Jump to content

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை


Recommended Posts

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு,

இந்தியாவின் என்கவுண்டர் நீதியின் ஒழுக்ககோவை என்ன என்பதை காட்ட இந்த 3 படங்களே போதுமானது.

large.DB65EFCA-E99E-4402-8039-B9FC0F35F88F.jpeg.5b17acecb53542198fd8304b4509524d.jpeglarge.5BB003D5-FEBF-408C-85B9-68E0719CB888.jpeg.c6507411e8359c232764e2c31e02f8f2.jpeglarge.51A64D16-106B-4A10-AB10-5B8D687BF376.jpeg.ff918d54041734ba84f58d94ca5ebdfa.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ரதி, இலங்கை, இந்தியா, மற்றும் தென்னாசிய நாடுகளில் இருக்கும் பிரச்சனையே இவர்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க அப்பாவிகளை மாட்டி விடுவது தான். இங்கும் இவர்கள் நான்கு பேருமே குற்றவாளிகளா அல்லது ஒரு சிலரா என்பது வெகுசனத்துக்கு தெரியப் போவதில்லை.

சுவாதி கொலையில், ராம்குமாரை கைது செய்த பின் அவர் வயரை கடித்து இறந்தார் போன்ற சோடிப்புகள் இங்கும் நிகழ்ந்து இருக்கலாம். ராம்குமாரை ஒரு நாள் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை.

இப்படியான உடனடி நீதிகளில் தண்டிக்கப்படும்  அனைவரும் பரம ஏழைகளாக இருக்க டெல்லியில் தலித்  சிறுமியை கோவிலில் வைத்து பல நாட்கள் வல்லுறவு செய்து கொன்றதில் துணை போன பிஜேபி பிரமுகர்கள், வக்கீல்கள் எல்லாம் பிணையில் சுந்தந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள். பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் அரசியல் பின் புலம் இருப்பதால் குண்டாஸ் பிரிவில் இருந்தும் அவ் வழக்கை நீக்கியிருகின்றார்கள்.

இந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது கூட அவருக்கு உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறை குற்றம் ஒன்றை சுமத்தியிருந்தார் (அவர் பிஜேபி யின் செல்வாக்கால் நியமிக்கப்பட்டவர் என்பதால் வழக்கை நிராகரித்து விட்டனர்)

இவ்வாறான என் கவுண்டர்கள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறையாது. வல்லுறவுக்குள்ளாகும் பெண்களை மேலும் கொன்றழிப்பதில் தான் இனி குற்றவாளிகள் அதிகமாக ஈடுபடுவர்.

