Jump to content

பிரிட்டன் தேர்தலில் காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?


Recommended Posts

பிரிட்டன் தேர்தல்: காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு அரசியல் சமன்பாட்டை எவ்வாறு மாற்றும்?

 

வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது.

இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம்.

இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது.

இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்டுமல்ல, வெறுப்பின் சுவரும் எழுப்பப்பட்டது.

இந்தியாவின் இந்த முடிவில் இந்திய சமூகம் மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில், பாகிஸ்தான் சமூகம் மிகுந்த கோபத்தில் உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கட்சிகளும், காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவைகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்திருக்கின்றன.

தெற்காசிய மக்களின் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படும் 48 இடங்களின் தேர்தலில் காஷ்மீர் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிரிட்டன் தேர்தல்: காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு அரசியல் சமன்பாட்டை எவ்வாறு மாற்றும்?

 

 

மதத்தின் அடிப்படையில் பிரிவினை?

பிரிட்டனில் பொதுத் தேர்தல் டிசம்பர் 12 அன்று நடைபெறவுள்ளது. பிராட்போர்டின் மக்கள் தொகையில் 43 சதவீதம் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் மிர்பூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்சிகளின் காஷ்மீர் குறித்த கொள்கைகள், தாங்கள் வாக்களிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்குள்ள வாக்காளர்கள் கூறுகின்றனர்.

இங்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர் ஏன் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது? இது குறித்து சிலரிடம் பேசினோம்.

 

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் ரஷ்பால் சஹி இவ்வாறு கூறுகிறார், "பிராட்ஃபோர்டில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுக்க காரணம், தெற்காசியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதுதான். இந்த பிரச்சனை அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கிறது."

இளைஞர்களிடையே வேலையின்மை, வறுமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை இந்த நகரத்தில் முக்கியமான பிரச்சினைகள். ஆனால் காஷ்மீர் பிரச்சினை தெற்காசிய மக்களுக்கும் மிகவும் முக்கியமானது.

பிராட்போர்டை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தை சந்தித்தோம். இந்த குடும்பத்தின் முதல் தலைமுறை பாகிஸ்தான் காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கிவிட்டது. ஆனால் இன்றும் காஷ்மீர் அவர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருக்கிறது.

மசூத் சாத்கி, அவரது மனைவியும், சமூக சேவகியுமான ருக்சானா சாத்கி, கல்லூரியில் படிக்கும் மகள் ஹானா சாத்கி என குடும்பத்தினர் அனைவருமே காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மீது கோபத்தில் உள்ளனர்.

"இப்போது இங்கு இரண்டு எம்.பி.க்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியில் காஷ்மீரிகள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். தேர்தல்களில் வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு விஷயங்களை தெளிவாக புரிய வைக்கவேண்டும். காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பும் வேட்பாளர்களையே அவர்கள் விரும்புகின்றனர்" என்று மசூத் சாத்கி கூறுகிறார்.

இந்த பிரச்சினை இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புச் சுவரை எழுப்பியுள்ளது.

"நாங்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அனுசரித்துச் செல்கிறோம். நாங்கள் ஒருபோதும் சுவரை உடைக்க முயற்சிக்கவில்லை. ஒதுங்கி இருக்கிறோம், சுவரை உடைக்க முயற்சிப்பதில்லை" என்கிறார் ருக்சானா சாத்கி.

16 வயது நிரம்பிய ஹானா சாத்கிக்கு வாக்களிக்கும் வயது இல்லை என்றாலும், இந்த பிரச்சினையில் அவருக்கும் வலுவான கருத்துக்கள் உள்ளன.

"இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு விவாதம் இருக்கிறது. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல என்று சொன்னாலும், மதமும் நிச்சயமாக ஒரு பங்கை வகிக்கிறது" என்று ஹானா கூறுகிறார்.

பிரிட்டன் தேர்தல்: காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு அரசியல் சமன்பாட்டை எவ்வாறு மாற்றும்?

