Jump to content

பௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்


Recommended Posts

நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 

ranil.jpg

எனவே இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும். 

தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/70752

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை

 

4 hours ago, ampanai said:

இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்

ஒம் பேரினவாத பூதத்தை மகா நாய்களை கொண்டு எப்படி ஊதி இன்னும் பத்து தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் எண்டு ஆராய்வது மிக முக்கியம். அப்படி தான் ஒரு நாட்டை நிரந்தரமாக சீரழிக்கலாம். 

உங்களை வைத்து பழம் புடுங்க வெளிக்கிட்ட வர்கள்பாடு ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம்.

எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. 

Link to comment
Share on other sites

On 12/9/2019 at 8:21 PM, ampanai said:

பௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்

அதான் உங்கட கையாள் சுமந்திரன் இருக்காரு தானே!
பிறகென்ன கவலை?

Link to comment
Share on other sites

20 minutes ago, Rajesh said:

அதான் உங்கட கையாள் சுமந்திரன் இருக்காரு தானே!
பிறகென்ன கவலை?

ஐ.தே.கவின் எதிர்காலம் அவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஒரு சந்தியில் நிற்கின்றது. 

அவர்கள், பௌத்த பேரினவாத கொள்கையினை முன்னெடுத்தால் மட்டுமே தாம் வளர முடியும் என எண்ணுகிறார்கள். இல்லாவிட்டால் யாரின் ஆதராவும் இல்லாமல் மொட்டு மீண்டும் வெல்லலாம். 

அதேவேளை, பௌத்தத்தை நிராகரித்து 21ஆம் நூற்றாண்டு சிந்தனையை, உலக ஒழுங்கை ஏற்கவும் மனோபாவத்திற்கு சிங்கள மக்களும் வரவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 1:51 AM, ampanai said:

எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 

 

 இலங்கை பவுத்தத்தின் அடிப்படையே இன மதவாதத்தை கொண்டு  உங்களால் கட்டி எழுப்பப் பட்டது. இப்போ அது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இனி அதற்கு உங்களால் தீனி போட முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் செய்யவும் மாட்டிர்கள். முயன்றால் அது உங்களையே தீர்த்துக் கட்டிவிடும். அதையே இப்போ அனுபவவிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

ஐக்கிய தேசிய கட்சியிலும் நிறைய இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ், முஸ்லீம் வாக்குகளுக்காக அடக்கி வாசிக்கிறார்கள். மத்தபடி சந்தர்ப்பம் கிடைக்கும்போது எடுத்துவிடுவார்கள். அதட்கு சம்மந்தனோ, சுமந்திரனோ தேவை இல்லை.

சிங்கள வாக்குகள் இனி தேவைப்பட்ட்தால் இனவாதத்தை எடுத்து விடுவார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏட்ப அதை கையாளுவார்கள். மத்தபடி இரண்டு பேருமே ஒன்றுதான். 

Link to comment
Share on other sites

'நான் இங்கு எந்தநாளும் இருக்க போவதில்லை’

புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. முன்னோக்கி செல்ல வேண்டும். அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளன. அதற்கமைய ஜனவரி மாதம் முதல் நாங்கள் முன்னோக்கி செல்வோம்.

நான் இங்கு எந்தநாளும் இருக்க போவதில்லை. புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதே எனக்கு தற்போது காணப்படும் பொறுப்பு.

சஜித் பிரேதமதாச உள்ளிட்ட ஏனையவர்கள் நாடாளுமன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நன-இஙக-எநதநளம-இரகக-பவதலல/175-242578

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.