இலங்கை,இந்தியாவில் இப்படியான என் கவுண்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு இருக்குது...நான் இல்லை என்று சொல்லவில்லை. இந்தியாவோட ஒப்பிடுகையில் இலங்கையில் அரசியற் கொலைகளை தவிர இப்படியான கொலைகள் குறைவு 
சுவாதி கொலையின் பின்னணி வேறு அங்கு பாலியல் பலாத்காரம் இடம் பெறவில்லை...அவரது கொலைக்கு பின்னால் மத்திய அரசோ அல்லது அவர் வேலை செய்த ஹதராபாத் கொம்பனி சம்மந்தப்பட்டு இருக்குது என்று சொல்கிறார்கள்...அநியாயமாய் அப்பாவி ராம்குமார் மாட்டுப் பட்டுப் போனார்.
இந்த சம்பவம் பிரியங்காவின் கொலை நடந்து 8 யில் இருந்து 10 நாட்களுக்குள் செய்து முடித்து விட்டார்கள் . .அரசுக்குத் தெரியும் மணித் உரிமை ஆணைக்குழு கட்டாயம் ஆதாரங்கள் கேட்பார்கள் என்று , அதனால் 
ஹை வேயில் நடந்ததால்  கட்டாயம் கமராக்கள் இருக்கும்.[ இதை செய்தவர்களும் போனில் வீடியோ பிடித்து வைத்து உள்ளதாக சொல்கிறார்கள்...அந்த வீடியோவை காட்டுங்கள் என்று கேட்பவர்கள் அதை பார்த்து ,ரசிக்கும் வக்கிர மனம் கொண்டவர்களாய்த் தான் இருப்பார்கள் ...அதை போலீஸ் வெளியில் விட வேண்டிய அவசியமில்லை .]
டிஎன் ஏ ஆதாரம் இந்த 4 பேருடையதும் பொருந்தி போயிருக்கும்.
அதில் இருவர் 17 வயதுக்கு குறைந்தவர்கள்...அதில் ஒருவரது அப்பாவிடம் பிரியங்காவின் கொலை சம்மந்தமாய் கேட்ட போது ,அவனுக்கு 17 வயசு தானே சீக்கிரம் வெளியில் வந்திடுவான் என்று சொல்லி இருக்கிறார்.
நிர்பயாவின் வழக்கிலும் அந்த பெடியன் வெளியில் வந்து சுதந்திரமாய் இருக்கிறான் ....அவர்களுக்கு தாங்கள் செய்த பிழையினை உணர சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை .
பிரியங்கா வழமையாக சுங்க  சாவடிக்கு அண்மையில் தான் வாகனத்தை நிறுத்துவதாகவும் அந்த அன்று அங்கு விட அவர்கள் மறுத்ததாகவும் சொல்லப்படுகின்றது...யார் அவர்கள் ? ஏன் மறுத்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் .
லொறி டிரைவர்கள் கொஞ்ச பேர் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதாக அவ தனது தங்கச்சிக்கு தொலைபேசியில் சொல்லி உள்ளார்.
மோ.சைக்கிளை கொண்டு போன பெடியனைக் காணவில்லை என்று தேடி அடித்து , அவனோடு கதைத்திருக்கிறா.
போலீசிடம் அவர்களது உரையாடலை  இருக்குது.
எனக்கு இவர்கள்  4 பேரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகம் இல்லை...ஆனால் இவர்களோடு சேர்ந்து வேறு யாரும் பெருந்தலைகள் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கு .
இந்திய அரசியல்வாதிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மாற்றாமல்  இருப்பதற்கான காரணமே தாங்கள் தப்பிப்பதற்காகத் தான் .
இந்த என்கவுண்டர் செய்த அதிகாரி நேர்மையானவாய் இருக்கலாம்...கோட் ,கேஸ் என்று போனால் இழுபடும் ...குற்றவாளிகள் வயதை காட்டி தப்பித்து விடுவார்கள் என்பதால் தங்கட மாநில அரசின் உதவியுடன் என் கவுண்டர் செய்திருக்கலாம்.
உண்மை எப்படியும் ஒரு நாள் வெளியில் வரத் தானே வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை நல்ல தகவல்களை இணைக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களை கவருவது என்ன என்றால் என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்ததும் பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்

Link to comment
Share on other sites

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அம்பனை நல்ல தகவல்களை இணைக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களை கவருவது என்ன என்றால் என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்ததும் பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்

எனது பார்வையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களர்களில், "என்கவுண்டர் செய்து பொலீசு நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள் - நடிகை நயன்தாரா என்பதும் "பொலீசு என்கவுன்ட்டர் கொலைகள் செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் - பாஜக பெண் எம்பியின் வேண்டுகோள்" போன்ற செய்திகளுக்கு 'லைக்' போடுவார்கலால் அவை பிரபல்யமாக காண்பிக்கபடுகின்றது. ஆனால், அமைதிகாக்கும் பெரும்பான்மை புலம் பெயர் மக்கள் இவை சலசலப்பு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

அமைதிகாக்கும் பெரும்பான்மை புலம் பெயர் மக்கள் இவை சலசலப்பு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளார்கள். 

அது தான் அமைதிகாக்கும் பெரும்பான்மை வேண்டும்.

Link to comment
Share on other sites

பாலியல், அது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, பாலியல் வன்புணர்வு மற்றும் அது பற்றிய சட்டம் +  விழிப்புணர்வு பற்றிய கல்வி போன்றன இப்படியான வன்முறைகளை குறைக்க உதவும்.

எனவே இது ஒரு சமூக, ஆன்மீக, அரசியல் மற்றும் சட்டம் கலந்த தீர்வாக அமையவேண்டும். தனியாகவே ஒரு அணுகுமுறையால் தீர்வை காணமுடியாது. 

Link to comment
Share on other sites

On 12/6/2019 at 2:10 PM, நிழலி said:

ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கடூழிய சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை நீதி' யை ஏனைய குற்றவாளிகள் மூலம் கொடுக்கப்பட்டு பின் மரண தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.

