியும், பொருளாதார நிபுணருமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக நூற்றாண்டுகால மேற்குலக நாகரீக மாற்றங்களை உள்வாங்கி செயல்படும் அறிஞர் என்பதை எமது தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான அறிவை எமது தலைவர்கள் கொண்டிருக்கவுமில்லை.

மத, இன புறக்கணிப்புவாதத்தையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளர்த்தாமல் இலங்கையை காப்பாற்ற முடியாது என்பதை நம்பிய மேன்மகன் ரணில் என்பதை உலகம் நம்பிய அளவு இலங்கையர் நம்பவில்லை.இதனால்தான் மக்கள் தொடர்பில் பலவீனமானவர் என்ற கருத்து தத்துவார்த்தரான 

ரணிலின் மேல் பூசப்பட்டது.

மேற்குலக மயத்தையும்,நவீனமயமாக்கலையும் ஐயந்திரிபுற விளங்கிக்கொண்ட ரணில் மேற்கு மயமாக்கலை தவிர்த்து நவீனமயமாதலை மட்டும் உள்வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்று நம்பினார்.

இந்நம்பிக்கையை அறிஞர்கள் கமாலிசம் என்பர். துருக்கிய அரசியல் மடைமாற்றத்தின் ஞானியான முஸ்தபா கமால் அத்தாதுர்க் அவர்கள் உஸ்மானிய பேரரசின் சிதைவுகளில் இருந்து ஒரு புதிய துருக்கியை உருவாக்கியவராகும்.ரணிலுக்கு கமாலிலின் பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பு கிட்டாமை துரதிஷ்டமாகும்.

இலங்கைத் தமிழர்,இலங்கை முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய மூன்று சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசைகளின் மீது ரணில் அக்கறை கொண்டு அரசியல் செய்தமைக்கு அவர் நம்பிய கோட்பாடுகள் காரணமாயமைந்தன.

5)
ரணில், இலங்கை அரசியலில் இருந்து விலகினால் சிறுபான்மையினர் அடைய இருக்கும் நட்டத்தை இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு முஸ்லிம் மற்றும் மலையக சுய இலாப அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதமையால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் உள் விவகாரங்களில் தலையீடு செய்கிறார்கள்.ரணிலை கட்சியின் தலைமையில் இருந்தும், எதிர்க்கட்சி தலைமையில் இருந்தும் தூக்கி வீச முனையும் ஐ.தே.கட்சி தரப்புடன் இணைந்து இவர்கள் செயல்படுகிறார்கள் .

சிறுபான்மைத் தலைவர்கள் செய்த, செய்கின்ற அரசியல் அறிவீன செயற்பாடுகளினால் தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக தலைவர்களை பலிகொடுக்கும் படலத்தை எதிர்பார்த்து எதிர்காலம் காத்திருக்கிறது.

6)
ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியலில் இருந்து அவரது மரணம் வரை விலகமாட்டார். அவர் சர்வதேச நிறுவனமொன்றின் பிராந்திய தலைவராகவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனம் ஒன்றின் தலைவராகவோதான் தனது இறுதிக் காலத்தை உபயோகமாக கழிப்பார்.இக்காலத்துள் இவரது ஆதிக்கம் இலங்கையில் இருந்தேயாகும்.

இதற்காக, புதிய அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத ஆசீர்வாதம் இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டில் உள்ளடங்கியுள்ளது.

 
நன்றி  பசீர் 
 
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.