Jump to content

இலங்கை பெருமழை: பல இடங்களில் மண்சரிவு - மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பெருமழை: பல இடங்களில் மண்சரிவு - மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

இலங்கை வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்ற நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) மாலை விடுத்தது.

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகர நிலைமையினால், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடனான மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் திணைக்களத்தின் அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம்

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கண்டி - உடுதும்பர பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெள்ளம்

இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பதுளை பகுதியில் இன்று மாலை பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

பதுளை - பசறை பிரதான வீதியின் பத்தாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவி வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

இலங்கை வெள்ளம்

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பதுளை - பசறை வீதி அபாயகரமான வீதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பதுளை - பசறை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இலங்கை வெள்ளம்

அத்துடன், எல்ல - வெல்லவாய வீதியிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்து பல மணிநேரம் கடும் மழையுடனான வானிலை நிலவி வருவதாக பிரதீப் கொடிபிலி கூறுகின்றார்.

பதுளை - லுணுகல பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று மாலை ஒரு தொகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவி வருகின்ற நிலையில், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய இடங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் பல மணிநேரம் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கொழும்பு பகுதியில் பொரள்ளை, தும்முல்ல, ஹோட்டன் பிளேஸ், டவுன்ஹொல் ஆகிய பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ள அதேவேளை, குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் பல மணித்தியாலங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் விபரம்

இலங்கையில் கடந்த சில வாரக் காலமாகப் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் 1764 குடும்பங்களைச் சேர்ந்த 5843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையம் இறுதியாக இன்று வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

நுவரெலியா - வலபனை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருந்தனர்.

மற்றுமொரு சிறுவன் இந்த மண்சரிவில் காணாமல் போன நிலையில், அவரின் சடலத்தைக் கண்டெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரிதும் பாதிக்கப்பட்ட சுமார் 900க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50662418

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Si-Mp1.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.