Jump to content

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி தீவும்..! நித்தியும்..! கடல்லே இல்லையாம்…! ஈகுவடார் நாடு மறுப்பு..!

Dec 06, 2019 0 230
157565062491696.jpg

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம், சர்வதேச அகதியாக குடியேறுவதற்கு அனுமதி கேட்ட நித்தியின் கோரிக்கையை ஏற்காததால் தங்கள் நாட்டை விட்டு அவர் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தாவுக்கு உலகம் முழுவதும் 17 நாடுகளில் 108 ஆசிரமங்கள் உள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதபாத் ஆசிரமத்தில் பாலியல் பலாத்கார புகார் எழுந்தது.

சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கடத்தல் உள்ளிட்ட வழக்கில் தேடப்படும் நித்தியானந்தாவை பிடிக்க இண்டர்போல் உதவியை அகமதாபாத் காவல் துறையினர் நாடியுள்ளனர்.

நித்தி தனது சிஸ்ய லேடிகளுடன் தெற்கு அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக தொடங்கி இருப்பதாக நித்தியின் www.kailasaa.org என்ற இணையத்தில் அறிவித்திருந்தார்

அதில் பாஸ்போர்ட், தனி கொடியுடன் 11 விதமான பாலியல் செய்கைகளுக்கு தனது தீவில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி தனிநாடாக அறிவிக்க கோரி ஐ.நா.சபைக்கு கடிதம் ஒன்றையும் நித்தி எழுதியுள்ளதாக இணையத்தில் தெரிவிக்கப்படிருந்தது.

ஈகுவடார் நாட்டின் தனி தீவை, நித்தி, கன்னி தீவாக மாற்ற முயற்சிக்கும் தகவல்கள் தொடர்ந்து செய்திகளாக வெளியானதால், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதை தொடர்ந்து மிரண்டு போன இந்தியாவுக்கான ஈகுவடார் தூதரகம் மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுயமாக தன்னை தானே குருவாக அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த இடத்தையோ, அல்லது தீவுகளையோ வாங்க வில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச அகதிகள் குடியேற்ற விதியின் கீழ் நித்தியானந்தா அனுமதி கேட்டதாகவும், அதனை ஈகுவடார் அரசு ஏற்கவில்லை என்பதால் ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈகுவடார் நாட்டில் தனித் தீவு வாங்கியிருப்பதாக வந்த அத்தனை செய்திகளுக்கும், நித்தியானந்தா பீடத்தின் சார்பில் இயங்கிவரும் KAILASAA.ORG என்ற இணைய நிறுவனமும் அவரது பீடத்தில் பணிப்புரியும் அலுவலர்களே பொறுப்பு என்று ஈகுவடார் தூதரகம் கூறியுள்ளது.

எனவே, இனிவரும் நாள்களில் நித்தியானந்தா ஈகுடவார் நாட்டில் இருப்பதாக எந்த செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்றும் இந்தியாவுக்கான அந்நாட்டு அரசின் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கன்னிதீவு கதைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது

இந்த நிலையில் சிஷ்ய அடிபொடிகளுடன் கண்டம் விட்டு கண்டம் தாவியுள்ள நித்தி அடைக்கலம் தேடி அகதியாக வடக்கு அமெரிக்காவில் உள்ள ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே திருவண்ணாமலையில் சாதாரணமாக இருந்த தன்னை ஊர் ஊராக அடித்து துரத்தியதால், கைலாசா என்று தனி நாடு அமைக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதாக நித்தி முழங்கியுள்ளார்.

 

https://www.polimernews.com/dnews/91696?fbclid=IwAR33e9NSonMYxN5XRyeLE4o2Ekmwpnr3femBhIUwSMUm3wmkTXW649SrALA

 

 

Link to comment
Share on other sites

பல பிழைகள்தான் சில கண்டுபிடிப்புகளுக்கும்,முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சீடரையும் சல்லாபத்துக்கு இழுத்தவர் நித்தி! கைலாசா நித்திக்கு எதிராக கன்னாபின்னா குற்றச்சாட்டுகள். .!

