Jump to content

வேட்டி, சேலையுடன் நோபல் பரிசு பெற்ற தம்பதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
46.jpg
 

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்து கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். மேலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற மற்றொரு வெற்றியாளரும், அபிஜித் விநாயக் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்துகொண்டு தனது பரிசைப் பெற்றுக் கொண்டார்.

1576046116355-300x211.jpgமேலும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு நேர்காணல் ஒன்றில் பேசிய அபிஜித் , “இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்ட் ஃபவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஓஃப் டெக்னோலஜியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pagetamil.com/93258/

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

சேலை அணிந்துகொண்டு தனது பரிசைப் பெற்றுக் கொண்டார்.

1576046116355-300x211.jpg

சேலை அணிந்து நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டாலும் சிறீலங்கா இவரை அழைத்து வாழ்த்திப் பாராட்ட முடியாது பெண்மணி பொட்டுவைத்துள்ளார். 🤔

Link to comment
Share on other sites

" இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். மேலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற மற்றொரு வெற்றியாளரும், அபிஜித் விநாயக் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்துகொண்டு தனது பரிசைப் பெற்றுக் கொண்டார். "

எமது புலம்பெயர் வாழ் சந்ததிக்கும் தங்கள் கலாச்சாரம், உடை, மொழி மீது உள்ள காதலை புதுப்பிக்க இவ்வாறானவர்களின் முன்னுதாரணம் உதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ampanai said:

" இந்நிலையில் சுவீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். மேலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற மற்றொரு வெற்றியாளரும், அபிஜித் விநாயக் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூஃப்லோ சேலை அணிந்துகொண்டு தனது பரிசைப் பெற்றுக் கொண்டார். "

எமது புலம்பெயர் வாழ் சந்ததிக்கும் தங்கள் கலாச்சாரம், உடை, மொழி மீது உள்ள காதலை புதுப்பிக்க இவ்வாறானவர்களின் முன்னுதாரணம் உதவும்

புலம்பெயர் பிள்ளைகளை நினைக்கும்போது எதிர்காலம் பயங்கரமானதாய் உள்ளது எந்த ஒரு மாற்று  தலைமையும் இன்றி புலம்பெயர் சமூகம் எங்கள்  கண்முன்னே மேட்குலகின் பிளாக் ஹோல் போன்ற சமூக பழக்க வழக்கம்களில் விழுந்து காணாமல் போக போகின்றனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழங்கப்பட்டது பொருளாதாரதிற்கான நோபல் நினைவு பரிசு. இது நோபல் பரிசு அல்ல. நோபல் பரிசு என்பது மறைந்த அல்பிரட் நோபல் அவர்கள் 1895 இல் தனது உயிலில் எழுதி வைத்தபடி 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும் பரிசுகள்.

பொருளாதாரத்துக்கு தனது பரிசை வழங்கும்படி நோபல் தனது உயிலில் எங்கும்  குறிப்பிடவில்லை. சமாதானம், இலக்கியம், இரசாயனம், பெளதிகம், விஞ்ஞானம் அல்லது மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளுக்குமே நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று அவரது உயிலில் கூறப்பட்டிருந்தது. 

பொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு என்பது சுவீடன் நாட்டின் தேசிய  வங்கியால் நோபல் நிறுவனத்தின் அனுசரணையுடன் பிற்காலத்தில் (1968) தான் உருவாக்கப்பட்டது. இதற்கான செலவையும் பரிசு பணத்தையும்  சுவீடன் நாட்டின் தேசிய வங்கி  நோபல் நிறுவனத்திற்கு வருடாவருடம் செலுத்தி வருகிறது.

இவ்வாண்டு பொருளாதரத்திற்கான நோபல் நினைவு பரிசை வெல்பவர்களில் ஒருவர் திரு அபிஜித் பனர்ஜியின் துணைவியார் எஸ்தர் டூப்லோ பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டு பின் அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.