Jump to content

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஹைதராபாத்

தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

bbctamil

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுடவேண்டும் என்று சுட்டு இருக்கிறார்கள் 
பாலியல் வல்லுறவு ஒரு ஆணாதிக்க கொடூரம் என்றால் 
இது இன்னொரு போலீஸ் அராஜகம் 

ஒழுங்கான சட்டமுறைமை இல்லை என்பதே இதன் பொருள். 
இவர்களுக்காக வாதாட வந்து பொய்களை கூறும் இரண்டு வக்கீலை 
தூக்கி நீதிமன்றில் பொய்கூறிய குற்றத்துக்கு உள்ளே போட்டால் 
மீதி தானாக திருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் மருத்துவர், வேலை முடிந்த களைப்பில்.... வீடு  திரும்பும் போது,
அவரை நான்கு பேர் மறித்து.... பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாது,
அவரை எரித்துக் கொன்றவர்கள், எப்படிப் பட்ட  மனநிலை உடைய  மனிதர்களாக இருப்பார்கள்?

அவர்களை... இந்த  உலகில் நடமாட விடுவதே ஆபத்தானது.
போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றது சரி.

இதனைப் பார்த்தாவது... இந்தியாவில் அதிகரித்து வரும், 
பாலியல் வன்கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அப்பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

கோர்ட் கேஸ், வாய்தா, அப்பீல், கருணை மனு, லொட்டு லொசுக்கு என எந்த செலவும், நேர விரயமும் இல்லாமல் மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்து, இந்த என்கவுண்டரை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

பெண்ணென்றால் கேவலமா..?

இம்மாதிரி பெண்களை போகப்பொருளாக சீரழிக்கும் குற்றங்களுக்கு சட்டங்கள் மிகக் கடுமையாக்கப்படவேண்டும்.

மரண தண்டனையே சரியானது.

 

ELEyRC_U8AEcb4L?format=jpg&name=small

ELEyOZyUYAAivgS?format=jpg&name=small

 

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

Link to comment
Share on other sites

14 minutes ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் குழப்பம் இல்லை ஆனால் மத்திய மாநில அரசும் போலீசும் ஆலோசித்து வெளிப்படையாக இதை செய்திருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு திருப்தி கிடைக்கும் ஆனால் சட்டத்தை அரசே கேலிப்பொருளாக்கி கேள்விக்குறியாக்கிவிட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசே செயற்படும் நிலை என்பது நாட்டின் இறையாண்மைக்கே பங்கம். நீதிமன்றத்தால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடே  பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பிறக்கும் இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

இந்த நாலுபேரும் திட்டமிட்டு குற்றத்தை செய்ததிற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை. பாலியல் வல்லுறவை நேரடி சாட்சியை வைத்துக்கொண்டா செய்கிறார்கள்..?

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது. மற்ற குற்றவாளிக்கு இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது..

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காகத்தான் அரசும், நீதியுமே தவிர, நீதிக்காக மக்கள் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

... இது மோடியும் தெலுங்கானாவில் தற்போது ஆழும் கட்சியுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைக்கு அரசியல் ஆதாயமாக மாறுகின்றது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கிட்டவாக பொள்ளாச்சி குற்றவாளிகளை போட்டுத் தள்ளினால் எடப்பாடிக்கு அதிக ஓட்டு வர வாய்ப்புள்ளது. 

இதுக்குப் பெயர்தான் 'Lateral Thinking'..!

தங்களுக்கு முதல்வருக்கு ஆலோசகராகும் 'விற்பன்னம்' உள்ளது ஐயா..!  vil-yes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

கற்பளிப்பு குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை வரவேற்கத்தக்கதே ஆனால் இந்த மாதிரியான தண்டனை சட்டபடியாக கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி....
சட்டத்தை திருத்தி அதன்மூலம் கிடைத்தால் தான் இந்த மாதிரியான தண்டனை பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கும் கிடைக்கும் இல்லையேல் இத்தண்டனை ஏழை குற்றவாளிகளுக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.

