Jump to content

ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா 

ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை.

2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலகட்டம். இந்தக் காலகட்டம் முற்றிலும் மகிந்த ராஜபக்சவின் ஆளுகைக்குள் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்கா இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்தது. இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த அழுத்தங்களின் பின்னால் செல்வதே கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியலாக இருந்தது. இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியல் என்பது முற்றிலும் சர்வதேச சமூகம் என்னும் ஒரு சொல்லுடன் கழிந்தது. ஆனாலும் ராஜபக்ச அமெரிக்க அழுத்தங்களுக்கு பணியவில்லை. அதனை உலகாளாவிய முரண்பாடுகளின் வழியாக கையாள முடியுமென்று நம்பினார். அதாவது, அமெரிக்க அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு சீனாவுடன் நெருங்கிச் செல்வதை ஒரு உபாயமாகக் கைக்கொண்டார். அமெரிக்க அழுத்தங்கள் அதிகரித்த போது, இலங்கைக்கும் சீனாவுக்குமான நெருக்கமும் அதிகரித்தது. இலங்கையுடனான சீனாவின் நெருக்கம் அதிகரித்துச் செல்வது, இந்தியாவின் கரிசனைக்குரிய ஒன்றானது. இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்குவகித்தது.

2015இலிருந்து 2019 வiரான காலகட்டம் இரண்டாவது காலகட்டமாகும். இக்காலகட்டம் முற்றிலும் நம்பிக்கையுடன் அணுகப்பட்டது. மைத்திரி-ரணில் தேசிய அரசாங்கம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அபூர்வமான அரசாங்கம் என்று புகழப்பட்டது. அதிகம் இந்தப் புகழ்ச்சி வேலைகளில் கூட்டமைப்பே ஈடுபட்டது. இக்காலகட்டத்தில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியில் இருக்கவில்லை மாறாக, அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயற்பட்டது. தாங்களும் அரசாங்கமும் இணைந்து ஒரு அரசியல் தீர்வை காண்போம் என்பதே கூட்டமைப்பின் பிரச்சாரமாக இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான், தேசிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக ரணில் – மைத்திரி பிளவு ஏற்பட்டது. இதன்போது கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அணியாக மாறியது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை நோக்க வேண்டும். ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரியை ஆதரித்த கூட்டமைப்பு, பின்னர் மைத்திரியை எதிர்த்து ரணிலை ஆதரிக்கின்றது. மைத்திரி-ரணில் மோதலின் உச்சமாகவே ஒக்டோபர் 2018இல், ரணிலை மைத்திரி பதவிநீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கின்றார். இது அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் மைத்திரியை எதிர்த்து செயற்பட்டார்.

13 deamnds

உண்மையில் கூட்டமைப்பு இந்த இடத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நடந்துகொள்ளவில்லை. ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு அங்கமாகவே செயற்பட்டிருந்தது. தேசிய அரசாங்கம் எப்போது தோல்வியடைந்ததோ அப்போதே கூட்டமைப்பின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. அதன் பின்னர் கூட்டமைப்பினால் முன்னெடுப்பட்ட சில விடயங்கள் பற்றி ஒரு வரியில் கூறுவதனால், அவை அனைத்தும் கூட்டமைப்பின் பெயரால் ஒரு சில தனிநபர்களின் லாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

இந்த பின்புலத்தில் நோக்கினால் இப்போது மூன்றாவது காலகட்டம். இந்தக் காலகட்டத்தை எவ்வாறு தமிழர் தரப்பு எதிர்கொள்ளப் போகின்றது? முதல் இரண்டு கட்டங்களும் கூட்டமைப்பினால் மட்டுமே கையாளப்பட்டது. அதில் கூட்டமைப்பு முற்றிலும் தோல்வியடைந்திருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் மூன்றாவது காலகட்டத்தை கையாளுவதற்கான ஏகபோக அனுமதியை கூட்டமைப்பிடம் கொடுக்கலாமா? அது புத்திசாதுர்யமான அரசியல் அணுகுமுறையாக இருக்குமா? ஓன்றில் இந்தக் காலகட்டத்தை பல தரப்புக்களாக கையாள வேண்டும் அல்லது ஒரு பரந்தளவிலான ஜக்கிய முன்னணி தந்திரோபாயத்தின் ஊடாக கையாள வேண்டும். ஏனெனில் இதுவரை கால தமிழ் அரசியல் வரலாற்றின்படி, ஒற்றைத் தன்மையான அணுகுமுறைகளே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. ஆனால் அந்த அணுமுறை மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாண்டுவந்தது ஆனால் அனைத்துமே படுதோல்வி. இவ்வாறானதொரு பின்னணியில், கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாளுமாயின் அது இருக்கும் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும். அதே வேளை கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சி ஜக்கிய தேசியக்கட்சியுடன் அதிகம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கட்சி. எனவே அதன் தலைமையில் புதிய ஆடசியாளர்களை எதிர்கொள்ள முடியாது. அப்படியாயின் இதனை எவ்வாறுதான் எதிர்கொள்ளுவது? சில தெரிவுகள் உண்டு.