tedjplrv-jpg_1200x630xt.jpg

வெங்காய விலையேற்றம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென நித்தியானந்தாவின் தனி நாடு, தனி பாஸ்போர்ட், சிஷ்யைகளுடன் லீலைகள் என்று குஜால் விவகாரங்களாக  கூடி கும்மி அடிக்கின்றன நாட்டை. இதுவரையில் தென்னிந்தியாவை மட்டுமே கலக்கி வந்த நித்தி புராணம், இந்த முறை தேசம் முழுவதுமே பற்றி எரிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் ‘தேசம் முழுவதையும் வெங்காய விலையேற்றம் போட்டு ஆட்டுவதால்தான்!’ என்கின்றனர் விமர்சகர்கள்.

இந்த பகீர் விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட நித்தியானந்தாவுக்கு எதிராக  கிளந்து எழுந்து நிற்போர், அவரைப் போட்டு புரட்டி எடுத்துக் கொண்டேதான் உள்ளனர். அந்த வகையில், நித்தியின் முன்னாள் சீடரும், அவரது ஆசிரமத்தின் முக்கிய நிர்வாகியுமான ஜனார்த்தன சர்மா இப்போது நித்தியை பின்னிப் பேர்த்து எடுக்கிறார். காரணம், நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு முக்கிய இளம் பெண்களில் இவரது மகள்கள் இருவரும் அடக்கம்.

ஜனார்த்தன சர்மா இப்போது ஒரு பேட்டியில்...”நித்தியானந்தா எங்கே இருக்கிறார் அப்படின்னு தெரிஞ்ச ஒரு பத்து பேர் இன்னும் ஆசிரமத்துக்குள்ளேதான் சுத்திட்டு இருக்கானுங்க. அவங்களை வகையா விசாரிச்சால், உண்மை தெரிஞ்சுடும். இந்துக்களுக்கு தனி நாடுன்னு திடீர்ன்னு அவன் சொல்றான்னா (நித்திதான்) அதுக்கு என்ன காரணம்? அதை புரிஞ்சுக்கணும். இதையெல்லாம் நாங்க அங்கே இருக்கும்போதே போட்ட்ட ஸ்ட்ராட்டஜீஸ்.

நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குள்ளே மிக தவறான வழியில் சிறுமிகளை நடத்துறாங்க. பெண்கள் கையில் பெங்களூரு ரோஸ் பூவை கொடுத்து,  லைட்டை அணைக்க வெச்சுட்டு என்னவெல்லாமோ பண்றாங்க. உள்ளே இருக்கிற பெண்களுக்கு ஆபாச படங்களை நித்தியானந்தாவே அனுப்புவார். ஆண்களை,  ஆண் சீடர்களை கூட சல்லாபத்துக்கு அவர் கூப்பிட்டிருக்கார், இது ஆதாரப்பூர்வமா உறுதியாகியிருக்குது. பாதிக்கப்பட்ட பையனே சொல்லியிருக்கான்.” என்று விளாசி தள்ளியிருக்கிறார்.

தனக்கு எதிராக இந்த தேசத்தில் பெரும் ‘பலான குற்றச்சாட்டு’ புயல் கிளம்பியிருக்கும் நிலையிலும், ஏதோ கடற்பரப்பில் உட்கார்ந்து கொண்டு  "கெக்கே பிக்கே" ன்னு சிரிச்சுகிட்டு ‘என்னை பார்த்தால் உனக்கு ஏன் வயிறு எரியுது? எனக்கு கூந்தல் இருக்குது, அள்ளி முடியுறேன்’ என்று லாஜிக்கலாக லந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
ஹும்! கொடுத்து வச்சவரு.

https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/controvesy-news-about-nithiyananda-q2726x

Link to comment
Share on other sites

 

On 12/6/2019 at 7:16 PM, விசுகு said:

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் எந்த ஒரு இடத்தையோ, அல்லது தீவுகளையோ விலைக்கு வாங்க வில்லை என்று மறுத்துள்ள ஈகுவடார்  நாட்டு தூதரகம்,

என் மனைவிக்கு பொட்டு வைத்த முகத்துடன் படமெடுத்துக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கைலாச நாட்டை நம்பியிருந்தேன். கெடுத்துவிட்டார்களே பாவிகள்.😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.