Jump to content

அரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்


Recommended Posts

ulloor-arasiyal-620x330.jpg

“தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேர் சத்தமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் செய்தி வெளியானமை அரசியல் கைதிகளின் – அவர்களின் உறவுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதிமுக்கியமாக சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளும் – அவர்களின் உறவுகளும் மேலும் அச்சத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது “அரசியல் கைதிகளை விடுவிப்பேன்”, என உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேணவா தமிழ் மக்களிடம் இருந்தது. இப்போது அது சாத்தியமாகி உள்ளதாகத் தெரிகிறது. 7 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கசிந்துள்ளன. அந்தச் செய்திகள் வெறுமனே அரசியல் கைதிகள் விடுதலை என்று மட்டுமே அறிக்கையிட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலையானவர்கள் ஓரிரு வருடங்கள் முற்கூட்டியே விடுதலை பெற்றிருக்கிறார்களே தவிர, அவர்கள் விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களோ அல்லது குறுகிய தண்டனைக்காலத்தை முடித்து தண்டனை முடிவதற்கு நீண்டகாலம் இருப்பவர்களோ விடுதலை செய்யப்படவில்லை. அல்லது பிள்ளைகள் அநாதைகளாக நிற்க சிறையிருக்கும் தந்தையர்களோ விடுதலை செய்யப்படவில்லை. இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தையும் விட அதிக காலம் சிறையிலிருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது நீண்டகாலமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் அரசியல் கைதிகளை சம்பிரதாயபூர்வமாக விடுவித்து வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்ய ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களால் முடியும். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் இவ்விடயத்தில் எதைச் செய்தாலும் தென்னிலங்கையில் கேள்வி கேட்பதற்கு எவரும் இல்லை என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனால், தற்போது தென்னிலங்கை அரசியல் களநிலவரம் அப்படியல்ல.

தொடர் தோல்விகளால் தலைமைத்துவ மாற்றத்தை சந்திக்கும் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை பற்றவைத்துக் குளிர்காய்ந்த கட்சியே இந்தக் கட்சிதான். முதன்முதலில் தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்படுத்தியவர்களே இந்தக் கட்சியினர்தான். இவற்றுக்குப் பிறகே ஆட்சியைப் பிடிப்பதற்கும் அதைத் தக்கவைக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் இனவாதத்தை கையில் எடுத்தன. இந்நிலையில் ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்ரமசிங்க வந்தபின், ஓரளவு சமதான அணுகுமுறை தமிழர்களுடன் கையாளப்பட்டது. ஆனால், இனவாத குரோதத்தில் மூழ்கியுள்ள தென்னிலங்கை தரப்புகளால் இதைப் பொறுக்க முடியவில்லை. இதனால்தான், நிலையான ஆட்சியையோ – ஜனாதிபதி பதவியையோ கால் நூற்றாண்டு காலத்தில் பெற அக்கட்சியால் முடியவில்லை.

கிட்டத்தட்ட தனது அரசியல் அந்திம காலத்தில் நிற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குப் பிறகு, ஐ.தே.கவின் தலைமைத்துவத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. மற்றைய கட்சிகளை விட இனவாதத்தில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்குமாற்போல் வேலைத்திட்டங்கள், பிரசார உத்திகள் கட்டமைக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில், இந்தச் சாதாரண விடயத்தைப் பெரிதாக்கி ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி தணடனைக்காலம் முடிவுற சற்று முன்னராக 7 அரசியல்கைதிகளை விடுவித்தது. இதைப் புரிந்து கொள்ளாதவர்களாக ஊடகங்கள் – முக்கியமாக இணைய ஊடகங்கள் “எக்ஸ்குளூசிவ்” செய்தி அறிக்கையிடுகிறோம் என்ற பெயரில் இதனை அம்பலப்படுத்தி மீதமிருக்கும் அரசியல்கைதிகள் – அவர்களின் உறவுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலையை அரசு தமக்கான பெரும் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தியிருக்க முடியும். அதுவும் தண்டனைக் காலம் முடிவடைய குறுகிய காலம் இருப்பவர்களை விடுவிப்பதால் அவர்களுக்கு ஒரு பாதகமும் ஏற்படப்போவதில்லை. மாறாக நன்மைகளையே அதிகளவில் பெறமுடியும். ஆனால், அவர்கள் இதைச் செய்யாத நிலையில் ஊடகங்களின் அறிக்கையிடல் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.

அரசியல் கைதிகளாக இருந்த ஜே.வி.பியினரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா விடுதலை செய்தபோது, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பலத்த மௌனம் காத்தன. காரணம், அரசியல் கைதிகளின் விடுதலையை அவை வரவேற்றன – அவசியம் எனக் கருதின. எனவே அவை சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டன. ஆனால், தமிழ் ஊடகங்களோ தமக்கான பொறுப்புணர்வை மறந்து – முழுமையான அறிக்கையிடல் இன்றி முந்திக் கொடுக்கிறோம் – எக்ஸ்குளூசிவாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் சிறு தொகை வாசகரை அதிகரிக்கும் நோக்கில் பொறுப்பற்று செயற்படுகின்றன.

இனியாவது இந்த விடயத்தில், பொறுப்புணர்ந்து – எதிக்ஸ் ஒவ் ஜேர்னலிஸத்தைப் பின்பற்ற வேண்டும். ஊடகங்கள் தங்களின் கையில் தமிழ் சமுதாயத்தின் நன்மை இருக்கிறது என்பதைப் பொறுப்புணர்தல் அவசியம்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதால், இனி இவ்வாறான விடயங்களில் கவனமுடன் – பொறுப்புடன் ஊடகங்கள் செயற்பட வேண்டும் எனக் கருதியே இந்தப் பதிவு.

http://thamilkural.net/?p=12151

Link to comment
Share on other sites

6 hours ago, கலையழகன் said:

இனியாவது இந்த விடயத்தில், பொறுப்புணர்ந்து – எதிக்ஸ் ஒவ் ஜேர்னலிஸத்தைப் பின்பற்ற வேண்டும். ஊடகங்கள் தங்களின் கையில் தமிழ் சமுதாயத்தின் நன்மை இருக்கிறது என்பதைப் பொறுப்புணர்தல் அவசியம்.

எதிக்ஸ் ஒவ் ஜேர்னலிஸம் என்பது மெல்ல மெல்ல சாகத்தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. 

எமது நாட்டில் மட்டுமல்ல உலகம் எங்கும் இந்த நிலை. 

சமூக வலைத்தளங்கள், அரசியல் இலாபம், மற்றும் பணம் சம்பாதிக்கும் ஆசை  என்பனவும் காரணமாக அமைந்து விடுகின்றன.  

Link to comment
Share on other sites

Ethics of journalism 😃😃😃😃😃😃

உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா ??  கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா  ??? 

கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு!

 

நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசியல் கைதிகள் எனக் குறிப்பிட்டு சிலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

https://newuthayan.com/அரசியல்-கைதிகளை-விடுவித்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.