Jump to content

1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்


Recommended Posts

(நா.தனுஜா)

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கும், அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. 

அவ்வாறு ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக அனைத்து சிறார்களுக்குமான கல்வியை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

அதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு மும்மொழிகளும் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அதற்கேற்ற அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும், எதிர்வரும் இருவருட காலப்பகுதிக்குள் இத்தகைய 20 பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை விரைந்து செய்றபடுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70943

Link to comment
Share on other sites

Z-Score முறையில் விரைவில் மாற்றம்

Z-Score அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக  பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, மாவட்ட ரீதியிலான முறை பயன்படுத்தப்படுகின்றது.

புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/Z-Score-மறயல-வரவல-மறறம/150-242382

Link to comment
Share on other sites

2020ஆம் கல்வியாண்டில் 83 ஆயிரம் மாணவர்கள் பல்கலையில் உள்ளீர்ப்பு உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன

 

2020ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரம் பேரால் அதிகரிப்பது தொடர்பில் உயர் கல்வி அமைச்சு, அமைச்சரவையில் விரிவாக பேச்சு நடத்திவருவதாகத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இளையோருக்கு இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல் வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறினார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20140&ctype=news

Link to comment
Share on other sites

"பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரம் பேரால் அதிகரிப்பது தொடர்பில் உயர் கல்வி அமைச்சு, அமைச்சரவையில் விரிவாக பேச்சு நடத்திவருவதாகத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்."

நல்ல விடயம். ஆனால், ஏற்கனவே பல பட்டதாரிகள் வேலையற்று இருப்பதால், தொழில்முறை கல்விவாய்ப்புக்கள் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்பொழுது, அவை சம்பந்தப்பட்ட கல்விவாய்ப்புக்களும் தாமாகேவே அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.