'சிறை நீதி' குற்றவாளிகள் பலர் தப்புவதற்கும் துணைபோயிருக்கிறது. அந்தக் கொடூரர்களைக் கொன்ற காவல்துறையினரை மக்கள் மலர்தூவி வாழ்த்துவதையும் காணலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனிய தொலைக்காட்சி இப்படிச் சொல்கிறது,

காவல் துறை பல்லாண்டு வாழ்கஎன்று ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பூக்களை அள்ளி வீசி காவல்துறையினரை உற்சாகப்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் காரணம் சமீபத்தில் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி  எரித்துக் கொலை செய்த 20 முதல் 26 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களை  இந்திய காவல்துறை சுட்டுக் கொன்றதே.

பொலீஸாரிடம் இருந்து துப்பாக்கிகளை எடுத்து அவர்களைத் தாக்க முயற்சித்த போதே தற்காப்புக்காக அந்த நான்கு பேரையும் பொலீஸார் சுட வேண்டி வந்தது என பொலீஸ்தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பொலீஸ் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து தாங்களே நீதி வழங்கியிருக்கிறார்கள் என்றே பலர் நினைக்கிறார்கள்.

"பொலிஸாரின் சில  நடவடிக்கைகள் ஒரு வழியில் நியாயமானதுதான். கொலை நடந்து பத்து நாட்களில் கொலையாளிகள் தண்டிக்கப் பட்டதையிட்டு நாங்கள் மகழ்ச்சி அடைகிறோம். இதை எங்கள் நாட்டின்  பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்என்று பெண்கள் உரிமை ஆர்வலர் ஷிராஸ் (Shiraz Amin) அமின் கூறுகிறார்.

வழக்கு என்று எதுவும் நடக்கவில்லை, அவர்கள் உண்மையில் பாலியல் வன்புணர்வு செய்தவர்களா? அவர்கள்தான்  27 வயதான திஷாவை எரித்தார்கள் என்பவை பற்றி சரியாகத் தெளிவுபடுத்தாமலே வெறுமனே பொலீஸ் தரும் நீதி என்பது விடையாக இருக்க முடியாது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கை ஒன்று சொல்கிறது. ஆனால் இருண்ட ஒரு பக்கம் நிச்சயமாக இருக்கும். வெட்கம், பயம் காரணமாக பல பெண்கள் காவல்துறைக்குச் சென்று முறையிடாமல் இருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன்புதான், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ஒரு இளம் பெண் எரிக்கப்பட்டாள் என்பது அதற்கு ஒரு சாட்சி.

"பொலிஸ் வளங்களின் பற்றாக்குறை நீக்கப்படல் வேண்டும்,  பொறுப்புக்கூறலில் இருந்து பொலீஸ் பின் வாங்கக் கூடாது, வழக்குகளுக்கான தீர்ப்புகள் விரைவாக வரவேண்டும்என டெல்லி மகளிர் குழுத் தலைவர் சுவாதி முல்வாலி (Swati Mulwali) கூறினார்.

சந்தேக நபர்களின் மரணம் குறித்து திஷாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் இறுதியாக இந்திய சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக்  கொண்டுவரும் என  அவர்கள் நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த கருத்தை பார்த்தவுடனேயே 
பதில் அடி  கொடுக்க வேண்டும் என்று பாய்பவர்கள்தான் அதிகம் 
ஒரு நிமிடம் இதில் ஏதும் தாக்கம் இருக்குமோ என்று ஒரு நிமிடம் சிந்திப்பவர்கள் குறைவு.

இந்த ஆதிக்க புத்திக்கு அடிப்படை காரணமே இந்துமதம்தான் 
ஒரு சகமனிதனுக்கு  எவ்ளவு கொடுமைகளை வேண்டுமானாலும் 
மிக சாதாரணமாக செய்ய கூடிய மனநிலையை இந்த இந்த மதம்தான் வளர்க்கிறது.

இன்னொரு மனிதனை சக மனிதனாக பார்க்கவிடாது 
ஒரு பெண்ணை சமத்துவமாக பேண விடாது தடுப்பது என்பதை 
எழுத்து வடிவிலேயே கொண்டது இந்துமதம் என்பதை  யாராலும் மறுக்க முடியாது.

மேலே வசி அவர்கள் இணைத்த வீடியோ (இணைப்பிற்கு நன்றி) வில் இருக்கு பெண்களுக்கு 
அவர்கள் வாழ்க்கையில் இப்படியான சம்மவம் இப்போதான் முதன் முதலில் நடக்கிறது 
ஆதலால் மனமுடைந்து போகிறார்கள் இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்து போடுகிறார்கள்.
இந்தியாவிலேயே வாழும் பெண்களுக்கு?
இது ஒரு சாதாரண வாழ்க்கை.
இந்த வாழ்வை அடிப்படியாக கட்டி அமைத்தது எது?

