Jump to content

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனங்கள்!


Recommended Posts

இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டம் மற்றும் 'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், வேகப் பந்து பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர் மற்றும் அபிவிருத்தியாளர் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Media_Briefing_held_by_SLC_to_introduce_

 

தலைமைப் பயிற்சியாளர்

மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளருக்கான தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றார்.

51 வயதான தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆர்த்தர், தென்னாபிரிக்கா, (2005 முதல் 2010 வரை), அவுஸ்திரேலியா (2011 முதல் 2013 வரை) மற்றும் பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுக்கும் தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.

 

துடுப்பாட்டம் /'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளர்

கிரேண்ட் ப்ளவர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் மற்றும் 'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளருக்கான தனது கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்க்கவுள்ளார்.

48 வயதான சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரா கிரேண்ட் ப்ளவர், சிம்பாப்வே (2010 முதல் 2014 வரை) மற்றும் பாகிஸ்தான் (2014 முதல் 2019 வரை) கிரிக்கெட் அணிகளின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.

 

வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளர்

டேவிட் சேகர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக எதிர்வரும் 8 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.

டேவிட் சேகர் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (2015 முதல் 2016 வரை) அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

 

களத்தடுப்பு பயிற்சியாளர்

ஷேன் மெக்டெர்மொட் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.

38 வயதான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் மெக்டெர்மொட் கடந்த 02 ஆம் திகதி களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 

தலைமை கிரிக்கெட் செயல்பாட்டு அதிகாரி

ஜெரோம் ஜெயரட்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

 

கிரிக்கெட் அணியின் அபிவிருத்தியாளர் 

டிம் மெக்கஸ்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் அபிவிருத்தியாளராக நாளைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.

https://www.virakesari.lk/article/70508

Link to comment
Share on other sites

இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்­சியாளராகிறார் மிக்கி ஆர்தர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்­சியாளராக இருந்த மிக்கி ஆர்தர், தற்­போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

miki_arthar.jpg

இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராகச் செயற்­பட்டு வந்தவர் இலங்­கையின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க. பெரும் எதிர்பார்ப்­போடு இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக ஹத்­து­ரு­சிங்க நிய­மிக்­கப்­பட்டார். 

ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் எதிர்­பார்த்­த­ளவு அவரின் பயிற்­சியின் கீழ் இலங்கை அணி சோபிக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு­தோல்வி கண்டு தொட­ரி­லி­ருந்து வெளியே­றி­யது. 

இதன் பின்னர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை நீக்க நட­வ­டிக்கை எடுத்­தது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம். அதன்­ பி­றகு இடைக்­கால பயிற்­சியாள­ராக ருமேஷ் ரத்­நா­யக்க நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நிலையிலேயே மிக்கி ஆர்தர் தற்­போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்­தவர் மிக்கி ஆர்தர். இவ­ரது தலை­மையில் பாகிஸ்தான் ஐ.சி.சி. சம்­பி­யன்­ஷிப்பை வென்­றது. இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் முதல்­தர அணி என்ற இடத்தைப் பிடித்­தது. மேலும் குறிப்­பிடத்தகுந்த சில வெற்­றி­களைப் பெற்­றது.

ஆனால் இங்­கி­லாந்தில் நடை­பெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோச­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது. இதனால் தலைமைப் பயிற்­சி­யாளர் பதவியிலிருந்து நீக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நியமிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இவ­ரது பத­விக்­காலம் இரண்டு ஆண்டுகளாகும். இலங்கை அணி ஏற்­க­னவே கிராண்ட் பிள­வரை துடுப்­பாட்ட பயிற்­சி­யா­ள­ரா­கவும், டேவிட் சாகரை பந்து வீச்சு பயிற்சியா­ள­ரா­கவும் நிய­மித்­துள்­ளது. எதிர்­வரும் 11ஆம் திகதி இலங்கை அணி பாகிஸ்­தா­னுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையா­ட­வுள்­ளது. இந்தத் தொட­ரோடு இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­வியை மிக்கி ஆர்­தர் ஏற்­க­வுள்ளார்.

https://www.virakesari.lk/article/70459

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.