Jump to content

இனப்படுகொலை வழக்கு; ஆன் சான் சூகி நேரில் ஆஜர்


ampanai

Recommended Posts

இனப்படுகொலை வழக்கு; ஆன் சான் சூகி நேரில் ஆஜர்

 

தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார்.

மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது.

ஆப்பிரிக்க நாடான காம்பியா இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மியான்மர் சார்பில் வாதிட அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகி உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சூகி மனித உரிமைக்காக போராடியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ரோஹிங்கா முஸ்லிம்கள் விவகாரத்தில் அவர் அமைதி காப்பதுடன் அதற்கு ஆதரவாக இருப்பதால் சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த வழக்கில் காம்பியா தரப்பில் வாதங்கள் துவங்கியுள்ளன. சூகி இன்று தன் வாதத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2431297

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.