Jump to content

பிரிட்டனில் ஆட்சியை தக்க வைக்கும் போரிஸ் : ராஜினாமா செய்த ஜெரமி கார்பின்


ampanai

Recommended Posts

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், கடும் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை.இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

அதன்படி, நேற்று 650 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கிய எதிர்க்கட்சியான ஜெரமி கார்பினின் தொழிலாளர் கட்சி 191 இடங்களை கைப்பற்றும் என வாஷிங்டன் போஸ்ட் கருத்து தெரிவித்திருந்தது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் அரசுக்கு 322 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகணிப்புக்களின்படி பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து தேர்தலில் தனது தொழிலாளர் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெரமி கார்பின் அறிவித்துள்ளார். போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளதால் 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம், பார்லி.,யில் மீண்டும் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020, ஜன., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேற வழி பிறந்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2433050

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் - பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி

பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33  ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு  338 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பிரதமரின் கட்சி 368 ஆசனங்கள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தொழில்கட்சிக்கு 200 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

1572383274395.jpg

இந்த வெற்றி பிரெக்சிட்டை சாத்தியமானதாக்குவதற்கான  ஆணையை தனக்கு வழங்கும் என பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் தலைவர் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/70969

 

Link to comment
Share on other sites

இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 பேர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி

157623403292684.jpg

பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றிபெற்றுள்ளார்.

சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றிபெற்றுள்ளனர். 

https://www.polimernews.com/dnews/92684/இந்திய-வம்சாவளியை-சேர்ந்த-14பேர்-பிரிட்டன்-தேர்தலில்வெற்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.