Jump to content

வெள்ளை வான்கள் குறித்து அமெரிக்காவிலும் அச்சம்- பாலியல் நோக்கங்களிற்காக பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்கின்றன முகநூல் பதிவுகள்


ampanai

Recommended Posts

இனந்தெரியாத நபர்கள் வெள்ளை வான்களில் இளம்பெண்களை பாலியல் நோக்கங்களிற்காகவும் உடல்பாகங்களை திருடுவதற்காகவும்  கடத்துகின்றனர் என்ற முகநூல் தகவல்களால் அமெரிக்காவின் சில பகுதிகளில் அச்சநிலை உருவாகியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

Phone-texting-graphic-860x484.jpg

அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் இவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள முகநூல்பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இதன் காரணமாக ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நகரமொன்றின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

வெள்ளை வானிற்கு அருகில் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள் உங்களை யாராவது கடத்த முயன்றால் உங்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துங்கள் என பல்டிமோர் மேயர்  பேர்னாட் ஜக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறையினர் இது குறித்து எனக்கு எந்த தகவல்களையும் வழங்கவில்லை முகநூலை அடிப்படையாக வைத்தே இந்த  எச்சரிக்கையை விடுக்கின்றேன்  என அவர்தெரிவித்துள்ளார்.

பல்டிமோர் காவல்துறையினர் முகநூல் பதிவுகள் குறித்து அறிந்துள்ள போதிலும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

74909809_139905584086028_615644199365325

பல்டிமோர் உட்பட அமெரிக்க நகரங்களில் வெள்ளை வான்கள் குறித்த முகநூல் பதிவுகளை பல்லாயிரக்கணக்கானவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளதுடன்  மில்லியன் கணக்கான  முகநூல் பயனாளர்கள் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக வெள்ளை வான் சாரதியொருவர் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

நவம்பர் 13 ம் திகதி சவுண்டிரா மரே என்ற பல்டிமோர் பிரஜையொருவர் காஸ்நிலையத்திற்கு அருகில் வெள்ளை வானை பார்த்ததாக சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.

அவரின் பதிவிற்கு இன்ஸ்டகிராமில் 3200 பேர் விருப்பம் வெளியிட்டிருந்தனர்,அதற்கு சில நாட்களின் பின்னர் இன்னொரு பெண்மணி மரேயின்பதிவினை முகநூலில்பதிவு செய்திருந்தார்.அதற்கும் பெரு வரவேற்பு கிடைத்திருந்தது\

75572121_3526568254024753_47143486174087

இதனை தொடர்ந்து 18ம் திகதி அதே பகுதியை சேர்ந்த பெண்மணியொருவர் வெள்ளை வான் குறித்து பதிவு செய்திருந்தார்.

https://www.virakesari.lk/article/70493

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.