Jump to content

பாகிஸ்தானில் 10 வருடங்களின் பின் முதலாவது டெஸ்ட் போட்டி


Recommended Posts

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.

cricket_pakistan-_srilanka.jpg

பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது.

இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். 

தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, டில்ருவன் பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த, லஹிரு குமார.

12ஆவது வீரர்: லக்ஷான் சந்தகேன்.

பாகிஸ்தான் அணியில் இளம் ஆரம்ப வீரர் அபிட் அலி, வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் ஷான் மசூத், அபிட் அலி, பாபர் அஸாம், அசாத் ஷவிக், ஹரிஸ் சொஹெய்ல், முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் அபாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, உஸ்மான் கான் ஷின்வாரி. 12ஆவது வீரர்: இமாம் உல் ஹக் ஆகிய வீரர்கள் துடுப்பாட்ட வரிசைகளில் காணப்படுகின்றனர்.

அத்தோடு இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவிற்கு எவ்வித விக்கெட் இழப்பின்றி  59 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70839

Link to comment
Share on other sites

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 202/5 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 59, ஒஷாட பெர்ணான்டோ 40, தனஞ்சய டி சில்வா ஆ.இ 38, அஞ்சலோ மத்தியூஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/51, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37, உஸ்மான் கான் ஷின்வாரி 1/47, மொஹமட் அப்பாஸ் 1/50)

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்கெதிரான-முதலாவது-டெஸ்டில்-முன்னிலையில்-பாகிஸ்தான்/44-242355

Link to comment
Share on other sites

வெற்றிதோல்வியின்றி முடிவுற்ற இலங்கை - பாகிஸ்தான்  முதலாவது டெஸ்ட்  போட்டி

(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்தது.

20191215113035_193303.jpg

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பத்தரை வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் தனஞ்சய டி சில்வா, பாகிஸ்தானின் அறிமுக வீரர் அபிட் அலி, பாபர் அஸாம் ஆகியோர் குவித்த சதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

20191215111428_272280.jpg

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் டெஸ்ட் கிரிக்pகெட் போட்டியிலும் அறிமுக வீரராக சதங்கள் குவித்த முதலாமவர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் அபிட் அலி உரித்தானமை மற்றொரு விசேட அம்சமாகும்.

துபாய் விளையாட்டரங்கில் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அபிட் அலி 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மேலும், நியூஸிலாந்துக்கு எதிராக டனேடின் விளையாட்டரங்கில் 2009இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உமர் அகமால் அறிமுக வீரராக சதத்தைப் பூர்த்தி செய்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் பாகிஸ்தானியர் ஒருவர்  அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா சதம் குவித்த சொற்ப நேரத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனஞ்சய டி சில்வா மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 166 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். டில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் தனஞ்சயவுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இவர்களைவிட திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்தவீச்சில் ஷஹின் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது தனது முதலாவது விக்கெட்டை (ஷான் மசூத் 0) இழந்தது. எனினும் அபிட் அலியும் அணித் தலைவர் அஸார் அலியும் இரண்டாவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிரந்து பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர். 

அஸார் அலி 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் அபிட் அலியும் பாபர் அஸாமும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதங்களைக் குவித்ததுடன் இரண்டாவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவினர்.

அபிட் அலி 200 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள் அடங்கலாக 108 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 122 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்ட்றிகள் அடங்கலாக 102 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பாபர் அஸாம் சதம் குவித்த சொற்ப நேரத்தில் மத்தியஸ்தர்களால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

20191215100613_988962.jpg

பிண்டி விளையாட்டரங்கில் 15 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மொத்தமாக 166 ஓவர்களே வீசப்பட்டன.

முதலாம் நாளன்று 68.1 ஓவர்கள் வீசப்பட்டதுடன் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பு 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாளன்று 18.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. அன்றைய தினம் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களாக இருந்தது.

தொடரந்து மூன்றாம் நாளன்று 5.2 ஓவர்களே விளையாடப்பட்டதுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

வெள்ளியன்று மாலையில் பெய்த கடும் மழை காரணமாக நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை ஒரு பந்துதானும் வீசப்படாமல் போட்டி முழுமையாகக் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவின் தாயாரின் மறைவையொட்டி, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் இலங்கை வீரர்கள் கறுப்புப்பட்டி அணிந்தவாறு இன்று விளையாடினர்.

https://www.virakesari.lk/article/71106

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.