Jump to content

8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை  பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்றிரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/8-வயது-சிறுமியை-ஒரு-வருடமா/?fbclid=IwAR2JQHF0Zafn1WP50RnHOjdTRDFI1GFRGeRl-dHk6j13Kta-mhRNiKh5FrY 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடி தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரோ எங்க‌ த‌மிழ் ச‌முதாய‌ம் ரொம்ப‌ கெட்டு போச்சு , ம‌னித‌ நேய‌ம் இல்லா த‌ந்தை , வ‌ய‌து கூடின‌தொலிய‌ , அறிவு த‌ந்தையிட‌ம் சுத்த‌மாய் இல்லை 😓, வாழ் நாள் பூரா சிறையில் வாட‌னும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளிநாடு வந்தால் நானும் நண்பனும் சேர்ந்து இரண்டு உதை,கண்ணத்தில் ஓர் அறை ஓர் எச்சிதுப்பு, சேர்டை பிடித்து தள்ளி விட்டு ஞாயம் கேட்டிருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, colomban said:

இவர் வெளிநாடு வந்தால் நானும் நண்பனும் சேர்ந்து இரண்டு உதை,கண்ணத்தில் ஓர் அறை ஓர் எச்சிதுப்பு, சேர்டை பிடித்து தள்ளி விட்டு ஞாயம் கேட்டிருப்பேன்.

உற‌வே இது என‌க்கு க‌ல் வைச்சு எறியிர‌ மாதிரி தெரியுது 😁😂,

ச‌முதாய‌த்தை திருத்த‌ வெளிக்கிட்டால் , எங்க‌டைய‌ல் சொல்லுவின‌ம்  , உப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் அதிக‌ம் ந‌ட‌க்குது என்று , 

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல் வ‌ழி என்று ப‌ய‌ணிக்கும் போது உப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கேள்வி ப‌டும் போது பெரும் அதிர்ச்சியாய் இருக்கும் ,

ப‌ழ‌சை கில‌ற‌ வேண்டாம் அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்றது. சொந்த மகள் அதுவும் 8 வயசில். பொலீசில் பிடித்து கொடுத்த தாய்க்கு ஒரு சல்யூட். இனி அவள் தன்னையும், பிள்ளையையும் இந்த சமூகத்தில் இருந்து காக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

உற‌வே இது என‌க்கு க‌ல் வைச்சு எறியிர‌ மாதிரி தெரியுது 😁😂,

பையன் சும்மா சிரிப்புக்காக எழுதப்பட்டது.  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படி நடந்திருந்தால், அந்த சிறுமியின் வாழ்நாளில் ஆற்றப் பட முடியாத காயங்கள் இருப்பினும்,   தனிப்பட்ட உறவுகள் மற்றும்   சமூகவளவில் இது சீர்திருத்தமும், முன்னேற்றமும்.

1) சிறுமி இடம் உள்ள விழிப்புணர்வு, 

3) அதை தாயிடம் துணிவாக கொண்டு சென்றது.

3) தாய், தனது கணவன், சிறுமியின் தந்தை என்பதை மேவி, பிள்ளைக்கு நீதி பரிகாரம் தேடியது.

இவை போன்ற செயற்பாடுகளே, முற்றாக இந்த சீரழிவை நிறுத்தாவிட்டாலும், குறைப்பதற்கு வழி வகுக்கும்.

அடி, வெடி என்பது,  தண்டனை கொடுப்பவர் மற்றும் சமூகத்தின் வெப்பியாரம் என்பதை  உடனடியாக தணித்தாலும், சிறுமியை நீண்ட காலப்  போக்கில் எவ்வாறு பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அது நீதியாகவும் அமையாது.
 
பிரச்னை என்னவென்றால், தந்தை இப்படி செய்தாலும், அவ்வப்போது பிள்ளை எனும் பிணைப்பு ஏற்றப்பட்டு இருக்கும். 

காலம் போக, பிள்ளையின் உணர்வும், தற்போதுள்ள அருவருப்புடன் கூடிய கோபம், குரோதம் முற்றாக நீங்காவிட்டாலும், தான் செய்தது proportional ஆ எனும் குற்ற உணர்வு வரலாம், எதிர் காலத்தில் இப்படியான பிரச்னைகள் சீர்திருத்தம் என்பதன் அடிப்படையில் அணுகப்படும் பொது.

தந்தை இறப்பதற்கு அல்லது பகிரங்கமாக மற்றவர்களிடம் அடிவாங்குவதற்கு வழிகோலிவிட்டேன் என்ற குற்ற உணர்வு, தந்தை செய்ததை விட, சிறுமியின் வாழ்க்கையை மேலும் சீரழிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. 

இந்த குற்றத்திற்கும், தண்டனைக்கும், நீதிக்கும் உள்ள proportionality, தனிமனித உறவுகளுக்கிடையில் வரும் போது, மயிரிழையிலும் மெலிதாக உள்ளது.

இது போன்ற வழக்கில், jury service செய்யும் போதே இவற்றை புரிந்து கொள்ள முடிந்தது.

 

Link to comment
Share on other sites

வேலியே பயிரை மேய்க்கிற நிலை கொடுமையானது.
போகிற போக்கில இதுக்கும் என்கவுண்டர் தீர்வு தான் சரி என்ற நிலை வரலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.