Jump to content

வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியாவை வென்றது


Recommended Posts

நேரம்: 19:00 (IST) 13:30(GMT) December 08, 2019
டாஸ் வென்றது: வெஸ்ட் இண்டீஸ்பவுலிங் தேர்வு
வானிலை: க்ளியர்
ஆட்ட நாயகன்: லென்டில் சிம்மன்ஸ்
தொடரின் நிலை: 3 டீ20ஐ தொடர் லெவல் 1-1
முடிவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றது
அதிகாரிகள்: நடுவர்: அனில் குமார் சவுத்ரி, செட்டிதோடி ஷாம்ஷூதின், நிதின் நரேந்திர மேனன் | ரெஃப்ரி: டேவிட் பூன்

https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-t20i-thiruvananthapuram-inwi12082019190935

 

மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது. 

ELRV9KOX0AUb51C.jpg

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ரோகிர் சர்மா 15 ஓட்டத்தையும், கே.எல்.ராகுல் 11 ஓட்டத்தையும், சிவம் டூப் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டத்தையும், விராட் கோலி 19 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் அய்யர் 10 ஓட்டத்தையும், ஜடேஜா 9 ஓட்டத்தையும், வொஷிங்டன் சுந்தர் டக்கவுட்டுடனும், ஆட்டமிழக்க ரிஷாத் பந்த் 33 ஓட்டத்துடனும், தீபக் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஹேடன் வால்ஷ் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல் மற்றும் கரி பியர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/70692

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி..👍

Link to comment
Share on other sites

மோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா!

இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. 

தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். 

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார். 

புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. 

சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார்.

இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது.

இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர். 

பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர்.

பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70708

ELR1YPIUEAACh5b.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.