அயார்பாடியில் கிருஷ்ணர் என்ன செய்தார்?
அவ்வளவும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சேட்டைகள் 
அவற்றை பாட்டாக்கி  பக்தியாக்கி எங்கள் மனதில் மிக சிறு வயதிலேயே 
பதித்துவிடுகிறார்கள் .........

இப்போதைய சோசியல் மீடியா காலத்தில் பதியபடும் கருத்த்துகளில் 
இந்திய இளைஞர்கள் மிக சாதாரணமா எழுதுவார்கள் " இவா எதோ பத்தினி மாதிரி ... மூடிட்டு போடி" என்று 
பத்தினி இல்லாத எல்லோரையும் திறக்கலாம் .... அவர்கள் அதை மறுக்க முடியாது என்ற ஒரு அடிப்படை புத்தி 
இவர்களிடம் மிக சாதாரணமாக இருக்கிறது. 

சமத்துவத்தை கற்றுக்கொடுக்க 
கற்றுக்கொள்ள இந்தியா துணியும்வரை 
இந்த வன்கொடுமை என்பதோ தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எனது இந்த கருத்தை பார்த்தவுடனேயே 
பதில் அடி  கொடுக்க வேண்டும் என்று பாய்பவர்கள்தான் அதிகம் 
ஒரு நிமிடம் இதில் ஏதும் தாக்கம் இருக்குமோ என்று ஒரு நிமிடம் சிந்திப்பவர்கள் குறைவு.

இந்த ஆதிக்க புத்திக்கு அடிப்படை காரணமே இந்துமதம்தான் 
ஒரு சகமனிதனுக்கு  எவ்ளவு கொடுமைகளை வேண்டுமானாலும் 
மிக சாதாரணமாக செய்ய கூடிய மனநிலையை இந்த இந்த மதம்தான் வளர்க்கிறது.

இன்னொரு மனிதனை சக மனிதனாக பார்க்கவிடாது 
ஒரு பெண்ணை சமத்துவமாக பேண விடாது தடுப்பது என்பதை 
எழுத்து வடிவிலேயே கொண்டது இந்துமதம் என்பதை  யாராலும் மறுக்க முடியாது.

மேலே வசி அவர்கள் இணைத்த வீடியோ (இணைப்பிற்கு நன்றி) வில் இருக்கு பெண்களுக்கு 
அவர்கள் வாழ்க்கையில் இப்படியான சம்மவம் இப்போதான் முதன் முதலில் நடக்கிறது 
ஆதலால் மனமுடைந்து போகிறார்கள் இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்து போடுகிறார்கள்.
இந்தியாவிலேயே வாழும் பெண்களுக்கு?
இது ஒரு சாதாரண வாழ்க்கை.
இந்த வாழ்வை அடிப்படியாக கட்டி அமைத்தது எது?

அயார்பாடியில் கிருஷ்ணர் என்ன செய்தார்?
அவ்வளவும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சேட்டைகள் 
அவற்றை பாட்டாக்கி  பக்தியாக்கி எங்கள் மனதில் மிக சிறு வயதிலேயே 
பதித்துவிடுகிறார்கள் .........

இப்போதைய சோசியல் மீடியா காலத்தில் பதியபடும் கருத்த்துகளில் 
இந்திய இளைஞர்கள் மிக சாதாரணமா எழுதுவார்கள் " இவா எதோ பத்தினி மாதிரி ... மூடிட்டு போடி" என்று 
பத்தினி இல்லாத எல்லோரையும் திறக்கலாம் .... அவர்கள் அதை மறுக்க முடியாது என்ற ஒரு அடிப்படை புத்தி 
இவர்களிடம் மிக சாதாரணமாக இருக்கிறது. 

சமத்துவத்தை கற்றுக்கொடுக்க 
கற்றுக்கொள்ள இந்தியா துணியும்வரை 
இந்த வன்கொடுமை என்பதோ தவிர்க்க முடியாதது. 

