Jump to content

யேர்மனியில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!!

image.jpg

ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது.

யேர்மனியில்  ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்
 என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். 

இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யேர்மனி நாட்டில்  4.12.2019 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன் முறையாக இரண்டு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுவதின் மூலம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அறிவித்த தமிழனின் சமத்துவச் சிந்தனையினை ஐரோப்பியர்கள் மீண்டும் தெரிந்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது

.ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு சிலைகளையும் சென்னை நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழ் மரபு சார்ந்த கலை ஆய்வுகளில் நிபுணத்தும் பெற்ற ஓவியர் சந்ரு அவர்கள் வடிவமைத்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும்.

இந்தச் சிலைகளை நிறுவும் நிகழ்வு யேர்மனியின்  பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில அரசின் ஒப்புதலோடு, தமிழ் மரபு அறக்கட்டளையும் லிண்டன் அருங்காட்சியகமும் இணைந்து  நடத்துகின்றன.  மேலும் இந்நிகழ்வில் 1803 ம் ஆண்டு ஆகஸ்ட் ஃப்ரெடரிக் காமரர் என்பவர் யேர்மனிய மொழியில் மொழி பெயர்த்த திருக்குறள் மொழிபெயர்ப்பும், 1856ம் ஆண்டு டாக்டர்.கார்ல் கிரவுல் என்பவர் மொழிபெயர்த்த திருக்குறளின் முழுமையான யேர்மனிய மொழி பெயர்ப்பும், தமிழக ஆய்வாளர் கௌதம சன்னா அவர்கள் எழுதிய 'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்கிற நூலும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் திரு.கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், உலகத்தின் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு அடங்கிய விழா மலரும் வெளியிடப்படுவது மேலும் சிறப்புக்குரியதாகும்.

இந்த நிகழ்வில் சர்வதேச திருக்குறள் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களும் தமிழ்ச்சங்கங்களின் தலைவர்களும் உரைகளை நிகழ்த்த உள்ளனர். நானும் இதில் உரையாற்றுகிறேன் என்பது பெருமைக்குரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். மேலும் ஐயன் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் முதன் முறையாக நிறுவப்படும் இந்த நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பினர் முன்னெடுக்கும் முயற்சிக்கு எனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐரோப்பிய மண்ணில் ஐயன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும், அவ்வமைப்புடன் இணைந்துப் பணியாற்றும் யேர்மனி அரசின் லின்டன் அரசு அருங்காட்சியகத்திற்கும், நிகழ்க்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் றோக்தர். சுபாஷிணி கனகசுந்தரம் மற்றும் அவ்வமைப்பின் யேர்மனி கிளை நிர்வாகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் வரலாற்றிலும் உலகத் தமிழர் பதிவுகளிலும் இந்நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது பெருமைக்குரியதாகும்.

https://tamil.asianetnews.com/politics/vck-party-leader-thirumavalavan-statement-regarding-thiruvalluvar-statue-in-germane-q1zizw

டிஸ்கி :

யேர்மனிய கள உறவுகள் ஒழுங்கு செய்த நிகழ்ச்சியா..? கலந்து கொள்வினமா.? 💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.