Jump to content

ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா 

ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை.

2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலகட்டம். இந்தக் காலகட்டம் முற்றிலும் மகிந்த ராஜபக்சவின் ஆளுகைக்குள் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்கா இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்தது. இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த அழுத்தங்களின் பின்னால் செல்வதே கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியலாக இருந்தது. இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியல் என்பது முற்றிலும் சர்வதேச சமூகம் என்னும் ஒரு சொல்லுடன் கழிந்தது. ஆனாலும் ராஜபக்ச அமெரிக்க அழுத்தங்களுக்கு பணியவில்லை. அதனை உலகாளாவிய முரண்பாடுகளின் வழியாக கையாள முடியுமென்று நம்பினார். அதாவது, அமெரிக்க அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு சீனாவுடன் நெருங்கிச் செல்வதை ஒரு உபாயமாகக் கைக்கொண்டார். அமெரிக்க அழுத்தங்கள் அதிகரித்த போது, இலங்கைக்கும் சீனாவுக்குமான நெருக்கமும் அதிகரித்தது. இலங்கையுடனான சீனாவின் நெருக்கம் அதிகரித்துச் செல்வது, இந்தியாவின் கரிசனைக்குரிய ஒன்றானது. இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்குவகித்தது.

2015இலிருந்து 2019 வiரான காலகட்டம் இரண்டாவது காலகட்டமாகும். இக்காலகட்டம் முற்றிலும் நம்பிக்கையுடன் அணுகப்பட்டது. மைத்திரி-ரணில் தேசிய அரசாங்கம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அபூர்வமான அரசாங்கம் என்று புகழப்பட்டது. அதிகம் இந்தப் புகழ்ச்சி வேலைகளில் கூட்டமைப்பே ஈடுபட்டது. இக்காலகட்டத்தில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியில் இருக்கவில்லை மாறாக, அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயற்பட்டது. தாங்களும் அரசாங்கமும் இணைந்து ஒரு அரசியல் தீர்வை காண்போம் என்பதே கூட்டமைப்பின் பிரச்சாரமாக இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான், தேசிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக ரணில் – மைத்திரி பிளவு ஏற்பட்டது. இதன்போது கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அணியாக மாறியது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை நோக்க வேண்டும். ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரியை ஆதரித்த கூட்டமைப்பு, பின்னர் மைத்திரியை எதிர்த்து ரணிலை ஆதரிக்கின்றது. மைத்திரி-ரணில் மோதலின் உச்சமாகவே ஒக்டோபர் 2018இல், ரணிலை மைத்திரி பதவிநீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கின்றார். இது அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் மைத்திரியை எதிர்த்து செயற்பட்டார்.

13 deamnds

உண்மையில் கூட்டமைப்பு இந்த இடத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நடந்துகொள்ளவில்லை. ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு அங்கமாகவே செயற்பட்டிருந்தது. தேசிய அரசாங்கம் எப்போது தோல்வியடைந்ததோ அப்போதே கூட்டமைப்பின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. அதன் பின்னர் கூட்டமைப்பினால் முன்னெடுப்பட்ட சில விடயங்கள் பற்றி ஒரு வரியில் கூறுவதனால், அவை அனைத்தும் கூட்டமைப்பின் பெயரால் ஒரு சில தனிநபர்களின் லாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

இந்த பின்புலத்தில் நோக்கினால் இப்போது மூன்றாவது காலகட்டம். இந்தக் காலகட்டத்தை எவ்வாறு தமிழர் தரப்பு எதிர்கொள்ளப் போகின்றது? முதல் இரண்டு கட்டங்களும் கூட்டமைப்பினால் மட்டுமே கையாளப்பட்டது. அதில் கூட்டமைப்பு முற்றிலும் தோல்வியடைந்திருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் மூன்றாவது காலகட்டத்தை கையாளுவதற்கான ஏகபோக அனுமதியை கூட்டமைப்பிடம் கொடுக்கலாமா? அது புத்திசாதுர்யமான அரசியல் அணுகுமுறையாக இருக்குமா? ஓன்றில் இந்தக் காலகட்டத்தை பல தரப்புக்களாக கையாள வேண்டும் அல்லது ஒரு பரந்தளவிலான ஜக்கிய முன்னணி தந்திரோபாயத்தின் ஊடாக கையாள வேண்டும். ஏனெனில் இதுவரை கால தமிழ் அரசியல் வரலாற்றின்படி, ஒற்றைத் தன்மையான அணுகுமுறைகளே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. ஆனால் அந்த அணுமுறை மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாண்டுவந்தது ஆனால் அனைத்துமே படுதோல்வி. இவ்வாறானதொரு பின்னணியில், கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாளுமாயின் அது இருக்கும் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும். அதே வேளை கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சி ஜக்கிய தேசியக்கட்சியுடன் அதிகம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கட்சி. எனவே அதன் தலைமையில் புதிய ஆடசியாளர்களை எதிர்கொள்ள முடியாது. அப்படியாயின் இதனை எவ்வாறுதான் எதிர்கொள்ளுவது? சில தெரிவுகள் உண்டு.

