Jump to content

தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்

image_de6fc89d96.jpg

 

ஒருவாறு ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. அதன் சலசலப்பு அடங்கும் முன், அடுத்த தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது.   

வழமைபோல, இம்முறையும் தமிழர் உரிமை, தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்று ‘பட்டங்கட்டி’ ஆட, வழமைபோலவே எமது அரசியல் தலைமைகள் தயாராகின்றன.   

சொன்ன பொய்க் கதைகளைத் திருப்பிச் சொல்ல இயலாது. எனவே, புதிய பொய்களைச் சொல்ல வேண்டும்; அல்லது, பழைய பொய்களுக்குத் தூசி தட்டி, வண்ணம் பூசி, புதுவடிவில் கொடுக்க வேண்டும்.   

நம்முன் உள்ள கேள்வி யாதெனில், இன்னும் ஒரு முறை ஏமாறுவதற்கு, நாங்கள் தயாரா என்பதுதான்.   

இன்னுமொருமுறை மட்டுமன்றி, என்றென்றைக்கும் ஏமாற்றுவதற்கு ‘அவர்கள்’ தயாராகவே இருக்கிறார்கள்; அதில், ஐயப்பட ஒன்றுமில்லை.   

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழரைத் திசை மாற்றுவதற்கான புதிய பொய் ஒன்று, தயாராகவே இருக்கிறது. அது தேர்தல் அறிவிக்க முன்னரே, சொல்லப்பட்டு விட்டது. இனிவரும் காலங்களில், அதைச்சுற்றிப் பரிவட்டம் கட்டி, ஊடகங்கள் ஆடும்.   

அந்தப் பொய் யாதெனில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கு, தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பெருமளவில் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதுதான் அந்தப் பொய் ஆகும்.   

இந்தப் பொய்யை, உண்மை போல் அரங்கேற்ற, தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்றன, மெதுமெதுவாய் ஊட்டி வளர்க்கப்படும். இவ்வாறு, மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அடுத்த தேர்தலிலும் மக்களை உசுப்பிவிட, தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் தயாராகவே இருக்கிறார்கள்.   

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம், சுயாதீனமானதாகவும் அயல்நாடுகளின் தலையீட்டை நிராகரிப்பதாகவும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் அதேசமயம், சிங்கள மக்களுடன் நட்புறவுடையதாகவும் அமைவது, சிங்கள முற்போக்குச் சக்திகளின் கரத்தை வலுப்படுத்தும் கைங்கரியங்களாக அமையும் என்பதில் ஐயமில்லை.   

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை, வெறும் பயங்கரவாதமாகவும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியாகவும் அரசாங்கம் சித்திரித்து வருகிறது.   

இதைப் பொய்ப்பிப்பதற்கான முயற்சிகள், அரசாங்கத்தின் பலமான பிரசார இயக்கத்துக்கு எதிராகவே மேற்கொள்ளப்படல் அவசியம். இறுதியில், சிங்கள முற்போக்குச் சக்திகள், இன்றைய இடையூகளை மீறி, வெற்றி பெறுவது உறுதி.   

அவர்களிடமிருந்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம், தமிழ் மக்களது விடுதலை இயக்கம், தன்னையும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் பலவீனப்படுத்திக்கொள்ளும் என்பதை, நாம் நினைவில் கொள்ளல் முக்கியமானது.   

தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியினதும் முற் போக்குவாதியினதும் தேசபக்தனினதும் கடமை.   

ஆனால், விடுதலை என்பது, ஒரு குறிப்பிட்ட வடிவிலேயே இருக்க முடியும் என்று வரையறைப்படுத்தி, அதற்குப் புறம்பானவற்றை எதிர்ப்பதும் தீர்வுகளை முன்வைப்போரை எதிரிகளாகக் காட்டுவதும் இன விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமான காரியங்களே ஆகும்.  

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு, முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதோ, இலங்கையின் தேசிய சுயநிர்ணயத்தைப் பறிகொடுப்பதோ அல்ல!   

ஆயினும், இந்த அபாயங்கள் இன்று அதிகரித்துள்ளன. எனவே, நாம் தேடும் தீர்வு, நீண்ட காலத் தீர்வாயினும், குறுகிய காலத் தீர்வாயினும் இவற்றைக் கணிப்பில் எடுப்பது அவசியம்.   

நம் தேசிய இனப்பிரச்சினைக்கு, முன் வைக்கப்படும் குறுகிய காலத் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் சில அடிப்படை நெறிகளால் ஆளப்படுவன. 

இந்த நெறிகள், அவற்றை முன்வைப்போரின் வர்க்கப் பார்வைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.   
நாம் முன்வைக்கும் தீர்வு, பரந்துபட்ட வெகு ஜனங்களது நலன்களையும் உலகில் ஒடுக்கப்பட்ட சகல மக்களது போராட்ட நலன்களையும் சார்ந்ததும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் போன்று எந்த அடிப்படையிலும் ஒடுக்குமுறையை இல்லாது ஒழிப்பதற்குத் தன் பங்களிப்பைத் தருவதுமாகும்.  

நமது விடுதலைப் போராட்டத்தை, இலங்கையின் பிற ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்துடன் மட்டுமன்றி, உலகில் ஒடுக்கப்பட்ட சகல மக்களினதும் போராட்டங்களுடன் இணைத்து நோக்கும் பார்வை மூலமே, முழுமையானதும் நிலைக்கக் கூடியதுமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.  

தேர்தலை நோக்கிய குறுகிய பார்வைகளும் இனஉணர்வைப் பற்றிய மேன்மைகளும் தமிழரின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விகளையுமே எழுப்புகின்றன.   

ஏமாற்றுத் தலைமைகள் பற்றி, அவதானமாயிருப்பது அவசியம்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களின்-விடுதலையும்-ஏமாற்று-தலைமைகளும்/91-242071

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.