Jump to content

இதயத் துடிப்பு நின்று 6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பட்ட அதிசயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
audrey1.jpg?itok=4rqUk9S9

‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER

6 Dec 2019 21:12

மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் மலைப்பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது பனிப்புயலில் சிக்கினார்.

 

ஆனால், மீட்புக் குழுவினர் அந்தத் தம்பதியினரை அணுகுவதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு முன்பாக அந்த 34 வயதுப் பெண்மணியின் இதய இயக்கம் நின்றுபோனதாகவும் அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டது. அவரது உடல் வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாக இருந்தது.

அவர்களைக் கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் அங்கேயே மேற்கொண்ட இதய இயக்க மீட்பு சிகிச்சைகள் பலனளிக்காததால் ஒரு ஹெலிகாப்டர் மூலம் பார்சிலோனாவில்  ‘இசிஎம்ஓ’ என அழைக்கப்படும் சிறப்பு ஆக்சிஜனேற்ற சவ்வு கருவி இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 

நோயாளியின் இதய அமைப்புடன் இணைக்கப்பட்டதும் அவரது இதய, நுரையீரல் செயல்பாடுகளை  ‘இசிஎம்ஓ’ மேற்கொள்ளும். அதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கப்பட்டு இரு உறுப்புகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஸ்பெயினில் அதுவரை இதய இயக்க மீட்பு சிகிச்சை யாருக்கும் அளிக்கப்பட்டிருக்கவில்லை.

‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

அதிர்ஷ்டவசமாக அவரது இதயம் இயங்கத் தொடங்கியது. 

  இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரது இதயத்தைச் செயல்பட வைக்க ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட சிகிச்சை இது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

கடுங்குளிர் அவரை ‘கொன்றா’லும் குறைந்த வெப்பநிலை காரணமாக அவரது உடல் உறுப்புகளுக்கு மிகக் குறைந்த அளவே ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தேவைப்பட்டதால் அவரது மூளை பாதுகாக்கப்பட்டது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூளை பாதிப்பு ஏதுமின்றி ஆறு நாட்களுக்குள்ளாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று கூறிய மருத்துவர்கள் அவர் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவார் என்றனர்.  

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

https://www.tamilmurasu.com.sg/world/story20191206-37382.html?fbclid=IwAR21EE6cqvy83WX8ag3-uvRRZpAMucdxIW0fB-bD9UeFgHLJXjrB-03AAHo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.