Jump to content

சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண் கடத்தப்பட்ட சம்பவம் – சி.ஐ.டி. முக்கிய தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

swiss-22.jpg

சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண் கடத்தப்பட்ட சம்பவம் – சி.ஐ.டி. முக்கிய தகவல்!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய தமிழ் பெண்ணின் கணவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு தமிழ் பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டு சில மணிநேரம் தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக மனிதப் படுகொலை விசாரணைப்பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அதன் முதல் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதன்போது அறிக்கையை ஆராய்ந்த நீதவான், குறித்த பெண்ணை டிசம்பர் 9ஆம் திகதிவரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அவரின் கணவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் அந்தப் பெண்ணின் கணவர் கடத்தல் குறித்து சில தகவல்களை அறிந்திருந்தாலும் அவை விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையில்லை. எனவே அவருக்கும் பயணத்தடை விதிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை நிராகரிக்கிறேன் என கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை  இவ்விடயம் குறித்து விவரித்த சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்க, கடத்தலிற்கு முன்னதாக பெண்ணின் நடமாட்டம் குறித்த கூகிள் வரைபடங்கள், கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட வாகனத்தின் படங்களை சுவிஸ் தூதரகம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சுவிஸ் தூதரகம் வழங்கிய முறைப்பாட்டில், குறித்த பெண் அதிகாரி வெள்ளை காரில் கடத்தப்பட்டதாகவும் அவரை உள்ளேயே அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் புரிந்துள்ளதாகவும், அவரது கையடக்கத் தொலைபேசி பலாத்காரமாக பறித்து அதில் இருந்த தகவல்களை பெற்றதாகவும் சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தூதுவர் சார்பில் அந்த தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி அதில் கையொப்பம் இட்டுள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த நவம்பர் 25ம் திகதியே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதுடன் முறைப்பாடு கிடைக்கப் பெற்ற நவம்பர் 27 முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இது தொடர்பாக சி.ஐ.டி. அதிகாரிகள் சுவிஸ் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்படும் தூதரக பெண் அதிகாரி இலங்கை தமிழ் பெண். அவர் அந்த தூதரகத்தில் விசா அல்லது குடிவரவு விவரங்கள் தொடர்பிலான பிரிவில் சேவையாற்றியுள்ளார். அந்த பெண் தொடர்பிலான அடையாளத்தையும் முறைப்பாட்டின்போது தூதரகம் வழங்கவில்லை.

கடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்ணின் கணவர் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். அவர்களது வீடு மருதானை மாளிகாகந்த பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அதிகாரிகள் வாக்குமூலம் பெற சென்றபோதும் வீடு பூட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இதுவரை வாக்குமூலம் வழவில்லை. தூதரகமும் அவரை முன்னிலைப் படுத்தவில்லை. அவர் கணவர், பிள்ளைகள், தாய் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதவான் லங்கா ஜயரட்ன, சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்கவிடம் கேள்விகளை தொடுத்து விடயங்களை தெளிவு படுத்திக்கொண்டார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், “இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது பாரிய குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் முதலில் சி.ஐ.டி.க்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.

அவர் வாக்குமூலம் வழங்கும்வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கிறேன். எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சி.ஐ.டி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும்” என கூறி வழக்கை எதிர்வரும் 9ம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

http://athavannews.com/சுவிஸ்-தூதரகத்தில்-பணியா/

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

இதன்போது அறிக்கையை ஆராய்ந்த நீதவான், குறித்த பெண்ணை டிசம்பர் 9ஆம் திகதிவரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்து உத்தரவிட்டார்.

கடத்தல் காரரிடமே வாக்குமூலம் கொடுக்க நிர்பந்தம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.