Jump to content

சீனாவுக்கு வழங்கப்படும் கடன் உதவி மேலும் குறைக்கப்படும்; உலக வங்கி அறிவிப்பு


Recommended Posts

சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. இதனிடையே ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்; அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார நாடுகளுக்கு உலக வங்கி கடன் வழங்கக்கூடாது என்றும்  வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் என அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை முன்னாள் அதிகாரி டேவிட் மால்பாஸ் தலைமையில் செயல்படும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏற்கெனவே சீனாவுக்கு கடன் அளிப்பது பலமடங்கு குறைந்து விட்டது. வரும் காலத்தில் மேலும் அது குறைக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் வளர்ந்து விட்ட நாடுகளுக்கு கடனை நிறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547104

 

Link to comment
Share on other sites

அமெரிக்கா சீனாவிடம் பில்லியன்கணக்கில் கடன்பெற்றிருப்பதாகச் செய்திகள் வந்தனவே அவை பொய்யா...???😲

Link to comment
Share on other sites

4 minutes ago, Paanch said:

அமெரிக்கா சீனாவிடம் பில்லியன்கணக்கில் கடன்பெற்றிருப்பதாகச் செய்திகள் வந்தனவே அவை பொய்யா...???😲

அமெரிக்காவின் திறைசேரி தான் குறிப்பிட்ட வட்டியுடன் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவேன் என கூறி பணமுறிவுகளை விரைப்பதுண்டு. ( இவ்வாறு பொதுவாக நாடுகள் விற்பதுண்டு, இலங்கையில் அரஜுனன் மகேந்திரன் இதில் மோசடி செய்தார் என்ற குற்றசாட்டு இது சம்பந்தமானது ). 

அவ்வாறான பண முறிவுகளில் அதிகத்தை சீனா கொண்டுள்ளது. தான் அவற்றை வேண்டிய விலையை விட குறைவான விலையில் விற்று அமெரிக்க பொருளாதாரத்தை ஆட வைக்க முடியும் என சிலவேளைகளில் சீன அரசு மிரட்டுவதும் உண்டு.  

உலக வங்கியின் பணத்தை பெற்று அதில் ( வட்டியில் ) சிக்காமல் தன்னை வளர்த்த நாடுகள் சிலவே. அதில் சீன அரசு ஒன்று. 

Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

அமெரிக்காவின் திறைசேரி தான் குறிப்பிட்ட வட்டியுடன் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவேன் என கூறி பணமுறிவுகளை விரைப்பதுண்டு. ( இவ்வாறு பொதுவாக நாடுகள் விற்பதுண்டு, இலங்கையில் அரஜுனன் மகேந்திரன் இதில் மோசடி செய்தார் என்ற குற்றசாட்டு இது சம்பந்தமானது ). 

அவ்வாறான பண முறிவுகளில் அதிகத்தை சீனா கொண்டுள்ளது. தான் அவற்றை வேண்டிய விலையை விட குறைவான விலையில் விற்று அமெரிக்க பொருளாதாரத்தை ஆட வைக்க முடியும் என சிலவேளைகளில் சீன அரசு மிரட்டுவதும் உண்டு.  

உலக வங்கியின் பணத்தை பெற்று அதில் ( வட்டியில் ) சிக்காமல் தன்னை வளர்த்த நாடுகள் சிலவே. அதில் சீன அரசு ஒன்று. 

விளக்கத்திற்கு நன்றிகள்i!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.