தெரிவு ஒன்று : விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு வலுவான கூட்டை ஏற்படுத்திய பின்னர், கூட்டமைப்புடன் வலுவானதொரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக, ஒரு ஜக்கிய முன்னியாக செயற்பட முடியும். இதன் மூலம் ஒரு கட்சி தனித்து முடிவெடுப்பதை தடுக்கலாம். புதிய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயம் என்னும் வகையிலேயே இந்த ஜக்கிய முன்னனியை நோக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் குறித்த ஜக்கிய முன்னணி கட்டாயமாக பொதுச் சின்னம் ஒன்றின் மூலமே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இது தொடர்பில் ஒரு வெகுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும்.

தெரிவு இரண்டு : பொதுச் சின்னம் மற்றும் வலுவான உடன்பாட்டிற்கு தமிழரசு கட்சி உடன்படாத நிலையில், ஏனையவர்கள் அனைவரும் ஓரணியாக இணையும் வகையில் ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் சில அடிப்படையான விட்டுக் கொடுப்புக்கள் அனைவருக்கும் அவசியப்படும். அதே வேளை ஒருவரது கடந்தகால நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால சவால்களை நோக்கக் கூடாது. அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே இவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி சாத்தியப்படும்.

தெரிவு மூன்று : கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இதற்கு உடன்படாத பட்சத்தில், விக்கினேஸ்வரனது தலைமையை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள் ஒரணியில் வருவதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தலைமையை ஏற்படுத்தலாம். இதன் மூலமும் ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுவதை தடுக்க முடியும். ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுமாயின் அது எப்போதும் மோசமான விளைவுகளையே தரும்.

என்னதான் ஜக்கிய முன்னணி, மாற்றுத் தலைமை தொடர்பில் விவாதங்கள் செய்தாலும் அதன் அரசியல் பெறுமதி அதன் தேர்தல் வெற்றியில்தான் தங்கியிருக்கின்றது. எனவே எந்தவொரு உக்தியும் தேர்தலில் வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் வைத்து தேர்தலை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் தேர்தல் வெற்றியே எந்தவொரு கூட்டுக்கும் அரசியல் ரீதியில் பெறுமதியை வழங்குகின்றது. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் நிச்சயம் தேர்தலில் வெற்றியை பெறுவதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக விக்கினேஸ்வரன் தேர்தலில் தோல்வியடைவாராக இருந்தால் அதன் பின்னர் அவரது கருத்துக்களை அரசாங்கமும் பிறநாடுகளும் கருத்தில் கொள்ளப் போவதில்லை. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் விக்கினேஸ்வரனை தோற்கடித்துவிடவும் கூடாது. அதற்கு ஏற்றவாறு ஜக்கிய முன்னணிக்கான உபாயம் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக சுமந்திரனின் அழைப்பை ஏற்று விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைவாராயின் அவர் நிச்சயம் தேர்தலில் தோல்வியடைவார். எனவே அந்த அழைப்பை சாதகமாக பரிசீலியுங்கள் என்று எவரேனும் விக்கினேஸ்வரனிடம் கூறுவார்களாயின் அவர்கள் விக்கினேஸ்வரனை தோற்கடிக்கும் வேலைத்திட்டமொன்றில் இருப்பவர்களாவர். ஏனெனில் விக்கினேஸ்வரனை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே அவரை தோற்கடிக்கும் உபாயம் பற்றியே தமிழரசு கட்சியினர் சிந்திப்பர். எனவே ஜக்கிய முன்னணி தொடர்பில் சிந்திக்கும் தரப்பினர் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டே சிந்திக்க வேண்டும். வெறும் புரிந்துனர்வு உடன்பாடுகளும், புலமைத்துவ விளக்கங்களும் தேர்தலில் வெற்றியை ஏற்படுத்தாது. எனவே இது தொடர்பில் ஈடுபடும் புத்திஜிவிகள் என்போர் புதிய அரசியல் கூட்டுக்கள் தொடர்பில் சிந்திக்கும் போது, தேர்தல் வெற்றியை மறந்துவிடக் கூடாது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஒரு-பரந்த-ஜக்கிய-முன்னணி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.