Jump to content

எங்கம்மா மேலேயா கைய வச்ச...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கம்மா மேலேயா கைய வச்ச...?

பெய்ஜிங்: சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை கோபம் கொண்ட சிறுவன் காலால் எட்டி உதைத்து ஆவேசமாக திட்டி தனது கோபத்தை காட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது சிறுவனை கையில் பிடித்தவாறு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறிய பெண் தனது மகனுடன் கீழே விழுந்தார். தனது தாய்க்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு கோபம் கொண்ட சிறுவன் அந்த காரை இரு முறை எட்டி உதைத்தார்.
 
பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த அவரிடம் சிறுவன் ஆவேசமாக கத்தினான். பின்னர் மீண்டும் தாய்க்கு ஏதேனும் ஆகிவிட்டதா என அழுது கொண்டே பார்க்கிறான். இதையடுத்து அந்த பெண்ணையும் சிறுவனையும் அந்த நபர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
 
இந்த வீடியோ மூலம் சிறுவன் தனது தாய் மீது வைத்துள்ள பாசம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
 

 

ஒன் இந்தியா

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.