 

 

இந்திய மக்களின் அணுகுமுறை

பிராட்போர்டில் உள்ள இந்து சமூகத்திற்கும் காஷ்மீர் பிரச்சினை முக்கியமானது.

பிராட்போர்டில் உள்ள ஒரு கோவிலில் மதியம் 12 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது, இதில் பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துக் கொண்டனர்.

ஆர்த்தி முதல் தளத்தில் நடைபெறுகிறது. அலுவலகம், சமையலறை போன்றவை தரைத் தளத்திலும் இயங்குகின்றன.

இந்த கோயிலின் நிர்வாகக் குழுவில் ராகேஷ் சர்மாவும் ஒரு முக்கிய உறுப்பினர்.

1974 ஆம் ஆண்டில், அவர் டெல்லியில் இருந்து இங்கு வந்து குடியேறினார். தங்கள் நகரத்தில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனை என்பதில் சந்தேகமே இல்லை என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள், தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள் 370 வது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது சட்டவிரோதமானது என்று கூறுகிறார்கள். தொழிற்கட்சி முஸ்லிம்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கிறது, இந்தியர்களுக்கு ஆதரவாக இல்லை என்று இந்தியர்கள் நினைக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் மனித உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து தொழிற்கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், கட்சி தனது தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் குறித்து 'மேலும் தலையிடும்' என்ற கொள்கை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறது.

தொழிற்கட்சியின் காஷ்மீர் தொடர்பான இந்த கொள்கை இந்திய இந்துக்களை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறது.

52 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து இங்கு வந்தவர் முகேஷ் சாவ்லா. ஆனால் இந்தியாவுடனான அவரது தொடர்பு இன்னும் வலுவாகவே உள்ளது.

"எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யுமான ஜெர்மி கோர்பின் இந்தியா 370 வது சட்டப் பிரிவை நீக்குவதை எதிர்த்தார், இதனால், இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள். மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம், அதில் நாம் தலையிடக்கூடாது என்று கூறினார். அதனால்தான் இந்தியர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாளர்களாகிவிட்டார்கள்" என்று முகேஷ் சாவ்லா கூறுகிறார்.

 

காஷ்மீர் பிரச்சனையில் கேள்வி

இங்குள்ள தேர்தல்களிலோ அல்லது அரசியலிலோ காஷ்மீர் விவகாரம் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்பதே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் சிலரின் வாதமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிராட்போர்டுக்கு வந்தவர் பூர்வா கண்டேல்வால். இங்கு நடைபெறும் தேர்தலில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படக்கூடாது என்கிறார் அவர்.

"இந்த விஷயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்று நான் நினைக்கிறேன். பிரிட்டனின் அரசாங்கமோ அல்லது இங்குள்ள மக்களோ காஷ்மீர் விஷயத்தில் தலையிடக்கூடாது".

கட்சிகளின் காஷ்மீர் கொள்கையின் அடிப்படையில் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்கள் இந்த பிரச்சனையை மறந்துவிடலாம் என்றும் பூர்வா கண்டேல்வால் நினைக்கிறார்.

"குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கட்சிகளால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அங்கு விரிந்துள்ள பெரிய சந்தையானது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வைக்காது..." என்று சொல்கிறார் மசூத் சாத்கி.

https://www.bbc.com/tamil/global-50703025

Link to comment
Share on other sites

இந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர்

இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

Tamil_News_large_242987520191209054219.jpg

இங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும் பாடல் போரிஸ் ஜான்சனுக்காக வாக்களிக்கவும் என்ற பொருள் படும் பாடல் ஒன்று சமூக வலை தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாது ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபட்ட போரிஸ் ஜான்சன் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி உடன் கைகோர்க்க உறுதி மொழியையும் எடுத்து கொண்டார். பிரதமரின் இந்தி பிரசார பாடல் சமூக வலை தளங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள போதிலும் பிரதமருக்காக பாடல் வெளியிடப்பட்டதா அல்லது யாராவது டப்பிங் செய்து வெளியிடப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட வில்லை.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2429875

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.