Jump to content

இலங்கையில் தென்படும் சூரிய கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம்...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தென்படும் சூரிய கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம்...?

இலங்கையில் இம்மாதம் 26ஆம் திகதி நெருப்பு வளையச் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் முழுமையாகவும் கிளிநொச்சிக்கு தெற்குப் பக்கமாக வாழ்பவர்கள் அதன் ஒரு பகுதியைப் பார்வையிடலாம் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

-2VyaV9K.jpg

இம்மாதம் 26ஆம் திகதி சவூதி அரேபியாவின் தம்மத்தில் முதலில் தென்படும். காலை 8 மணியளவில் தோன்றி, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்னிந்தியா முழுவதும் பயணித்து வடக்கு இலங்கை வழியாகக் கடந்து செல்கிறது. இந்தக் கிரகணம் நிகழும்போது, சந்திரன் பூமியிலிருந்து சுமார் 400,000 கி.மீ தூரத்தில் இருக்கும். மணிக்கு 3,600 கி.மீ வேகத்தில் நகரும்.

nVJtouGKApDhLUcLsQjH8N-650-80.jpg

குறித்த கிரகணத்தின் மையக் கோடு மன்னார் முதல் வக்கரை வரை இயங்குகிறது. இலங்கைக்கு மன்னார் பகுதிக்குள்ளால் நுழையும் கிரகணம் யாழ்ப்பாணத்தில் காலை 9.34 மணிக்குத் தெரியும். இது நான்கு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். 9.38 மணிக்கு முடிவடைந்துவிடும்.

கடந்த 2010 ஜனவரி 15 இல் கடந்த சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் சுமார் 10 நிமிடங்கள் காணப்பட்டது. ஆனால் இந்த முறை இது 4 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். சவூதி அரேபியாவில் தொடங்கும் இந்த வருடாந்த கிரகணம் வடக்கு இலங்கை மீதும், மீண்டும் இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தோனேசியாவுக்கும் சென்று மதியம் 12.20 மணிக்கு முடிவடைகிறது.

கிளிநொச்சியில் இருப்பவர்களிற்கு கிரகணத்தின் ஒரு பகுதியையே பார்க்க முடியும். அநுராதபுரத்தில் வசிப்பவர்கள் சூரியனின் 87% சந்திரனால் மூடப்பட்டிருப்பதைக் காண்பார்கள். கொழும்பில் உள்ளவர்கள் சூரியனின் 84% மூடியிருப்பதைக் காண்பார்கள்.

அத்துடன், சவுதி அரேபியா, கட்டார், இந்தியா,சுமாத்ரா, போர்னியோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தென்படும். ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் உள்ள ஸ்கைவொட்சர்ஸ் (Skywatchers)  ஒரு பகுதி கிரகணத்தைக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/70779

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் இருந்து சூரிய கிரகணத்தை பார்க்கலாம்..!

26-sun.jpg

இலங்கையில் 10 வருடங்களின் பின்னர் சூரிய கிரணத்தை நேரில் காணும் வாய்ப்பு இம்மாதம் 26ம் திகதி பார்க்க முடியும் என ஆதர் சி.கிளாக் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது

வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். மன்னாருக்கு மேல்திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடியும்.

இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை முதலான மாவட்டங்களுக்கு இந்த சூரிய கிரகம் முழமையாக தென்படக்கூடும் என  உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும். குறிப்பாக, வவுனியாவுக்கு கீழ்திசையில் கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் காலி முதலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலும் தென்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.முழுமையான சூரிய கிரகணம் காலை 8.09க்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 அளவில் நிறைவடையும். இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.

விசேட கண்ணாடியோ அல்லது பாதுகாப்பு உபகரணத்தையோ பயன்படுத்துவது சிறந்ததாகும் விசேடமான கண்ணாடி இல்லாவிட்டால், இரும்பு பொருத்து வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியை பயன்படுத்த முடியம். அந்தக் கண்ணாடியிலும், 12 மற்றும் 14 ஆம் இலக்க கண்ணாடிகளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.

சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/14883

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.