Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..!

wgypt-2-jpg.jpg

வெங்காயம் கட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தொடர் விலை ஏற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர்.

மேலும் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பல்வேறு கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த ஒரு நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் நிலைமையை சமாளிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

30 டன் வெங்காயம் திருச்சிக்கு காந்தி நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்யவும், அவ்வாறு வினியோகம் செய்த பின்னர் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 120 வரை நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 150 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர எகிப்திலிருந்து இறக்குமதி  கொண்டுவரப்பட்ட வெங்காயம் பெரிய அளவிலும், சற்று கருமையாகவும் இருப்பதால் வெங்காயம் வாங்க தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும் விலை அதிகமாக இருந்தாலும் "நாட்டு" வெங்காயம் தான் வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://tamil.asianetnews.com/life-style/people-bother-to-but-onion-which-was-imported-from-egypt-q28zw1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் மொரோக்கோ சிவப்பு வெங்காயம் கிலோ .25p  அதுசரி இவ்வளவு வெங்காயத்தை முஸ்லீம் நாடுகளில் இருந்து இறக்கி சமாளிக்கினம் தானே இந்த பிஜேபி கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து வெங்காயம் காரம் தூக்கலாக இருக்கும்... இதயத்துக்கு நல்லது...!! அமைச்சரின் அடுத்த வெங்காய கண்டுபிடிப்பு..!!

sellur-raju-jpg_1200x630xt.jpg

வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வர அரசு அனைத்து நட்வடிக்கை எடுத்துவருகிறது என்றும் விலை அதிகரிக்கும் பட்சத்தில் நகரும் கடைகள் மூலம் வெங்காயம் விற்க படும் என  கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுர்ராஜு தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர்,  எகிப்து வெங்காயம் தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. ஒரிருநாட்களில் தமிழகத்திற்கு  வந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

அது அடக்க விலையில் விற்க படுமென  கூறினார்.  கடந்த ஒருமாத த்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம்  கிலோ நாற்பது ரூபாய்க்கு  விற்பனை செய்தோம் என்றும் மேலும் வெங்காய வரத்து வந்ததும்  குறைவான விலையில் விற்பனை செய்வோம் என்றார். அத்துடன்  எகிப்திலிருந்து வரும்  வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்,  இது இதயத்திற்கு மிகவும் நல்லது எனவும் அமைச்சர்  செல்லூர் ராஜூ அப்போது தெரிவித்தார்.

வெங்காயம் விலை குறித்து  எதிரகட்சி தலைவரின்  விமர்சனம் முற்றிலும் தவறானது . அரசு நிர்வாகம் முடுக்கிவிடபட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது  ,இதே திமுக ஆட்சி காலத்தில்  விலை ஏறிய போது அவர்கள் என்ன செய்தார்கள்.?   எந்த பொருட்கள் விலையேறினாலும் அந்த தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தை  ரேஷன் கடைகளில் விற்கும் நடவடிக்கை தற்போது  அரசு எடுத்துவருகிறது .  வருங்காலத்தில் வெங்காயத்தை பாதுகாக்க கிடங்குகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

https://tamil.asianetnews.com/politics/egypt-onion-heavy-spicy-and-also-good-thing-s-for-hart-cooperative-minister-selur-raju-q2e38s

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.