எல்லா மதமும் பெண்களை அடிமையாய் தான் வைத்திருக்குது. அவற்றில் கிறிஸ்தவம் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எல்லா மதமும் பெண்களை அடிமையாய் தான் வைத்திருக்குது. அவற்றில் கிறிஸ்தவம் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்

எல்லா மதமும் பெண்களுக்கு மட்டும் இல்லை பொதுவாகவே 
மனிதர்களை பயத்தில் தள்ளிவிட்டு சிந்திக்க விடாது தடுத்து 
தம்மை வளர்த்து கொள்வதுக்கே இங்கு இருக்கிறது. எந்த மதமும் மனிதர்களுக்காகவோ 
கடவுளுக்கவோ இல்லை. 
இல்லாத கடவுளை சித்தரிப்பதிலேயே முதல் பொய்யும் புரட்டும் உருவெடுக்கிறது. 
கடவுள் ஏன் இருக்கவேண்டும்? என்று நீங்கள் கேட்டால் எல்லா மதமும் 
அவர் ஒரு சர்வாதிகாரி போன்ற ஒரு பதிலைத்தான் சுற்றிவளைத்து தருகிறது. 


இந்துமதம் என்பது ஒரு மனிதனை வக்கிரனாக மாற்றுகிறது இந்த மாறுபடை 
புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சக மனிதனை நான் துன்புறுத்துவத்துக்கு எனக்கு நான் வளர்ந்த 
சமூகம் தனது மதம் ஊடாக அனுமதி அளித்து இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? 
அதை நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக செய்துகொண்டு இருந்தோம் ... மறு  கரையில் 
ஒரு மனித குழுமம் நசுங்கி ஒடுங்கி மனபங்கப்பட்டு ஒதுங்கி கொண்டிருந்ததை யாராலும் மறுக்க முடியுமா?

நாங்கள் விட்ட அம்பு ஊரை சுற்றி எமது வீட்டு பெண்களை நோக்கி வரும்போது மட்டும்  
எதோ பெரிய  புரட்ச்சியாளர்கள்போல பொங்குகிறோம். இவளவு நாளும் அதைத்தான் நாம் இன்னொரு வடிவில்  இன்னொரு மனிதனுக்கு செய்துகொண்டு இருந்தோம். இன்று வருவதே நாம் நேற்று விட்ட அம்புதான். 

இதை இந்துமதத்துக்கு எதிரான கருத்தியலாக பார்க்காது 
நாம் திருத்தம் செய்யவேண்டிய .... திருத்த வேண்டிய அடிப்படை விடயம்கள் 
இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.......... என்பதை என்றாலும் புரிந்துகொள்வதுதான்  அவசியமானது.  

Link to comment
Share on other sites

என்கவுண்டர் போலீசார் மீது வழக்கு; சுப்ரீம் கோர்ட் ஏற்பு

புதுடில்லி: தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரை, என்கவுன்டர் செய்த போலீசார் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

தெலுங்கானாவில் நவ.,27ம் தேதி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இரவு வீடு திரும்பிய அவரது பைக் டயரை பஞ்சர் செய்து, அவருக்கு உதவுவது போல நடித்து, 4 லாரி டிரைவர்கள் பலாத்காரம் செய்தனர். அவரது வாயில் மதுவை ஊற்றி, கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண் டாக்டர் கொல்லப்பட்ட இடத்தில், குற்றம் நடந்தது எப்படி என நடித்துக் காட்டிய போது, போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயற்சித்த 4 கயவர்களையும், கடந்த 6ம் தேதி, போலீசார் சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்தில், போலீசாரை பொதுமக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். 4 பேரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டது அனைத்து தரப்பினரிடையேயும், பலத்த வரவேற்பை பெற்றது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2430209

இந்நிலையில் என்கவுன்டருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வக்கீல்களான மணி, பிரதீப் குமார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: என்கவுன்டர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. என்கவுன்டர் செய்த போலீசார்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் விசாரணையையும் கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நாளை மறுநாள்(டிச.,11) இம்மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

எல்லா மதமும் பெண்களுக்கு மட்டும் இல்லை பொதுவாகவே 
மனிதர்களை பயத்தில் தள்ளிவிட்டு சிந்திக்க விடாது தடுத்து 
தம்மை வளர்த்து கொள்வதுக்கே இங்கு இருக்கிறது. எந்த மதமும் மனிதர்களுக்காகவோ 
கடவுளுக்கவோ இல்லை. 
இல்லாத கடவுளை சித்தரிப்பதிலேயே முதல் பொய்யும் புரட்டும் உருவெடுக்கிறது. 
கடவுள் ஏன் இருக்கவேண்டும்? என்று நீங்கள் கேட்டால் எல்லா மதமும் 
அவர் ஒரு சர்வாதிகாரி போன்ற ஒரு பதிலைத்தான் சுற்றிவளைத்து தருகிறது. 


