Jump to content

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

 

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான  பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும்  மார்ச்  கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரி­வித்தார்.

GL-peris.jpg

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசிய கட்­சியை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உதவி புரிந்த சர்­வ­தேச அமைப்­புக்கள், மேற்­கு­லக நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வித­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணை­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி வகித்த முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும், பாரா­ளு­மன்­றத்­திற்கும் அறி­விக்­காமல் பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு தான்­தோன்­றித்­த­ன­மாக இணக்கம் தெரி­வித்தார்.

ஜெனிவா   மனித உரிமை பேர­வையில்  இலங்கை அர­சாங்கம் பொறுப்பு கூறலை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை கிடை­யாது.  ஏனெனில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் சர்­வ­தே­சத்தில் எமது நாட்டு இறை­யாண்­மை­யினை காட்டிக் கொடுப்­ப­தா­கவே கரு­தப்­படும்.எமது நாட்­டுக்கு முற்­றிலும் மாறுப்­பட்ட வித­மா­கவே பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­றது.

பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  எவ்­வ­கையில் அழுத்­தங்­களை சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து பிர­யோ­கித்­தாலும் அது பய­ன­ளிக்­காது. எந்த உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்தும்  புதிய அர­சாங்கம் தோற்­று­விக்­கப்­ப­ட­வில்லை. என்­பதை அனை­வரும் புரிந்துக் கொள்ளல் அவ­சி­ய­மாகும்.

நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களில் இருந்து அர­சாங்கம் விலகிக் கொள்ளும்  நிலைப்­பாட்­டிலே அர­சாங்கம் உள்­ளது.  மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/70703

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

Link to comment
Share on other sites

இவர் ஒரு படித்த முடடாள். அரசாங்கம் நினைத்தவுடன் எல்லா தீர்மானங்கள்,  உடன்படிக்கைகள்  எல்லாவற்றையும் மீறலாம் எண்டு அரசுக்கு ஆலோசனை கூறுபவர்  இவர்தான். செய்ய முடியாது என்றில்லை. இருந்தாலும் இவர்கள் இதெட்கெல்லாம் பாரிய  விலை  கொடுக்க நேரிடும். உழைப்புக்காக வரும் அரசியல்வாதிகள் உழைத்து விட்டு போகிறார்கள். 

6 minutes ago, ragaa said:

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

சுமந்திரன் ஜி எல் பீரிஸைவிட சிறந்த அறிவாளியா? இல்லை சுமந்திரன் அந்தளவு உலக நாடுகளில் செல்வாக்கு மிக்கவரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பகுடிக்காக சொன்னேன்

Link to comment
Share on other sites

8 minutes ago, ragaa said:

நான் பகுடிக்காக சொன்னேன்

இல்ல  அடிக்கடி எல்லோரும் சம், சும் எண்டு கனக்க எழுதுறார்கள். நான் நினைத்தேன் அவர்கள்தான் இந்த ஈழம் , சமஷடி கிடைக்காம தடை செய்கிறார்கள் எண்டும் அவர்கள் இல்லாவிடடாள் இதெல்லாம் எங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்குமெண்டு. வேற ஒன்னும் இல்லே அண்ணே.

Link to comment
Share on other sites

"" மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்."" 

 

தலைமை  தாங்கும் பிரித்தானியாவும் அதன் ஊடாக அமெரிக்காவும் இந்தியாவும் தான் முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் சிங்களத்தை கொண்டுவர விரும்பினால் மட்டுமே அழுத்தங்களை பிரயோகிப்பார்கள். 

சீனாவும் பாகிஸ்தானும் சிங்களத்திற்கு தம்மாலான உதவிகளை செய்வார்கள். 

Link to comment
Share on other sites

மேற்குலத்தை புறக்கணித்து சீனாவுடன் கைகோர்த்து பயணிக்க சிங்களம் முனைவதாக அதன் புதிய வெளிவிவகார கொள்கை இருக்கின்றது.

கொழும்பின் புதிய நில உருவாக்கம் அதில் சீன முதலீடுகள் என்பன புதுடெல்லி மற்றும் மேற்குலத்தை மறுத்து தம்மால் 'சுதந்திரமாக' பயணிக்க முடியும் என சிங்களம் நம்புவதாக காட்டுகின்றது.
 

Link to comment
Share on other sites

On 12/9/2019 at 1:54 PM, ragaa said:

எல்லாம் எங்கட சுமந்திரனிருக்கிற தைரியத்திலதான் உந்த கதை

சுமந்திரனிருக்க பயமேன்

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் பொறுப்பை ஏற்றுள்ள போர்க்குற்றவாளிகள் தங்கள் இனவழிப்பு வேலைகட்கு சுமந்திரன் கடந்த 10வருடங்களாக உதவியதைப் போலவே தொடர்ந்தும் உதவுவாரா என்று அறிய அவரை தனியே அழைத்து சிலதரம் கதைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.