Jump to content

பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு


Recommended Posts

பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு

சிறு உற்பத்தியாளருக்கு ஊக்குவிப்பு
  • பிரதமர், தந்து நிதி அமைச்சுப் பொறுப்பின்கீழ் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
  • உள்நாட்டு உற்பத்தியாளரை ஊக்குவிக்குமுகமாக 9 வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது
  • கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது
  • ஆனாலும் உள்நாட்டு மறுசுழற்சி (recycling) நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு
  • வெசாக் லாம்புகள், பட்டங்கள், ஊதுபத்தி இறக்குமதிக்குத் தடை
download-1.jpg
பிரதமர் ராஜபக்ச

சிறிய விவசாய, உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் பொருட்டு 9 பொருட்களின் இறக்குமதிக்கான தடையை இரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரகடனப் படுத்தியுள்ளார்.

இங்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்குள்ளாக்கப்பட்டு மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இனிமேல் இப்படியான இறக்குமதிகள் அனுமதிக்கபடமாட்டாது. ஏற்கெனவே இலங்கையில் தொழிற்பட்டுவரும் மறுசுழற்சித் தொழிற்சாலைகள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு.

பல வாசனைத் திரவியங்கள் (spices) இறக்குமதி செய்யப்பட்டு ‘இலங்கைத் தயாரிப்புகள்’ என மீளேற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்களும் மீளேற்றுமதி செய்யப்படும்போது இலங்கையின் பெயருக்குக் களங்கத்தை உண்டுபண்ணுகிறது. இனிமேல் இப்படியான இறக்குமதிகளைச் செய்யமுடியாது. உண்மையானதும், தரமானதுமான இலங்கையின் உற்பத்திகள் மட்டுமே இனிமேல் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் உள்நாட்டு விவசாயிகள் இலாபமடைவர்.

 

பல ஏற்றுமதி / இறக்குமதியாளர்கள் தரங்குறைந்த வெளிநாட்டு வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்து அவற்றுடன் உள்ளூர் உற்பத்திகளைக் கலந்து ‘உண்மையான சிலோன் உற்பத்திகள்’ என்ற பெயரொட்டிகளுடன் மீளேற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம், எங்களது தூய உற்பத்திகளின் நற்பெயர் கெட்டுப்போவதுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியாளர்களும் நட்டமடைகின்றனர் என நிதியமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

இறக்குமதி தடைசெய்யப்பட்ட வாசனைத் திரவியங்களில் சில: மிளகு (pepper), சாதிக்காய் (nutmeg), புளி (tamarind), சாதிபத்திரி (mace), இலவங்கப்பட்டை (cinnamon), பாக்கு (areca-nut), இஞ்சி (ginger).

முதலாவது வர்த்தமானி அறிவித்தலின்படியான, வாசனைத் திரவியங்களின் மீதான இறக்குமதித் தடை, ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குப்பிடப்பட்டவற்றில் முக்கியமான ஒன்று. அதே வேளை பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி பல ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்த ஒன்று.

இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் வெசாக் கொண்டாட்டங்களின்போது பாவிக்கப்படும் லாம்புக் கூடுகள், பட்டங்கள் மற்றும் ஊதுபத்திகள் ஆகியவற்றைத் தடை செய்கிறது.

இரண்டு அறிவித்தல்களும் வியாழன் நள்ளிரவு நடைமுறைக்கு வருகின்றன.

9 மாவட்டங்களிலுமுள்ள விவசாயிகளும், உள்நாட்டு ஊதுபத்தி தயாரிப்பாளர், பட்டம் மற்றும் கூண்டுகள் தயாரிப்பாளர்களும் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://marumoli.com/பிளாஸ்டிக்-கழிவுகள்-வாச/?fbclid=IwAR1b9awb66OQnLRzsE5lQ4tEP2jWEIdOVx8uiKfuV8rLM2JTOWnN9la3QdE

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.