இந்த நாலு பெரும் செய்திருக்கலாம் 
ஒரு வேளை செயாமலும் இருந்து இருக்கலாம் 

எந்த ஆதாரமும் இன்றி 
ஒரு ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஒரு நாட்டில் 
4 உயிர்கள் பழிக்கு பழியாக போலீசால் சுட்டுப்போட பட்டிருக்கிறது 

இதில் எதிர்கால நோக்கம் இன்றி பாராட்ட ஒன்றும் இல்லை 
போலீசின் இயலாமையின் உச்சிதான் இது 
இதே அராஜகம் நீளும்போதுதான் ... இது தவறு என்று பலர் உணர்வார்கள். 

👍

17 minutes ago, ராசவன்னியன் said:

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

👍

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளுக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தி கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று ஈழத்தில்  கேட்கிறார்கள். இந்திய போலிசின் என்கவுண்டரை கேட்கவில்லை.

உலக போலீசிடம் உடனடியாக தண்டனை கேட்கிறீர்களே? அதுதான் கேள்வி இங்கே..!

இந்திய மக்களும், தன்னுடைய இந்திய அரசிடம்தான் கேட்கிறார்கள்.

நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் இது ஓப்பிடு என.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போலீஸின் இவ்வளவு அவசரம் எங்கேயோ உதைக்குது அதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருவர் இரவு தனியாக வீட்டுக்கு போய்  திரும்பி உள்ளார் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இந்த நாலு பேரின் உதவியுடன் அங்குள்ள பணமுதலை  அல்லது பணமுதலைகள் கூட்டாக இந்த அநியாயத்தை செய்து இருக்கலாம் ஏனென்றால் இந்த நால்வருக்கென்ன சின்ன பிள்ளைக்கே தெரியும் டோல் கேட்டில் கமராக்கள் இருப்பது பற்றி நம்பர்  பிளேட் மூலம் போலீஸ் இலகுவாக மோப்பம் பிடிக்கும் என்பதும் தெரியும் அவர்களுக்கு அப்படியிருந்தும் இப்படியான பாரதூரமான குற்றம் செய்ய யாரும் யோசிக்க மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளையும் இவர்களுடன் சேர்த்து நடுச்சந்தியில் வைத்து கொளுத்தி இருக்கணும் அதுதான் சரியாகும் நாளை எவனும் தனியாக போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன்  பார்க்கமாட்டன் .

இக்கருத்துக்கு வரிந்து கட்டிக்கொண்டு கல்லெறிய வருபவர்களுக்கு செய்தி - 80லட்ஷசம் பேர் கூகிளை போய்  கேட்டு இருக்கினம் இந்த வல்லுறவு ஒளிநாடா  காட்ச்சிகள்  இருக்கா எண்டு .😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி பாலியல் குற்றங்களுக்கு வலுவான, கடுமையான சட்டங்கள் இல்லாதபொழுது எப்படி இக் இக்கொடூரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது..?

7 வருடங்களுக்கு முன் தில்லியில் நடந்த நிர்பயா என்ற பெண்ணின் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு அரசு தையல் எந்திரமும், கருணைத் தொகையும் கொடுத்து ஆசீர்வதித்து விடுதலை செய்தது.

மக்களுக்கு அரசின் மீதும் நீதிதுறையின் மீதும் நம்பிக்கையற்று செல்லும் காலம் நெருங்குகிறது.மக்களின் கோபம் மிக நியாயமானது என அரசிற்கு கிடைத்த அழுத்தங்களினால் தான் இந்த என்கவுண்டர் என பார்க்கிறேன்.

ஒப்பீடுக்காக சொல்கிறேன்..

ஈழத்தில் நடந்த இதைவிட பன்மடங்கு அதிகமாக் கொடூரங்களுக்கு, நாம் கொதித்தெழுந்து உடனடி தண்டனையை எதிர்ப்பார்த்தோமே? அப்பொழுது உலகமும், ஆட்சி மன்றமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டுமென சும்மா இருக்கவில்லையே? நம்மிடம் இன்னமும் ஆற்றாமையும், கோபமும் உள்ளதுதானே..!