இந்துமதம் என்பது ஒரு மனிதனை வக்கிரனாக மாற்றுகிறது இந்த மாறுபடை 
புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சக மனிதனை நான் துன்புறுத்துவத்துக்கு எனக்கு நான் வளர்ந்த 
சமூகம் தனது மதம் ஊடாக அனுமதி அளித்து இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? 
அதை நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக செய்துகொண்டு இருந்தோம் ... மறு  கரையில் 
ஒரு மனித குழுமம் நசுங்கி ஒடுங்கி மனபங்கப்பட்டு ஒதுங்கி கொண்டிருந்ததை யாராலும் மறுக்க முடியுமா?

நாங்கள் விட்ட அம்பு ஊரை சுற்றி எமது வீட்டு பெண்களை நோக்கி வரும்போது மட்டும்  
எதோ பெரிய  புரட்ச்சியாளர்கள்போல பொங்குகிறோம். இவளவு நாளும் அதைத்தான் நாம் இன்னொரு வடிவில்  இன்னொரு மனிதனுக்கு செய்துகொண்டு இருந்தோம். இன்று வருவதே நாம் நேற்று விட்ட அம்புதான். 

இதை இந்துமதத்துக்கு எதிரான கருத்தியலாக பார்க்காது 
நாம் திருத்தம் செய்யவேண்டிய .... திருத்த வேண்டிய அடிப்படை விடயம்கள் 
இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.......... என்பதை என்றாலும் புரிந்துகொள்வதுதான்  அவசியமானது.  

நான் சாதியைப் பற்றி ஒரு பிராமண குருவிடம் கேட்ட போது ,அவர் சொன்னார் நீங்கள் சாப்பிடும் கடல் உணவான மீன்கள் எத்தனை வகை? எல்லாத்துக்கும் ஒரு குணம் இருக்காம்...நண்டுக்கு ஒரு குணம்[அது கெளவி பிடிப்பது] , றாலுக்கு ஒரு குணம்,மீனுக்கு ஒரு குணம்...இப்படி நாங்கள் சாப்பிடுவதிலேயே எத்தனை விதம்? சாதியும் அப்படித் தானாம்.


ஒவ்வொரு சாதிக்கென்று ஒரு குணம் இருக்காம்...அந்த குணத்தை அடிப்படையாய் வைத்தே சாதி வகுக்கப்பட்டதாம்....எப்படித் தான் படித்தாலும் ,உயர் பதவியில் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்தந்த சாதிக்காரர் தங்கட சாதிக்குரிய குணத்தை காட்டுவினமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

நான் சாதியைப் பற்றி ஒரு பிராமண குருவிடம் கேட்ட போது ,அவர் சொன்னார் நீங்கள் சாப்பிடும் கடல் உணவான மீன்கள் எத்தனை வகை? எல்லாத்துக்கும் ஒரு குணம் இருக்காம்...நண்டுக்கு ஒரு குணம்[அது கெளவி பிடிப்பது] , றாலுக்கு ஒரு குணம்,மீனுக்கு ஒரு குணம்...இப்படி நாங்கள் சாப்பிடுவதிலேயே எத்தனை விதம்? சாதியும் அப்படித் தானாம்.


ஒவ்வொரு சாதிக்கென்று ஒரு குணம் இருக்காம்...அந்த குணத்தை அடிப்படையாய் வைத்தே சாதி வகுக்கப்பட்டதாம்....எப்படித் தான் படித்தாலும் ,உயர் பதவியில் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்தந்த சாதிக்காரர் தங்கட சாதிக்குரிய குணத்தை காட்டுவினமாம்

நாம் மனிதர்களை பற்றி பேசுகிறோம் 
பார்ப்பான் மீன்களை பற்றி பேசுகிறான்.
இதுதான் இந்துமதம் எனும் பிராடு தனம் 
ஒரு ஆதிக்க வெறியை  அப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் காட்டி 
வளர்த்து விடுவதுதான் இந்த இந்துமதம்.

நான் சொல்லபோனால் மத்துக்கு எதிரான கருத்தகவே பார்ப்பார்கள் 
இப்போ பிராமணனே சொல்கிறான் ... இந்த பிராட்டு தனத்தை பாருங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.