Jump to content

கடவுசீட்டு பெற பொட்டு தடையில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுசீட்டு பெற பொட்டு தடையில்லை

கடவுசீட்டு பெற பொட்டு தடையில்லை

புதிய கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்திருக்கக் கூடாது என எந்த தடையும் விதிக்கப்படவில்லையெனவும் பொட்டு வைத்தவாறு புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான உதவிக் கட்டுப்பாட்டாளர் (சட்டம்) பி.ஜீ.ஜீ. மிலிந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புதிய கடவுச்சீட்டுகளுக்காக புகைப்படங்களை எடுக்கும் போது பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்தவாறு படம் எடுப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும் நான் அது தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்து சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் அந்த செய்திகளில் உண்மையில்லை. அவ்வாறாக பொட்டுடன் புகைப்படம் எடுப்பதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் கடவுச்சீட்டுக்காக புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைப்­பா­னது புதிய கட­வுச்­சீட்டுக்கான புகைப்படம் தொடர்பான சட்டதிட்டங்களை அறிவித்துள்ளது. அதற்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். அதன்படி கட­வுச்­சீட்­டி­லுள்ள படத்தில் முகத்தில் எந்­த­வி­த­மான செயற்கை அடை­யா­ளங்­களும் இருக்க கூடாது. அவ்வாறு செயற்கை அடையாளங்கள் புகைப்படங்களில் இருக்கும் போது அவர்கள் அவ்வாறான அடையாளம் இல்லாது வெளிநாடுகளுக்கு செல்லும் போது சில விமான நிலையங்களில் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது. உதாரணத்திற்கு சில விமான நிலையங்களில் கடவுச்சீட்டிலுள்ள புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு தானியங்கி கேட்டுகள் உள்ளன. முகத்தில் மாற்றங்கள் காணப்படும் போது அவை திறக்கப்படாது இருக்கலாம். இவ்வாறான அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையிலேயே முகங்களில் செயற்கை அடையாளங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.இதனைவிடுத்து நெற்றியில் பொட்டு அணியக் கூடாது என எந்த தடையும் விதிக்கப்படவில்லை. என தெரிவித்துள்ளார். -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/கடவுசீட்டு-பெற-பொட்டு-தட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.