Jump to content

பேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்!


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

 

20191206_140407.jpg

 

தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.  

இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயங்களை சாட்சியமாக பதிவு செய்தார்.  

நான்கு மணி நேரம் பதிவு செய்யப்ப்ட்ட அவரின் சாட்சியத்தில் இரு மணிநேர இரகசிய சாட்சியமும் உள்ளடங்கியிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் இன்று 2.00 மணி முதல்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாட்சியமளித்தார்.

இதன்போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையில்  கிம்ஹானி கமகே,  துதிக பெரேரா,  சமத் பெர்ணான்டோ,  சந்துன் நாகஹவத்த,  பிரேமால் ரத்வத்த,  வருண சேனாதீர ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70585

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

Link to comment
Share on other sites

வாக்குமூலம் வழங்கினார் கார்டினல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் வாக்மூலம் வழங்கியுள்ளார்.

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வககமலம-வழஙகனர-கரடனல/175-242166

Link to comment
Share on other sites

43 minutes ago, ampanai said:

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மணித்தியாலத்துக்கு எவ்வளவு கூலி தாராங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

ஓ......அந்த அர்த்தத்திலா?? சரி சரி.

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார்? இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா? மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ ? சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ? எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

Link to comment
Share on other sites

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார். அவர் அன்றும் உயிர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் அவரின் சாட்சியங்கள் இன்றும் உண்மையாக இருந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

On 12/7/2019 at 5:32 PM, Jude said:

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

 

10 minutes ago, ampanai said:

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார்.

நன்றி கிறீஸ்தவரே, முன்வந்து உண்மையை சொன்னதுக்கு. நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார் என்ற உள்வீட்டு உண்மையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. அப்போதும் இவர் கார்டினலாகவா இருந்தார்? நான் நினைத்தேன் அந்த நாட்களில் இவர் இளைய வயதினராக எங்கோ கூட்டிப்பெருக்கிக்கொண்டு இருந்திருப்பார் என்று. நீங்கள் எழுதித்தான் தெரிகிறது இவர் நீண்டகாலம் இந்த பதவியில் இருக்கிறார் என்று. எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

Link to comment
Share on other sites

இவரை வட கிழக்கு கத்தோலிக்க மக்கள் தங்களது கர்தினாலாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் சிங்கள மக்களுக்குத்தான் கர்தினால். வட கிழக்கு தமிழ் கத்தோலிக்கர்கள் தங்களுக்கு தனியான பிரிவை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது வெளியில் தெரியாவிடடாலும் நீறு பூத்த நெருப்பாக இது கனன்றுகொண்டு இருக்கிறது.

நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் இது விளங்கும். காத்தோலிக்கர்களின் முக்கியமான மடுமாதா  திருவிழாவில் இவர் ஒரு நாளுமே கலந்துகொள்ளவில்லை. போப்பாண்டவர் இலங்கை வந்தபோது இவரையும் அழைத்துக்கொண்டு மடுவுக்குப்போனார் பிரச்சினையை தீர்க்க. இருந்தாலும் இது இன்னும் தீர்க்கப்படவில்லை.

இவர் தன்னை ஒரு சிங்கள கத்தோலிக்கராகவே அடையாளப்படுத்துபவர். அதனால் தமிழ் கத்தோலிக்கர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில்லை.

ஏப்ரில் குண்டு தாக்குதலுக்கு பின்னர் இவர் எல்லா இடமும் சென்றார் , ஏன் ஒரு பவுத்த பிக்கு உண்ணாவிரதமிருந்து இடத்துக்கும்  சென்றார். ஆனாலும் மடடகளப்பு   கிறிஸ்தவ   தேவாலயத்துக்கு  செல்லவில்லை. அநேக பத்திரிகைகளில் இதை சுட்டிக்காடிய பின்னர்தான் அங்கு ஓடிப்போனார். இருந்தாலும் தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான  பணத்தில் அவர்களுக்கு சொல்லும்படியாக ஏதும் கொடுக்கவுமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.