Jump to content

இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளேன் : நீந்தி கரையேறுவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளேன் : நீந்தி கரையேறுவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

இரண்டு கருங்கற்கள் கட்டப் பட்டு சமுத்திரத்தில் நான் தள்ளிவிடப்பட்டுள்ளேன். எனி னும் நீந்தி கரையேறுவேன் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், மரக்கறி மொத்த விற்பனை நிலையம் என்பவற்றிற்கு சென்று அங்கு பலரையும் சந்தித்ததன் பின்னர் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

du.jpg

இங்கு தொடர்ந்தும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

பலரின் கோரிக்கைக்கு இணங்க நான் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெற்றே அமைச்சு பதவியை எடுக்கும் நோக்கம் இருந்தது. எனினும் பலரின் கோரிக்கைக்கு அமைய தற்போது அமைச்சு பதவியை பெற்றிருக்கின்றேன்.

இது நாடுதழுவியதான அமைச்சாகவுள்ளது. என்னை சமுத்திரத்தில் தள்ளிவிட்டுள்ளனர். எனினும் நான் சமுத்திரத்தில் நீந்துவது என்று முடிவெடுத்து இருந்தாலும் இரு பக்கமும் இரு கருங்கற்கல் கட்டப்பட்டுள்ளன.

அதில் ஒன்று தேசிய அமைச்சு என்ற கருங்கல் மறுபக்கம் தமிழர்களின் பிரச்சினைகள் என்ற கருங்கல். ஆகவே இந்த கருங்கற்களை கட்டிக்கொண்டே நான் இந்த சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன். எனக்கு கடந்த காலத்தில் சமுத்திரத்தில் நீந்திய அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.  மக்கள் நலனை முன்னிறுத்துவதால் என்னால் நீந்த முடியும் என நம்புகின்றேன். எனினும் மக்களினுடைய பக்கபலம் அவசியமானது. 

ஆட்சியாளர்களுடன் கதைப்பதில் எனக்கு சில சங்கடங்கள் உள்ளன. ஏனென்றால் நான் வெல்லவில்லை. நான் எதிர்பார்த்தது போல் தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதை சொல்வதற்கு நான் தயங்கவில்லை. எனவே வர இருக்கும் சந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். 

ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வாக்குகளை விட எனக்கு கிடைத்த வாழ்த்துக்கள் பல மடங்கு அதிகமாகவுள்ளது. 

குறைந்தது அடுத்த 5 வருடங்களாவது இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும். ஜே ஆர் ஜெயவர்த்தன யுத்தகாலத்தில் அந்த பிரச்சினைகளில் ஈடுபடவில்லையா? பிரேமதாசா யுத்தம் நடத்தும் போது அவர் ஈடுபடவில்லையா? சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடவில்லையா? யுத்தம் வந்தால் அது எங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம். 

71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டும் சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும்போது பாதிக்கப்பட்டது அப்பாவி சிங்கள மக்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் புலித்தலைமைகள் வன்முறையை தொடர்ந்தமையால் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மக்கள். சமீபத்தில் முஸ்லீம் மக்களின் பெயரால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டது அப்பாவி முஸ்லீம் மக்கள். ஆகவே அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை தலைதூக்கும் போது இது நடப்பது தவிர்க்க முடியாதது. இது உலக வரலாறு. இதற்கு உலகில் எந்த நாடும் விதிவிலக்காக இருந்ததில்லை. 

ஆகவே நாங்கள் எங்களில் தவறுகளையும் குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு எங்கள் சுயலாப அரசியலுக்காக நாங்கள் எங்கள் மக்களை பலிகொடுத்துள்ளோம். 

செல்வநாயகம் ஐயா தன்னால் முடியாத போது கூறியிருந்தார் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் கடவுள்தான் வரவேண்டும் என. நானும் எனது இறுதிக்காலட்டத்தில் கூற விரும்புவது இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும் என தெரிவித்தார்
 

https://www.virakesari.lk/article/70607

Link to comment
Share on other sites

"அதில் ஒன்று தேசிய அமைச்சு என்ற கருங்கல் மறுபக்கம் தமிழர்களின் பிரச்சினைகள் என்ற கருங்கல். ஆகவே இந்த கருங்கற்களை கட்டிக்கொண்டே நான் இந்த சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன். எனக்கு கடந்த காலத்தில் சமுத்திரத்தில் நீந்திய அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.  மக்கள் நலனை முன்னிறுத்துவதால் என்னால் நீந்த முடியும் என நம்புகின்றேன். எனினும் மக்களினுடைய பக்கபலம் அவசியமானது"

"செல்வநாயகம் ஐயா தன்னால் முடியாத போது கூறியிருந்தார் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் கடவுள்தான் வரவேண்டும் என. நானும் எனது இறுதிக்காலட்டத்தில் கூற விரும்புவது இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும் என தெரிவித்தார்"

தமிழ் மக்கள் என்ற பிரச்சனையை வைத்து, மக்களிடம் வாக்குகளை கேட்டு, தம்மை மட்டுமே வளர்த்துக்கொண்டு, பின்னர் கடவுளின் மண்டையில் பாரத்தை போட்டுவிடுவதே எமது அரசியல் தலைவர்களின் சூத்திரம் 

Link to comment
Share on other sites

43 minutes ago, கிருபன் said:

இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளேன் : நீந்தி கரையேறுவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

ஒன்று டாக்கி குழுவின் கடத்தல் தொழிலுக்கு உள்ள சவால், இரண்டு டாக்கி குழுவின் கொலைத் தொழிலுக்கு உள்ள சவால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழ் மக்கள் என்ற பிரச்சனையை வைத்து, மக்களிடம் வாக்குகளை கேட்டு, தம்மை மட்டுமே வளர்த்துக்கொண்டு, பின்னர் கடவுளின் மண்டையில் பாரத்தை போட்டுவிடுவதே எமது அரசியல் தலைவர்களின் சூத்திரம் 

100 வீதம் உண்மையான கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.