Jump to content

முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரம், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது - பியநந்த தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

a14e56bc38468510a131365450d2a888.jpg

முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச பிக்குகள் மகா சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், அமெரிக்காவின் லொஸ் அஞ்ஜலீஸ் நகர ஸ்ரீ லங்கா பௌத்த விகாரையின் விகாராதிபதியுமான வல்பொல பியநந்த தேரர் தெரிவித்ததாக இன்றைய (08) சகோதர தேசிய வார இதழொன்று இதனைக் கூறியுள்ளது.
 
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தேரர் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கும் வருகை தந்துள்ளார். இதன்போது தேரர் கூறிய கருத்துக்களையே இன்றைய வார இதழ் இவ்வாறு வெளியிட்டுள்ளது.
 
முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்வது ஒரு வியாபாரம். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அடிப்படைவாத குழுக்களுக்கும் வேண்டிய பிரகாரமே செயற்படுகின்றனர். இலங்கையில் இடம்பெறும் சிறிய ஒரு இனக் கலவரமொன்றை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பினால், அந்த அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.
 
அதேபோன்று, அரசியல் மாற்றமொன்று வரும் போது இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும், அவர்களது செயலாளர்களும் அரசியல் புகழிடம் வேண்டி ஐரோப்பிய நாடுகளிடம் செல்கின்றனர். விசேடமாக அமெரிக்க போன்ற நாடுகளிடம் செல்கின்றனர்.
 
முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த திருவிளையாடலை சரியாக முன்னெடுக்கின்றனர். கனடாவின் டொரொன்டோ நகரில் இலங்கை தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் உள்ளனர்.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் புகழிடம் கோரி அந்நாட்டுக்குச் சென்றவர்கள். அரசியல் புகழிடம் கோரி வீசா கோருவதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்கும் அனுபமுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகள் அவர்களிடம் உள்ளனர். பொய்யான தகவல்களை கூறி வீசா கோரும் போது அந்நாட்டிலுள்ள அதிகாரிகள் அனுதாபம் தெரிவித்து வீசா வழங்குகின்றனர்.
 
அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை மக்களின் குள்ளநரித்தனம் பற்றி அறிந்தவர்கள் அல்லர். அந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் எமது நாட்டில் இடம்பெறும் இனவாத கலவர வீடியோக்களைக் காட்டி அமெரிக்க கிரீன் கார்ட் கோரிக்கையை விடுகின்றனர்.
 
இந்த வீடியோக்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் உள்ளங்களில் எமது நாட்டைப் பற்றி கறுப்பு படமொன்றை வரைந்துள்ளனர். ஐரோப்பாவிலுள்ள மக்கள் எமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் பயப்படுகின்றனர். எமது விகாரைக்கு வரும் அமெரிக்கர்கள் என்னிடம் இதனைக் கூறியுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும்.
 
எமது நாட்டு மக்கள் கடந்த தேர்தலில் தமது கடமையை சரியாக செய்துள்ளனர். இப்போது அரசாங்கம் தனது கடமையை செய்வதே அவர்கள் முன் உள்ள பொறுப்பாகும் எனவும் தேரர் தனது நீண்ட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். Dc
Link to comment
Share on other sites

3 minutes ago, colomban said:

அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை மக்களின் குள்ளநரித்தனம் பற்றி அறிந்தவர்கள் அல்லர். அந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் எமது நாட்டில் இடம்பெறும் இனவாத கலவர வீடியோக்களைக் காட்டி அமெரிக்க கிரீன் கார்ட் கோரிக்கையை விடுகின்றனர்.

இந்த தமிழர் சொறிலங்காவிலே இருந்தபடி இனக்கலவரம் செய்தவர்களை வேரோடு அறுத்திருக்கனும் என்டு சொல்லறார் பிக்கர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.