Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக களமிறங்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் முயற்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய, சிறுபான்மையினங்களின் முக்கிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மரச்சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு வெளில்- குறிப்பாக கொழும்பில்- கூட்டாக களமிங்குவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த 19ம் திகதி நடந்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயிர்பீட கூட்டம் நடந்தபோது, சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு குறித்து கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இந்த கூட்டணி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு, ரவூப் ஹக்கீம் சாதகமாக பதிலளித்துடன், பேச்சு முயற்சிகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.pagetamil.com/91836/

Link to comment
Share on other sites

அப்போ ரிசார்ட் பதீயுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருடன் கூட்டு  சேரும்? எல்லாருமே அவரை கை விட்டிடீர்களா? இருந்தாலும் இந்த கூட்டு இலகுவாக இருக்காது.  அமைப்பாறையில் ஹாரிஸ் உடன் சிக்கல் உருவாகும்.  இருந்தாலும் சிங்கள அரசை கட்டுக்குள் கொண்டுவர இப்படியான ஒன்று கடடயம் தேவைப்படும். ஒரு சந்தேகம், சோனிகள் தொப்பி பிரட்டி விடடால்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற முயற்சி ஒன்றும் இலங்கை அரசியலில் புதிதல்ல. முன்பும்  பலமுறை தமிழ் தரப்பிலிருந்து கூட்டு  அரசியலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது தமிழர்களுக்கு எந்தளவு சாதகமானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் ஒன்று சேர்ந்து அரசியல் செய்யும் பட்சத்தில் பெரும்பான்மை இன மக்கள் இன்னும் அதிகமாகவே ஒன்றிணைந்து தமது அரசியல் பலத்தையும், இனவாதத்தையும் நிலைநிறுத்தவே முயற்சிப்பார்கள். அதுபோக சிறுபான்மை மக்களின் அரசியல்  கூட்டுறவில் சரியான வழிநடத்தல், புரிந்துணர்வு, அரசியல் திட்டம் என்பவற்றுடன் இஷ்திரமான  அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் பங்காளிகளுக்கிடையே இல்லாதுபோனால் கூட்டுறவுக்கு பதிலாக இனங்களுக்கிடையே மேலும் விரிசல் வருவதும் சாத்தியம்.

தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள்ளாகவே கூட்டு அரசியல் செய்ய விருப்பம் கொண்டவை  அல்ல. கட்சியின் அங்கத்தவர்கள் தமது கருத்து பேதங்களை பேசி தீர்ப்பதற்கு பதிலாக தமக்கென சொந்தமாக புதிய கட்சிகளை உருவாக்கி கொண்டதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடு தமிழ் தலைவர்களிடையே  பாரிய அரசியல் ரீதியான பிரிவினைகளையும் போட்டியையும் நானா நீயா என்ற இழுபறியான நிலையையும் தோற்றுவித்தது.

 

Link to comment
Share on other sites

18 hours ago, vanangaamudi said:

காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது

இது போன்ற ஆபத்தான வேலைகளை மட்டுமே தமிழரசுக் கட்சி செய்து வருகிறது.

சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுவைச்சு தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்த தமிழரசுக் கட்சி இப்ப முஸ்லீம் மதவெறியர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்ய முயல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த செருப்படி வாங்கப்போகுது கூட்டமைப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி

தொப்பி  மட்டும்  கவனம்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.