Jump to content

354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக மாற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

e0c83c38a7279780a2f426012aa99ae3-720x450.jpg

354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக மாற்றம்!

நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் இந்த வேலைத்திட்டம் நேற்று (புதன்கிழமை) வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ரயில் நிலையங்கள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அபிவிருத்திச் செய்யப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேபோன்ற ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த சி.பி.ரத்நாயக்க, ரயில் சேவை மூலம் மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

http://athavannews.com/ரயில்-நிலையங்களில்-ஏற்பட/

Link to comment
Share on other sites

ஏற்கனவே பசுமை தானே

பாதி லைட் எரியாது.

காவாசி லைட் மின்னி மின்னி எரியும்.

Link to comment
Share on other sites

"பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்." 

பசுமை என்றால் மாசு இல்லாத இரயில் நிலையங்கள் என்று பார்த்தால் இந்த டீசல் என்ஜின்களுக்கு என்ன நடக்கும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.