Jump to content

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

btf.JPG

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் காலம் தாமதிக்காது அந்நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதற்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை போன்றவற்றை உள்ளடக்கிய தமிழ் மக்களின் அபிலாசைகளை மீழ வலியுறுத்தியதோடு நல்லினத்துக்கான வழிமுறையின் அவசியத்தையும் மற்றும் நீடிக்கக் கூடிய அரசியல் தீர்வையும் வலியுறுத்தியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

வடக்கு ,கிழக்கு ,மற்றும் மலையகப் பகுதிகளில் ஏறத்தாழ 60,000 வீடுகளை கட்டுவது என்ற பாரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்ததற்கும் மற்றும் உட்கட்டுமான மேம்படுத்தல், இணைப்புநிலை, திறன் மேம்பாடு ,கல்வி, கலாச்சார பரிமாற்றம் போன்ற அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதற்கு தங்களது அரசுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்

நாங்கள் 26 மே 2019 திகதியிட்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அக்கடிதத்தில் குறிப்பிட்டவாறு இலங்கையில் அமைதி, ஸ்த்திரநிலை, பாதுகாப்பு, செழுமை என்பவற்றை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக, நாட்டின் பல்லின, பன்மொழி மற்றும் பல மதத் தன்மைகளையும் நிபந்தனையின்றி அங்கீகரிக்க வேண்டும், எந்த முன்னுரிமையோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும், சமூகங்களையும் சமமாக நடத்த வேண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை புனரமைக்கவும் மீள் அபிவிருத்தி செய்வதற்குமான முயற்சிகளை உரிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் முழுமையான முறையில் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும், 

பொறுப்புக் கூறல் மற்றும் நீதி கிடைத்தலை கால தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும், உண்மையான நல்லிணக்க முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல் வேண்டும், இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தக் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய நீண்ட கால அரசியல் தீர்வை அமுல்படுத்தல் வேண்டும்

வரலாற்று ரீதியாக, இலங்கை அரசாங்கம் மேற்கூறிய நடவடிக்கைகள் எதனையும் தீவிரமாக செயல்படுத்தத் தயாராக இல்லை என்பதையே காட்டி வருகின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழ் அடையாளத்துடன் வாழும் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்ததாகி விடும்.

ஆதலினால், வரலாற்றின் இந்த தீர்க்கமான தருணத்தில், இலங்கை அரசாங்கத்துடன் உங்கள் ஈடுபாட்டினை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் நாங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு மேலும் தாமதமில்லாமல்

நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதோடு, அதற்கான எமது பூரண ஒத்துழைப்பினையும் வழங்க தயாராக உள்ளளோம் என்றுள்ளது.

 

https://www.virakesari.lk/article/70662

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.