Jump to content

வடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்களவருக்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்! அவசர அறிவிப்பு


Recommended Posts

தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன் என்று லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.

Link to comment
Share on other sites

நியாமான உணர்வுகள்!

ஆனால், வெளிப்படுத்தும் ஆதங்கத்துக்கு பொருத்தமற்ற முடிவுகள்.

தற்போதைய வரிக்குறைப்புகள், மண்ணை எடுத்துச் செல்வதற்கான அனுமதி நீக்கம் போன்றவற்றை 90% ஆனவை பிரபல்ய கடத்தல் கொலைகாரனும் போர்க்குற்றவாளியுமான கோட்டாபய தான் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து கட்டியெழுப்பும் பல மாடிக்கட்டிடங்களுக்கு உதவும் வகையிலேயே செய்யப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் மண், மரக் கடத்தலின் பின்புலத்தில் பெரும்பாலும்  போலீஸ் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளாக உள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளே உள்ளனர்.

வட மாகாணசபையால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் கடத்தல் கும்பலும் மீண்டும் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

அன்பின் சுதன் , உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. உங்களைப்போலவே நானும் இவ்வளவுகாலமும் எமது மக்களுக்காக செய்தவை வீண் போகின்றதே என்கின்ற ஆதங்கத்துடன் வாழ்கின்றவன். நானும் பலவருடம் வேலை செய்து பெற்ற அனுபவம் உங்கள் கருத்துக்களில் பிரதிபலிக்கின்றது. என்றாலும் அங்கு ஒரு பகுதி மக்கள் இன்னும் உணர்வுடன், அந்தத் உணர்வுகளை வெளிக்கொணரமுடியாமல் வாழ்கிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் சொல்வதானால் Powerless. எனவே இன்றைய கவலையான  நிலைமை தொடரம் என்று மட்டும் சொல்லலாம். உங்களுக்கு இந்த தருணத்தில் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யமுடியாமைக்கு வருந்துகிறேன்  😢
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.