மக்களுக்காத்தான் அரசும், நீதியுமே தவிர நீதிக்காக மக்கள் இல்லை.

வன்னியன் அண்ணா பட்டு தெளிந்ததால்தான் சொல்கிறேன் 
இன்னும் இரண்டு மூண்டு கொலைகள் இப்படி நடக்கும்போது 
நீங்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பீர்கள் 
இது போலீசுக்கு ஒரு ஆணவத்தை உருவாக்கும் 
பின்பு ஒரு நாளில் இல்லை அவர்கள் அதை செய்திருக்கவில்லை என்பது 
உங்களுக்கு தெரியவரும்போது  ............ நீங்களே போலீசு அராஜகம் ஒழிக என்பீர்கள்.

அப்போது அப்பாவி  உயிர்கள் பல போயிருக்கும் 
கொடிய குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி உங்கள் கண் முன்னாலேயே திரிவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

... கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .

அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

இதுதென்னவோ உண்மைதான்.

சட்டங்கள் மிகக்கடுமையாக்கபட வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வேண்டும், அதற்கு எத்தனை தடைகளோ..? இந்தியா ஒரு போலி தேசியவாத நாடு. வல்லவனுக்கு சட்டம் எளிதில் வளைந்து கொடுக்கும். எளியவனை தூக்கி மிதிக்கும்.

ELFvxtKXkAEB73z?format=jpg&name=small

உன்னாவ் பாலியல் குற்ற வழக்கில், பி.ஜே.பி எம் எல் ஏ இன்னமும் சுதந்திரமாக மேலிட பாதுகாப்பால் திரிந்துகொண்டுதான் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

அதுதானே இங்கு எள்ளளவும் இருக்கவில்லை 

ஒரு வேளை சுவாதி கொலையிலும்  அந்த சிறுவனை முதல் நாளே போலீசு 
இப்படி போட்டு தள்ளி இருந்தால் ...
அப்போதும் நீங்கள் வந்து இப்படித்தான் எழுதி இருப்பீர்கள்.

உங்கள் ஆதங்கம் சரியானது ஒரு இளம் பெண் கொடூரமாக ரயில் நிலையத்தில் 
வைத்து கொன்றவனுக்கு அவ்வாறானதொரு தண்டனை நிச்சயம் வேண்டும் 
ஆனால் நடந்தது வேறே.
மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்தான் 
ஏன் சி டி டி கமராவில் ஏதும் இல்லை? அப்போது மின்சாரம் இல்லை என்றது காவல் துறை. 

ஈழத்தில் உடனடி தண்டனை என்றால்  83 கலவரத்தில் தமிழரை கொன்ற சிங்களவரை 
புலிகளால் 86-87 களிலேயே சுட்டு போட்டிருக்க முடியும். நாம் வேண்டி நின்றது சட்டத்தின் படியான தீர்ப்பும் 
இவ்வாறு இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சட்ட பாதுகாப்பையும்தான்.

எமக்கு நாடோ அரசோ இல்லை அது வேறு விதமான பார்வை.
ஆனால் இது இந்திய போலீசு  நீதித்துறை இரண்டையும் கேலி செய்து நிற்கிறது 

கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி குற்றவாளிகளை அவ்வாறான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் .
அதை ஏன் இந்திய அரசு செய்ய பின் நிற்கிறது? 

ஐயா கும்புடுறனுங்க, 

தயவுசெய்து புலியள  இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ  போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. 

தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பெண்பிள்ளையின் அப்பனாக அந்த இடத்தில் இருக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மனித உரிமை மீறல் என்று வருபவன் ஒரு 4 பேரையாவது போடும் போது மீதி நாலு பேர் தவறு செய்ய பயப்படுவான் 

போடணும்  என்று முடிவு  எடுத்துவிட்டால் அப்பனாலேயே  போடமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

நிகழ்விடத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்த போலீஸார் மீது பாலத்தின் மேல் இருந்தவாறே ரோஜா மலர்களைத் தூவி வாழ்த்தினர். டிசிபி வாழ்க; ஏசிபி வாழ்க என கோஷமிட்டனர். பெண் மருத்துவரின் அண்டை வீட்டார் திரண்டு வந்து போலீஸாருக்கு இனிப்புகளை வழங்கினர். சிலர் போலீஸாரை தங்களின் தோள்களின் மீது தூக்கி ஆரவாரம் செய்தனர்.

தெலங்கானா முழுவதுமே மக்கள் ஒரேமாதிரியான மகிழ்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

ani_mic_logo_bigger.jpg
 
 

#WATCH Hyderabad: 'DCP Zindabad, ACP Zindabad' slogans raised near the spot where where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter by Police earlier today. #Telangana

 
Embedded video
 
 

https://twitter.com/i/status/1202818900452237313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் நாலு பேரை போட்டுத்தள்ளினத்துக்கு போலீசை தோளில்  தூக்கி கொண்டாடும் பொதுமக்கள் இன்னொரு பக்கம் ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்

https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-about-hyderabad-encounter-san-232447.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சிதான்.

இதுபோன்ற என்கவுண்டர்கள்  பெண்கள்மீது கை வைக்கநினைக்கும்  ஆயிரம்பேருக்காவது பேருக்காவது மரண பயத்தை உண்டாக்குமென்றால் 100 பெண்களாவது இந்த மண்ணில் தமது இயற்கை மரணம்வரை பாலியல் படுகொலைகளிலிருந்து தப்பித்து சகமனிதர்களிபோல் ஆசைகளுடனும் கனவுகளுடன் வாழ்வை வாழ்ந்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இந்த தண்டனைகளை அரசியலும், பண பலமும் உள்ளவர்கள்மேல் நிறைவேற்றிகாட்டும் தைரியம் இந்திய காவல்துறைக்கு உள்ளதா?

பிடித்து உள்ளே போட்டால் அடுத்தகிழமையே ஜாமீன் வாங்கிகொண்டு வெளியே வந்து பிஎம் டபிள்யூ காரில் திரிவார்கள்.

அதையுமீறி அவர்களை என்கவுண்டர் பண்ணினால் பண்ணிய காவல்துறை அதிகாரிக்கு பதவி பறிபோகும் சிறை தண்டனையும் நிச்சயம்.

பாலியல் படுகொலைக்குள்ளாகும் பெண்களுக்கான நீதி என்பது அவர்களை பாலியல் பலாத்காரம் பண்ணியவர்களின் அந்தஸ்து என்ன என்பதை பொறுத்தே இந்தியாவில் தீர்மானிக்கப்படுகிறது,

Link to comment
Share on other sites

சீனாவைப் போன்று ஒரு மிகப்பெரிய இணைய தடுப்புச்சுவர் (Great Internet Firewall) அமைத்து இணையத்தைத் தணிக்கை செய்வது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமானது. இன்றைய இந்தியாவின் மொத்த இணைய உள்ளடக்க பாவனையின் (Content Usage) 50%மானவை இந்த சுவரை தாண்டி செல்ல தகுதி அற்றவை. ஆனால், இது பல தொலைதொடர்பு பெருநிறுவனங்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதனால், பெருமுதலைகள் அனுமதிப்பார்களோ தெரியவில்லை?

Link to comment
Share on other sites

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

பிரான்சிலே நடக்கும் அநேகமான  பயங்கரவாதத்தாக்குதல்களும்

தனிமைப்படுத்தப்பட்டு  போட்டுத்தள்ளுவதனுடன்  தான்  நிறைவு பெறும்

நீதி  சரியாக  கிடைத்தாலும்  வைத்துப்பராமரிக்கும் செலவு மற்றும்  இடம்  என்பனவே  முக்கிய  காரணிகள்

Link to comment
Share on other sites

"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். "

குற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.