Jump to content

சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்வறாம் எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது.

இந்த 7 சிறை கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ்பாப்னம் குருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (36) என்பவரை சமகளம் செய்தியாளர் சந்தித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை திடீரென கூப்பிட்டு விடுதலை செய்வதாக கூறியதாகவும் மேலதிக அறிவித்தல் வரும்வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கையெழுத்து இடுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பலர் விடுதலைசெய்யப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் எமது செய்தியாளரிடம் கூறினார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/சத்தம்-சந்தடி-இன்றி-7-தமிழ/

Link to comment
Share on other sites

மிகுதி அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்றால் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை என்றால் மிக்க மகிழ்ச்சி

இதை தமிழ் தேசியக்கூத்தமைப்பிடம் சொல்லாதீர்கள் பிறகு நாங்கள் தான் விடுதலைக்கு உதவினோம் என சொல்வார்கள் 

Link to comment
Share on other sites

படையினரை விடுதலை செய்யும்போது எதிர்ப்பு வராமலிருக்க தட்காப்பு நடவடிக்கைகள். இருந்தாலும் இவர்களுக்கு விடுதலை கிடைத்தது சந்தோசம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எப்படி குத்தினாலும் அரிசியாகட்டும்......அந்த பிள்ளைகள் இனியாவது  தத்தமது குடும்பங்களுடன் இணைந்து சந்தோசமாக வாழட்டும்.....!

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

யார் எப்படி குத்தினாலும் அரிசியாகட்டும்......அந்த பிள்ளைகள் இனியாவது  தத்தமது குடும்பங்களுடன் இணைந்து சந்தோசமாக வாழட்டும்.....!

மிக சரி. இவர்களை வைத்து அரசியல் விளையாடுவது எமக்கு சரிவராது. பாராளுமன்ற தேர்தலை கண்வைத்து எல்லாரையும் விடுதலை செய்தால் எமக்கு நன்மையே. இதட்கு முன்னர் இருந்த அரசால் ஏன் இவாறு செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
 

Link to comment
Share on other sites

உள்நாட்டில் ஆரவாரம் எதுவும் இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்தாலும். வெளிநாடுகளில் இது பீரங்கிப் பிரசாரமாக வெடிக்கவைக்கப்படும் என நம்பலாம். சுவியவர்கள் கருத்துப்படி யார் எப்படிக் குத்தினாலும் அரிசியாகட்டும். தமிழ்த் தலைகள் மெளனவிரதம் அனுட்டிப்பது நன்மைதரும்.

Link to comment
Share on other sites

2 hours ago, மாங்குயில் said:

அடுத்த விடுதலை, பிள்ளையான்

வெளில வரவேண்டிய ஒராள் தான்.

எய்த்தவன் வெளில நிக்கேக்க இந்தாள் எதுக்கு உள்ள இருக்கோணும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.