தெரிவு ஒன்று : விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு வலுவான கூட்டை ஏற்படுத்திய பின்னர், கூட்டமைப்புடன் வலுவானதொரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக, ஒரு ஜக்கிய முன்னியாக செயற்பட முடியும். இதன் மூலம் ஒரு கட்சி தனித்து முடிவெடுப்பதை தடுக்கலாம். புதிய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயம் என்னும் வகையிலேயே இந்த ஜக்கிய முன்னனியை நோக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் குறித்த ஜக்கிய முன்னணி கட்டாயமாக பொதுச் சின்னம் ஒன்றின் மூலமே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இது தொடர்பில் ஒரு வெகுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும்.

தெரிவு இரண்டு : பொதுச் சின்னம் மற்றும் வலுவான உடன்பாட்டிற்கு தமிழரசு கட்சி உடன்படாத நிலையில், ஏனையவர்கள் அனைவரும் ஓரணியாக இணையும் வகையில் ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் சில அடிப்படையான விட்டுக் கொடுப்புக்கள் அனைவருக்கும் அவசியப்படும். அதே வேளை ஒருவரது கடந்தகால நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால சவால்களை நோக்கக் கூடாது. அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே இவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி சாத்தியப்படும்.

தெரிவு மூன்று : கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இதற்கு உடன்படாத பட்சத்தில், விக்கினேஸ்வரனது தலைமையை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள் ஒரணியில் வருவதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தலைமையை ஏற்படுத்தலாம். இதன் மூலமும் ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுவதை தடுக்க முடியும். ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுமாயின் அது எப்போதும் மோசமான விளைவுகளையே தரும்.

என்னதான் ஜக்கிய முன்னணி, மாற்றுத் தலைமை தொடர்பில் விவாதங்கள் செய்தாலும் அதன் அரசியல் பெறுமதி அதன் தேர்தல் வெற்றியில்தான் தங்கியிருக்கின்றது. எனவே எந்தவொரு உக்தியும் தேர்தலில் வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் வைத்து தேர்தலை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் தேர்தல் வெற்றியே எந்தவொரு கூட்டுக்கும் அரசியல் ரீதியில் பெறுமதியை வழங்குகின்றது. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் நிச்சயம் தேர்தலில் வெற்றியை பெறுவதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக விக்கினேஸ்வரன் தேர்தலில் தோல்வியடைவாராக இருந்தால் அதன் பின்னர் அவரது கருத்துக்களை அரசாங்கமும் பிறநாடுகளும் கருத்தில் கொள்ளப் போவதில்லை. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் விக்கினேஸ்வரனை தோற்கடித்துவிடவும் கூடாது. அதற்கு ஏற்றவாறு ஜக்கிய முன்னணிக்கான உபாயம் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக சுமந்திரனின் அழைப்பை ஏற்று விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைவாராயின் அவர் நிச்சயம் தேர்தலில் தோல்வியடைவார். எனவே அந்த அழைப்பை சாதகமாக பரிசீலியுங்கள் என்று எவரேனும் விக்கினேஸ்வரனிடம் கூறுவார்களாயின் அவர்கள் விக்கினேஸ்வரனை தோற்கடிக்கும் வேலைத்திட்டமொன்றில் இருப்பவர்களாவர். ஏனெனில் விக்கினேஸ்வரனை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே அவரை தோற்கடிக்கும் உபாயம் பற்றியே தமிழரசு கட்சியினர் சிந்திப்பர். எனவே ஜக்கிய முன்னணி தொடர்பில் சிந்திக்கும் தரப்பினர் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டே சிந்திக்க வேண்டும். வெறும் புரிந்துனர்வு உடன்பாடுகளும், புலமைத்துவ விளக்கங்களும் தேர்தலில் வெற்றியை ஏற்படுத்தாது. எனவே இது தொடர்பில் ஈடுபடும் புத்திஜிவிகள் என்போர் புதிய அரசியல் கூட்டுக்கள் தொடர்பில் சிந்திக்கும் போது, தேர்தல் வெற்றியை மறந்துவிடக் கூடாது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஒரு-பரந்த-ஜக்கிய-முன்னணி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.